11-04-2003, 01:12 AM
கிழவன் நான் வழமையான தாமதத்துடன் இன்றுதான் ஒருவித அசண்டையோட எச்சில் போர்வை பார்க்க உக்காந்தன். படத்தின் முதல் காட்சியில் கதவின் ஊடு உள்வரும் ஒளியில் நடந்துவரும் காட்சியின் நேர்த்தியான ஒளி அமைப்பு, காமராக்கோணம் என்பன சட்டென்று நிமிர்ந்து உக்கார வைச்சுது.
பத்தரை நிமிடங்களுக்குள் அகதித் தமிழ் இளைஞரது வாழ்வை இதைவிட யதார்த்தமாக வேறு எவராலும் வெளிக் கொண்டு வரமுடியுமோ என்பது சந்தேகம்தான்.
படத்தில் அனைத்து அம்சங்களையும்விட கமராதான் அதிகம் கதை பேசியது. காட்டில் வெட்டிப்போடப்பட்ட மரத்துண்டுகளை நோக்கி கதையின் நாயகன் நடந்துபோய் மரக்குற்றியில் அமரும் அந்த ஒரு சில நொடிப்பொழுதே வரும் காட்சியும், படத்தின் இறுதியில் அவன் சென்றுமறையும் காட்சியுமே போதும் காட்சியமைப்பின் நேர்த்திக்கு. உட்புறப் படப்பிடிப்பில் பாவிக்கப்பட்ட அளவான ஒளியமைப்பு நல்லதொரு கமராக்கலைஞரின் திறமைக்குச் சான்று. ஒரு சில இடங்களில் திடீரென மாறும் ஒளியின் அளவு கவனிக்கப்பட்டுச் சீர் செய்திருந்தால் இன்னும் மெருகேறியிருக்கும். பாலுமகேந்திரா, சிறீராம் போன்றவையோட ஒப்பிட்டுப் பார்க்குமளவுக்குச் சில காட்சிகள் மனதைவிட்டு அகலாதிருந்தன. கமராவுக்கு ஒரு சபாஸ்.
இயல்பாகவே ஒரு சோகம் இழையோடும் அந்த முகம், உருவ அமைப்பு எல்லாமாச் சேர்ந்து அப்படியே ஒரு அப்பாவி அகதியை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அந்தக் கதாபாத்திரத் தேர்வு சுப்பர். தொலைபேசியில் பேசேக்கை, லிப்ரில் போகேக்கை இப்படி ஒருசில காட்சியளிலை கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை இயல்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். நடிப்பு என்பதைவிட அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட கதையின் நாயகன் சரியான வாய்ப்புக்கள் கிடைத்தால் நல்லதொரு நடிகராக வருவார் என்பது தெரிகிறது. பாத்திரத்திற்கேற்ற நபரைத்தேடி, அவரது முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்த திறமை நெறியாள்கைக்கு முத்தாய்ப்பு.
என்ரை இந்தப் பெட்டியின்ரை பிழையோ இல்லை ஒலிச் சேர்க்கையின் நேர்த்தியின்மையோ தெரியவில்லை ஒலி சற்று நெருடலாக இருந்தது.
ஒருசில நிமிடங்களுக்குள்ளேயே நீண்டதொரு கதையைச் சொல்லிய நெறியாள்கைக்கும், கமராவுக்கும் வசனம் இன்னமும் கொஞ்சம் கைகொடுத்திருக்கலாம். குறுகிய நேரத்தில் சொல்லப்படும் ஒரு விடயத்திற்கு வசனம் நெற்றியடியாக பட்டென்று தெறித்தாற்போல இருக்கவேணும். சில நொடிப்பொழுதே வரும் விளம்பரங்களில் வரும் வசனங்களை உற்றுக் கவனித்தால் புரியும். பட்டென்று உச்சிவரை ஊடுருவும் அந்த வார்த்தைகளின் நேர்த்தி.
கிட்டத்தட்ட பத்துநிமிடங்களே ஓடும் படத்தின் எழுத்தோட்டத்திற்கு ஒரு நிமிடத்திற்குமேல் ஒதுக்கியிருப்பது சற்று அதிகமாகத் தோன்றுகிறது.
இப்படியான ஒருசில குறைகளைத் தவிர்த்து, மொத்தத்தில் நல்லதொரு சிறுகதையை படித்துவிட்ட மனச்சுமையைத் தந்தது படம். ஈழத்தப் படைப்பாளியின் பெயர் உலகளவில் பேசப்படும் காலம் கண்முன் தெரிகிறது.
தம்பி அஜீவன் ஒரு சில குறையளைப் பெரிதாச்சுட்டிக் காட்டிப்போட்டன் என்று மனம் வருந்தவேண்டாம். நல்லதொரு படைப்பாளியிடமிருந்து இன்னமும் அதிசிறந்த படைப்புக்கள் வரவேண்டுமென்ற ஆவலிலைதான் சொன்னனான்.
பத்தரை நிமிடங்களுக்குள் அகதித் தமிழ் இளைஞரது வாழ்வை இதைவிட யதார்த்தமாக வேறு எவராலும் வெளிக் கொண்டு வரமுடியுமோ என்பது சந்தேகம்தான்.
படத்தில் அனைத்து அம்சங்களையும்விட கமராதான் அதிகம் கதை பேசியது. காட்டில் வெட்டிப்போடப்பட்ட மரத்துண்டுகளை நோக்கி கதையின் நாயகன் நடந்துபோய் மரக்குற்றியில் அமரும் அந்த ஒரு சில நொடிப்பொழுதே வரும் காட்சியும், படத்தின் இறுதியில் அவன் சென்றுமறையும் காட்சியுமே போதும் காட்சியமைப்பின் நேர்த்திக்கு. உட்புறப் படப்பிடிப்பில் பாவிக்கப்பட்ட அளவான ஒளியமைப்பு நல்லதொரு கமராக்கலைஞரின் திறமைக்குச் சான்று. ஒரு சில இடங்களில் திடீரென மாறும் ஒளியின் அளவு கவனிக்கப்பட்டுச் சீர் செய்திருந்தால் இன்னும் மெருகேறியிருக்கும். பாலுமகேந்திரா, சிறீராம் போன்றவையோட ஒப்பிட்டுப் பார்க்குமளவுக்குச் சில காட்சிகள் மனதைவிட்டு அகலாதிருந்தன. கமராவுக்கு ஒரு சபாஸ்.
இயல்பாகவே ஒரு சோகம் இழையோடும் அந்த முகம், உருவ அமைப்பு எல்லாமாச் சேர்ந்து அப்படியே ஒரு அப்பாவி அகதியை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அந்தக் கதாபாத்திரத் தேர்வு சுப்பர். தொலைபேசியில் பேசேக்கை, லிப்ரில் போகேக்கை இப்படி ஒருசில காட்சியளிலை கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை இயல்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். நடிப்பு என்பதைவிட அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட கதையின் நாயகன் சரியான வாய்ப்புக்கள் கிடைத்தால் நல்லதொரு நடிகராக வருவார் என்பது தெரிகிறது. பாத்திரத்திற்கேற்ற நபரைத்தேடி, அவரது முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்த திறமை நெறியாள்கைக்கு முத்தாய்ப்பு.
என்ரை இந்தப் பெட்டியின்ரை பிழையோ இல்லை ஒலிச் சேர்க்கையின் நேர்த்தியின்மையோ தெரியவில்லை ஒலி சற்று நெருடலாக இருந்தது.
ஒருசில நிமிடங்களுக்குள்ளேயே நீண்டதொரு கதையைச் சொல்லிய நெறியாள்கைக்கும், கமராவுக்கும் வசனம் இன்னமும் கொஞ்சம் கைகொடுத்திருக்கலாம். குறுகிய நேரத்தில் சொல்லப்படும் ஒரு விடயத்திற்கு வசனம் நெற்றியடியாக பட்டென்று தெறித்தாற்போல இருக்கவேணும். சில நொடிப்பொழுதே வரும் விளம்பரங்களில் வரும் வசனங்களை உற்றுக் கவனித்தால் புரியும். பட்டென்று உச்சிவரை ஊடுருவும் அந்த வார்த்தைகளின் நேர்த்தி.
கிட்டத்தட்ட பத்துநிமிடங்களே ஓடும் படத்தின் எழுத்தோட்டத்திற்கு ஒரு நிமிடத்திற்குமேல் ஒதுக்கியிருப்பது சற்று அதிகமாகத் தோன்றுகிறது.
இப்படியான ஒருசில குறைகளைத் தவிர்த்து, மொத்தத்தில் நல்லதொரு சிறுகதையை படித்துவிட்ட மனச்சுமையைத் தந்தது படம். ஈழத்தப் படைப்பாளியின் பெயர் உலகளவில் பேசப்படும் காலம் கண்முன் தெரிகிறது.
தம்பி அஜீவன் ஒரு சில குறையளைப் பெரிதாச்சுட்டிக் காட்டிப்போட்டன் என்று மனம் வருந்தவேண்டாம். நல்லதொரு படைப்பாளியிடமிருந்து இன்னமும் அதிசிறந்த படைப்புக்கள் வரவேண்டுமென்ற ஆவலிலைதான் சொன்னனான்.

