09-03-2005, 09:40 AM
நன்றி முகத்தார்,இப்ப தான் முந்தி எழுதினதுகள வாசிச்சன்,
உந்த கருத்தாடல்களுக்க கன பேர் தாங்களும் குழம்பி மற்றவையும் குழப்பி இருக்கினம் போல.எப்பவுமே கருத்துத் தெளிவும் நடைமுறை அனுபவமும் வேணும் ,திருமணம் தாம்பத்திய உறவைப் பற்றிக் கதைக்க.அது இல்லாதவர்கள் வெறும் கற்பனையிலேயே இதுகளப் பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது, கிருபன் சொன்ன மாதிரி இந்தக் கற்பனைகள் நடமுறை வாழ்க்கையில் சிக்கல்களையும்,உறவு முறைகளில் குழப்பங்களையுமே தரும்.
1)இங்கே முதலாவது பிரச்சனை,விவாகரத்து என்னும் சட்டவியல் நடைமுறை எமக்கு அவசியமா என்பதே?
புலத்திலும் சரி ,ஊரிலும் சரி இது ஒரு சட்டவியல் நடைமுறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆகவே இந்தக் கேள்வி அர்த்தமற்றது,ஏனெனில் சட்டவியல் நடைமுறையாக இருக்கின்ற ஒன்றை இல்லாது செய்ய முடியாது,அது இருப்பதற்கான காரணங்கள் அந்தச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாலேயே அது சட்டமாக இயற்றப் பட்டது,யாரோ தேசவழமை எண்டெல்லாம் கதை அளந்திருந்திச்சினம்,தேசவழமைச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக மட்டுமே பாவிக்கப் படக் கூடியது.விவாகரத்து சம்பந்தமாக அதில் எதுவும் இல்லை.தமிழீழச் சட்டக் கோவையிலும் இவை இடம்பெற்றுள்ளன,ஆனால் அதன் விபரங்களைத் தெரிந்தவர்கள் கூறினால் நன்று.
2)இரண்டாவது பிரச்சனை தனி மனித நலனை முன்னிறுத்தும் மேற்கத்தியே காலாச்சாரத்திற்கும்,சமுதாயம் குடும்பம் என்னும் கட்டுமானத்தைய்க் கொண்ட கிழக்கத்தேய சமூக அமைப்பு முறைக்கும் இடயேயான பிரச்சனை. நாம் ஊரில் இருந்து காவி வந்த இந்த சமுதாய நடைமுறைகளுக்கும்,அது சார்ந்த கருத்தியலுக்கும் , தனி மனிதை சுதந்திரத்தை முதன்மைப் படுத்தி அமைக்கப்பட்டுள்ள மேற்கத்திய வாழ்வு முறமைக்கும் இடயேயான பிரச்சனை.
இந்தப் பிரச்ச்னை எமது அடுத்த சந்தத்யினருக்கே மிகவும் சிக்கலானதக இருக்கப் போகிறது,காரணம் அவர்கள் முற்று முளுக்க மேற்கத்திய கருத்தியல் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தினூடாகவே வளர்க்கப் படுகின்றன்ர்.இது பாடசாலையில் தொடங்கி பிறகு நண்பர்கள், சட்டங்கள் , நிறுவனங்கள் என்று விரிகின்றது.அதனாலேயே வீட்டிலே தமிழ் பேசி தமிழ் படம் பாத்து வெளியில் பூனைக் குட்டி சொன்ன மாதிரி சேர்ந்து வாழத் தலைப் படுகினம்.இங்கே முரண் படுவது இரு வேறு சமூகக் கட்டமைப் புக்கள் சார்ந்த கருத்தியல்களே அன்றி ,தனி மனிதரின் ஒழுக்க முறமையல்ல.எமக்கு கெட்ட நடத்தையாகத் தெரிவது இன்னொருவருக்கு சரியானதாகத் தெரியும்.இது அந்த நடத்தயால் அல்ல எமது சமூகக் கண்ணோட்டத்தில் இருந்தே நல்லது ,கெட்டது ஆகின்றது.
ஆகவே இவ்வாறு நிறுவனப் படுத்தப் பட்டு எம்மைச் சூழ்ந்துள்ள இந்த வாழ்க்கை முறமைக்கு எதிராக நிறுவனங்களை அமைத்தோ,தடை போட்டோ இதனைத் தடுக்க முடியாது. நாம் தமிழராக, தமிழர் சமூகக் கட்டமைப் புடன் வாழ வேன்டு மாயின் அது நிறுவனப்படுத்தப் பட வேன்டும்,அதற்கான சமூக அடித்தளங்கள் ஆரம்பக் கல்விச் சாலைகள் முதல் ,சமூக அமைப்புக்கள் வரை அமைக்கப் பட வேண்டும். இது தனி மனிதனை முன்னிறுத்தும் மேற்குலகில் சாத்தியப் படாது ,அது எமது நாட்டிலேயே சாத்தியப்படும்.
ஆகவே விவகாரத்து என்பது ஒரு நியாயத்தை வளங்குவதற்கான ,எல்லாச் சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள சட்டவியல் நடை முறமை.
தனி மனித சுதந்திரத்தையும், நலத்தையும் முன்னிறுத்துகின்ற மேற்கத்தீய சமூக நடமுறமைக்குள் இது அதிகமாகக் காணப் படுகிறது.அதற்குள் வாழும் எம்மவர்க்கு அது ஒரு தெரிவாக இருக்கிறது.இதில் எந்த வாழ் முறமையய் தேர்ந்தெடுப்பது என்பது அவர் அவர் தனிப்பட்ட தெரிவாக இருக்கிறது. நாங்கள் எவ்வளவு கூக் குரலிட்டாலும் இதனைத் தடுக்க முடியாது.இதில் சரி பிழை அவர் அவர் சமூகக் கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.
எமது வாழ்வு முறமை நிறுவனப் படுத்தப் பட்ட தமிழீழ தேசத்திலேயே சமுதாயம்,குடும்பம் என்ற அலகுகள் முதன்மை அடையும்.அங்கேயும் விவாகரத்தென்பது அடக்கப் படுகின்ற,சித்திரவதைக் குள்ளாகின்ற பெண்களுக்கு ஒரு சட்டவியல் நடைமுறமையாக ,தீர்வாக அமையும்.ஏனெனில் எல்லா மனிதர்களும்,உறவுகளும் ஒரு மாதிரியானவை அல்ல, அந்த அந்த நிலமைகளுக்கு ஏற்பவே ஒரு வரின் குடும்ப வாழ்வும், வளமும் அமைகிறது.அதே நேரம் குடும்பம் என்ற அலகை செழிமைப் படுத்துகின்ற சமுதாய அமைப் புக்களும், சமூகக் கண்ணோட்டமும் மேன் நிலைப் படுத்தப் படும்.
உந்த கருத்தாடல்களுக்க கன பேர் தாங்களும் குழம்பி மற்றவையும் குழப்பி இருக்கினம் போல.எப்பவுமே கருத்துத் தெளிவும் நடைமுறை அனுபவமும் வேணும் ,திருமணம் தாம்பத்திய உறவைப் பற்றிக் கதைக்க.அது இல்லாதவர்கள் வெறும் கற்பனையிலேயே இதுகளப் பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது, கிருபன் சொன்ன மாதிரி இந்தக் கற்பனைகள் நடமுறை வாழ்க்கையில் சிக்கல்களையும்,உறவு முறைகளில் குழப்பங்களையுமே தரும்.
1)இங்கே முதலாவது பிரச்சனை,விவாகரத்து என்னும் சட்டவியல் நடைமுறை எமக்கு அவசியமா என்பதே?
புலத்திலும் சரி ,ஊரிலும் சரி இது ஒரு சட்டவியல் நடைமுறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆகவே இந்தக் கேள்வி அர்த்தமற்றது,ஏனெனில் சட்டவியல் நடைமுறையாக இருக்கின்ற ஒன்றை இல்லாது செய்ய முடியாது,அது இருப்பதற்கான காரணங்கள் அந்தச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாலேயே அது சட்டமாக இயற்றப் பட்டது,யாரோ தேசவழமை எண்டெல்லாம் கதை அளந்திருந்திச்சினம்,தேசவழமைச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக மட்டுமே பாவிக்கப் படக் கூடியது.விவாகரத்து சம்பந்தமாக அதில் எதுவும் இல்லை.தமிழீழச் சட்டக் கோவையிலும் இவை இடம்பெற்றுள்ளன,ஆனால் அதன் விபரங்களைத் தெரிந்தவர்கள் கூறினால் நன்று.
2)இரண்டாவது பிரச்சனை தனி மனித நலனை முன்னிறுத்தும் மேற்கத்தியே காலாச்சாரத்திற்கும்,சமுதாயம் குடும்பம் என்னும் கட்டுமானத்தைய்க் கொண்ட கிழக்கத்தேய சமூக அமைப்பு முறைக்கும் இடயேயான பிரச்சனை. நாம் ஊரில் இருந்து காவி வந்த இந்த சமுதாய நடைமுறைகளுக்கும்,அது சார்ந்த கருத்தியலுக்கும் , தனி மனிதை சுதந்திரத்தை முதன்மைப் படுத்தி அமைக்கப்பட்டுள்ள மேற்கத்திய வாழ்வு முறமைக்கும் இடயேயான பிரச்சனை.
இந்தப் பிரச்ச்னை எமது அடுத்த சந்தத்யினருக்கே மிகவும் சிக்கலானதக இருக்கப் போகிறது,காரணம் அவர்கள் முற்று முளுக்க மேற்கத்திய கருத்தியல் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தினூடாகவே வளர்க்கப் படுகின்றன்ர்.இது பாடசாலையில் தொடங்கி பிறகு நண்பர்கள், சட்டங்கள் , நிறுவனங்கள் என்று விரிகின்றது.அதனாலேயே வீட்டிலே தமிழ் பேசி தமிழ் படம் பாத்து வெளியில் பூனைக் குட்டி சொன்ன மாதிரி சேர்ந்து வாழத் தலைப் படுகினம்.இங்கே முரண் படுவது இரு வேறு சமூகக் கட்டமைப் புக்கள் சார்ந்த கருத்தியல்களே அன்றி ,தனி மனிதரின் ஒழுக்க முறமையல்ல.எமக்கு கெட்ட நடத்தையாகத் தெரிவது இன்னொருவருக்கு சரியானதாகத் தெரியும்.இது அந்த நடத்தயால் அல்ல எமது சமூகக் கண்ணோட்டத்தில் இருந்தே நல்லது ,கெட்டது ஆகின்றது.
ஆகவே இவ்வாறு நிறுவனப் படுத்தப் பட்டு எம்மைச் சூழ்ந்துள்ள இந்த வாழ்க்கை முறமைக்கு எதிராக நிறுவனங்களை அமைத்தோ,தடை போட்டோ இதனைத் தடுக்க முடியாது. நாம் தமிழராக, தமிழர் சமூகக் கட்டமைப் புடன் வாழ வேன்டு மாயின் அது நிறுவனப்படுத்தப் பட வேன்டும்,அதற்கான சமூக அடித்தளங்கள் ஆரம்பக் கல்விச் சாலைகள் முதல் ,சமூக அமைப்புக்கள் வரை அமைக்கப் பட வேண்டும். இது தனி மனிதனை முன்னிறுத்தும் மேற்குலகில் சாத்தியப் படாது ,அது எமது நாட்டிலேயே சாத்தியப்படும்.
ஆகவே விவகாரத்து என்பது ஒரு நியாயத்தை வளங்குவதற்கான ,எல்லாச் சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள சட்டவியல் நடை முறமை.
தனி மனித சுதந்திரத்தையும், நலத்தையும் முன்னிறுத்துகின்ற மேற்கத்தீய சமூக நடமுறமைக்குள் இது அதிகமாகக் காணப் படுகிறது.அதற்குள் வாழும் எம்மவர்க்கு அது ஒரு தெரிவாக இருக்கிறது.இதில் எந்த வாழ் முறமையய் தேர்ந்தெடுப்பது என்பது அவர் அவர் தனிப்பட்ட தெரிவாக இருக்கிறது. நாங்கள் எவ்வளவு கூக் குரலிட்டாலும் இதனைத் தடுக்க முடியாது.இதில் சரி பிழை அவர் அவர் சமூகக் கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.
எமது வாழ்வு முறமை நிறுவனப் படுத்தப் பட்ட தமிழீழ தேசத்திலேயே சமுதாயம்,குடும்பம் என்ற அலகுகள் முதன்மை அடையும்.அங்கேயும் விவாகரத்தென்பது அடக்கப் படுகின்ற,சித்திரவதைக் குள்ளாகின்ற பெண்களுக்கு ஒரு சட்டவியல் நடைமுறமையாக ,தீர்வாக அமையும்.ஏனெனில் எல்லா மனிதர்களும்,உறவுகளும் ஒரு மாதிரியானவை அல்ல, அந்த அந்த நிலமைகளுக்கு ஏற்பவே ஒரு வரின் குடும்ப வாழ்வும், வளமும் அமைகிறது.அதே நேரம் குடும்பம் என்ற அலகை செழிமைப் படுத்துகின்ற சமுதாய அமைப் புக்களும், சமூகக் கண்ணோட்டமும் மேன் நிலைப் படுத்தப் படும்.

