09-03-2005, 08:44 AM
அப்பொப்துதான் யாழ்பாணத்தில் கையடக்கத் தொலைபேசி அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அக்காலத்தில்தான் துரோகி கருணா விடுதலை புலிகளால் வெளியேற்ற பட்டிருந்தார். எனது நண்பன் சில நாட்களுக்கு முன்தான் கையடக்கத் தொலைபேசியை வாங்கியிருந்தான் அன்று முதல் அவன் கையடக்கத் தொலைபேசியையே சில நாட்களாக காதலித்தான். ஒருநாள் பதட்டத்துடன் என்னை நோக்கி ஓடிவந்து டோய் கோபி கருணாவை பஸ்சுக்குள் வைத்து பிடித்து விட்டார்கள் என்றான். நானும் ஆவலுடன் யார்? எப்போது? எங்கே பிடித்தார்கள்?. எதிலிருந்து அறிந்து கொண்டாய் என கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றேன் அவன் இடைமறித்து எனது தொலைபேசியில்தான் சொல்கிறது என்றான் நானும் என்னடா இப்பொது தொலைபேசியிலுமா செய்திகள் சொல்லத் தொடங்கி விட்டார்கள் என்ற கேள்விகளோடு தொலைபேசியை வாங்கி ஓர் எண்ணுக்கு டயல் செய்தேன் அப்போது அது "கருணாகர பஸ்வ நமத்தன்ன'' எனக் கூறியது இதைக் கேட்டு விட்டுத்தான் கருணாவை பஸ்சுக்குள் அமத்தி விட்டார்கள் என நினைத்து என்னிடம் கூறியிருக்கிறான் நண்பன். உண்மையில் இதன் அர்த்தம் தயவு செய்து அழைபை சற்று தாமதித்து மேற்கொள்ளவும் என்பதுதான்.
-<b> தமிழ்ப்பித்தன்</b>
(ஓசியாய் வாசிக்க ஒரு <b>பேப்பர்</b>)
-<b> தமிழ்ப்பித்தன்</b>
(ஓசியாய் வாசிக்க ஒரு <b>பேப்பர்</b>)
::


