09-02-2005, 01:53 PM
kuruvikal Wrote:எதுவுமே பரிமாற்ற வழி வந்தவைதான்...கருத்துக்களும் அதே வழி வந்தவைதான்...! இங்கு பழமைவாதம் பேசப்படவில்லை..தற்போது உச்சரிக்கப்படும் உங்கள் புதுமைவாததுக்குள் (எங்களுக்கு அது பழமைவாதம்) பரிமாற்றம் பேசப்படுகிறது...அது நாளைய புதிமைக்காகும்..!
எப்பவும் மாற்றங்கள் பேசப்படும் போது அதை தற்கால (அல்லது அக்கால) நடைமுறைகளால் சுகங்களை அனுபவிப்பவர்கள் ஏற்கத்தயாராக இருந்ததில்லை...! அதற்காக மாற்றங்கள் வராமல் இருந்ததும் இல்லை..! எங்களைப் பொறுத்தவரை நீங்கள் இருவரும் பேசுவது 20 ம் நூற்றாண்டின் பழமை வாதம்...நாம் பேசிக்கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டிற்கான உங்கள் பழமைவாதத்தில் மாற்றமே...! பெண் விடுதலை 19 இல் உச்சரிக்கப்பட்டாயிற்று...நீங்கள் 21 இலும் அதையே பேசி உலகத்தை எனியும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது...! அதில் ஏமாறிகளை ஏமாற்றிக் கொண்டும் இருக்க முடியாது...! எங்கும் தற்கால நடைமுறைகுள் உள்ள பிரச்சனைகளுக்கு நல்ல மாற்றங்களால் தீர்வுகள் தேடும் தேடலுக்கே தேவை உண்டு...! இன்னும் புதிமை என்று 19 இன் பழமையைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை...! அதை இங்கு பேசுவதிலும் இந்தியாவில் பேசுதல் சிறந்தது...! உங்கள் கருத்துக்கு வரவேற்பிருக்கும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீர் எதனைப் புதுமை என்கிறீர் என்பதுதான் விளங்கவில்லை?
எதோ சம்மந்தா சம்பந்தமில்லாமல் உளறி விட்டு நீங்கள் சொல்வது பழமை நான் சொல்லுவது புதுமை என்றால் அது என்ன கருத்தாடல், வெறும் முத்துரை குத்தல் ஆகாதோ?
கருத்துக்களுக்கு பதில் கூறாமல் இப்படிச் செய்வது கருத்துக்களின் வறுமயே அன்றி வேறொன்றும் அல்ல.இத்துடன் இதனை முடித்துக் கொள்கிறேன் ஏனெனில் மேலும் உம்மோடு கருத்தாடுவது பிரயோசனம் இல்லை என்று புலன் ஆகிறது.புரிய வேன்டியவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன் , நன்றி, வணக்கம்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 