09-02-2005, 07:23 AM
Vasampu Wrote:ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தெழுதுகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்ற விவாகரத்துக்களிலோ அல்லது தாயகத்தில் நடைபெற்ற விவாகரத்துக்களிலோ எத்தனை வீதமானவை கணவனின் கொடுமையினால் நடைபெற்றவை??? மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்;. பல பெண்கள் தமக்குள்ள சுதந்திரங்களை தவறான வழிகளில் பயன்படுத்தவில்லையா???? தன் பிள்ளைகளையும் கணவனையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு ஆடவனுடன் சென்ற பெண்களா அல்லது தன் பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்ற ஆண்களா அதிகம். எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் என்று ரீல் விடாதீர்கள்.ஆண்களை விட பெண்களுக்கு சுயநலம் அதிகம்.
புலம் பெயர்ந்த நாடுகளில் நடக்கும் விவாகரத்துக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லமாட்டேன், அதற்கு பெண்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் தான். புலத்தில் குடும்பத்தை விட்டு செல்லும் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்று எழுதி இருந்தீர்கள், அதற்கு ஆண்கள் குடும்பத்தை விட்டு செல்லாமலே இன்னொரு பெண்ணுடன் தொடர்ப்பு வைக்க கூடியதாக இருந்தது காரணமாக இருக்கலாம் அல்லவா? அதற்காக அப்படி அவர்களும் தொடர்பு வைக்க கூடிய நிலைமை வர வேண்டும் என்று சொல்லவில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

