Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்
#1
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் கிளிநொச்சி தமிழ்த் தேசிய எழுச்சிப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசிற்கு அறைகூவல்


தமிழ்த் தேசிய எழுச்சிக்கான வவுனியா பிரகடனத்தை வலியுறுத்தும் எழுச்சிப் பிரகடனம் இன்று கிளிநொச்சி தேசிய விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி மிகவும் எழுச்சி பூர்வமாக தமது உள் உணர்வுகளை வலியுத்தினர் இதன் போது சிறிலங்கா இனவாத அரசியல் வாதியான ஜே.ஆர்.ஜயவர்த்தனாவால் 1989இல் கூறப்பட்ட போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற வாசகத்தை இன்று நாம் சிறிலங்கா அரசிற்கு கூறிவைக்க விரும்புகின்றோம் என

திருகோணமலை மாவட்ட தமிழ் பேரவை மக்கள் தலைவர் திரு.வ.விக்கினேஸ்வரன் மக்கள் சார்பில் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை மாலை 4.00மணியளவில் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்த இந்நிகழ்வில் மாவீரர் மேஜர் விமல் அவர்களின் துணைவியார் திருமதி தமிழ்செல்வி சண்முகநாதன் அவர்களும் மாவீரர் மேஜர் கமல் அவர்களின் தந்தை முத்துச்;சாமி அருணாசலம் அவர்களும் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடியினை மாவீரர் கப்டன் வண்ணன் அவர்களின் தந்தை முத்துவேல் சீவரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை கிளிநொச்சி மாவட்ட தமிழ்த்தேசிய எழுச்சிச் செயலணிக் குழுத்தலைவர் திரு. தி.பிரபாகரன் அவர்கள் நிகழ்த்த நிகழ்வின் ஆசியுரையினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தி.இராசநாயகம் அடங்கலாக இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதப்பெரியார்கள் வழங்கினர்.

திருகோணமலை மாவட்ட மாவட்ட மக்கள் பேரவைத்தலைவர் திரு.வ.விக்கிணேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு.மோகனதாஸ், கிளிநொச்சி மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் திரு.கணேசலிங்கம் அவர்களும் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செலயகப் பணிப்பாளர் திரு.கருணாரட்ணம் அடிகளார் அவர்களும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.ச.கனகரட்ணம் அவர்களும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கி.சிவனேசன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் திருமதி.பி.மதுரநாயகம் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.ஜெயானந்தமூர்த்தி அவர்களும் தமிழீழ அரசியல் துறைத்துணைப்பொறுப்பாளர் திரு.சோ.தங்கன் அவர்களும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.பத்மநாதன் அவர்களும் சிறப்புரைகளை ஆற்றினர்.

தொடர்ந்து எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ்வெழுச்சிப் பிரகடனத்தை தமிழ்த்தேசிய எழுச்சி செயலாளர் திரு.வேழமாலிகிதன் நிகழ்த்தினார்.

இறுதியாக தேசிய எழுச்சிப் பேரவை கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை நன்றியுரையினை நிகழ்த்தினார்.
சங்கதி
Reply


Messages In This Thread
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் - by ஊமை - 09-01-2005, 03:46 PM
[No subject] - by sathiri - 09-01-2005, 04:11 PM
[No subject] - by Thala - 09-01-2005, 04:19 PM
[No subject] - by வியாசன் - 09-01-2005, 04:46 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 05:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)