08-31-2005, 09:36 PM
<b>யானைக்கு விருந்தளித்து திருமண வரவேற்பைக் கொண்டாடும் டாக்டர் பி.பி. கிரிதாஸ், தர்ஷணா.</b>
<img src='http://img330.imageshack.us/img330/3153/28djumbo3xe.jpg' border='0' alt='user posted image'>
யானைகள் வாழ்த்தொலிக்க நடந்த கால்நடை மருத்துவரின் திருமண வரவேற்பு
சாதாரணமாக திருமண வரவேற்பில் என்னென்ன உணவு வகைகள் வைத்திருப்பார்கள்?
திருச்சூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில், பனைமர தழைகள், வாழைப்பழங்கள், வெல்லம் போன்ற பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதற்குக் காரணம் இத் திருமண வரவேற்பின் முக்கிய விருந்தாளி "யானை'கள்.
திருச்சூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் பி.பி. கிரிதாஸ், தர்ஷணா திருமண வரவேற்புதான் இவ்வளவு சிறப்புடன் நடந்தது.
"யானை' சிகிச்சை நிபுணரான கிரிதாஸ், தனது திருமணத்தை வித்தியாசமாக செய்ய நினைத்தார். திருமண வரவேற்புக்கு யானைகளை அழைப்பது என்று முடிவு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருவம்பாடி கோயிலில் அவருக்கு திருமணம் நடந்தது.
பின்னர் மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் மனித நண்பர்களுடன், யானை நண்பர்களும் கலந்து கொண்டன.
அதோடு இல்லாமல் திருச்சூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் விருந்து அளிக்க விரும்பினார். ஆனால் வெளியாள்கள் உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதால், அவற்றுக்கு ஒருநாள் உணவுக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொண்டார் டாக்டர் கிரிதாஸ்.
<img src='http://img330.imageshack.us/img330/3153/28djumbo3xe.jpg' border='0' alt='user posted image'>
யானைகள் வாழ்த்தொலிக்க நடந்த கால்நடை மருத்துவரின் திருமண வரவேற்பு
சாதாரணமாக திருமண வரவேற்பில் என்னென்ன உணவு வகைகள் வைத்திருப்பார்கள்?
திருச்சூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில், பனைமர தழைகள், வாழைப்பழங்கள், வெல்லம் போன்ற பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதற்குக் காரணம் இத் திருமண வரவேற்பின் முக்கிய விருந்தாளி "யானை'கள்.
திருச்சூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் பி.பி. கிரிதாஸ், தர்ஷணா திருமண வரவேற்புதான் இவ்வளவு சிறப்புடன் நடந்தது.
"யானை' சிகிச்சை நிபுணரான கிரிதாஸ், தனது திருமணத்தை வித்தியாசமாக செய்ய நினைத்தார். திருமண வரவேற்புக்கு யானைகளை அழைப்பது என்று முடிவு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருவம்பாடி கோயிலில் அவருக்கு திருமணம் நடந்தது.
பின்னர் மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் மனித நண்பர்களுடன், யானை நண்பர்களும் கலந்து கொண்டன.
அதோடு இல்லாமல் திருச்சூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் விருந்து அளிக்க விரும்பினார். ஆனால் வெளியாள்கள் உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதால், அவற்றுக்கு ஒருநாள் உணவுக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொண்டார் டாக்டர் கிரிதாஸ்.
<b> .. .. !!</b>

