10-30-2003, 04:54 AM
புலிகளின் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவு சூடானின் இடைக்கால நிர்வாகத் திட்டங்களிலிருந்து இரவல் பெறப்பட்டதா?
தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக வரைபின் பலவிடயங்கள் வட ஆபிரிக்க நாடான சூடானின் இடைக்கால நிர்வாகத் திட்டங்களிலிருந்து இரவல் பெறப்பட்டுள்ளதா எனச் சம்பிகா லியன ஆராய்ச்சி எனும் சிங்களப் பத்திரிகையாளர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா சூடான் ஆகிய இரு நாடுகளிலும் காணப்படும் போராட்டங்களுக்கு இடையில் போராட்டத்தின் தன்மைகளிலும் வரலாற்றிலும் பல ஒப்புவமைகள் இருப்பதாகக் கூறியுள்ள கட்டுரையாசிரியர் 1983 முதல் இரு நாடுகளிலும் நடைபெற்று வரும் போராட்டங்களால் சிறிலங்காவில் 75000 பேரும் சூடானில் ஒன்று புள்ளி ஐந்து மில்லியன் பேரும் இறந்துள்ளனர் எனத் தொவித்துள்ளார்.
சூடானில் பெரும்பான்மையினரான சன்னி முஸ்லீம்கள் (ளுரnni ஆரளடiஅள) 70 வீதமென்றும் சிறிலங்காவில் சிங்கள பௌத்தர்களும் அதே அளவினர் எனக் கட்டுரையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கு சூடானில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையில் முஸ்லீம் பெரும்பான்மையினர் இடமிருந்து உள்ளக சுய நிர்ணய உரிமையினைக் கோருகின்றார்கள் எனவும் தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவ்வாறே உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வுக்கு விருப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கட்டுரையாளர் சம்பிகா லியனஆராய்ச்சி விளக்குகின்றார்.
இரு நாடுகளிலும் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு பலமாகவுள்ளதெனவும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியமானதாகவுள்ளது என்பது கட்டுரையாளரின் கருத்து. மேலும் நோர்வே, கடந்த நவம்பர் மாதத்தில் ஒஸ்லோவில் சிறிலங்காவில் சமாதானத்தை உறுதிப்படுத்த உதவி வழங்கும் நாடுகளின் மகாநாட்டை நடத்தியது போல தற்பொழுது சூடானின் புனரமைப்புக்கான உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு ஒன்றை நோர்வே நடாத்தவிருப்பதாக இவ்வாரத்தில் அறிவித்துள்ளது.
சூடானின் அரசாங்கத்திற்கும் போராளிகளுக்கும் இடையிலான அடுத்த கட்டப் பேச்சுக்கள் நவம்பர் 30ம் திகதி இடம்பெறும் எனத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வாரத்தில் சூடானின் இரு தரப்பினரையும் கென்யாவில் சந்தித்த அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் அவர்கள் எதிர்வரும் மார்கழி மாதத்திற்கு இடையில் இரு தரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிடல் வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றார் எனவும் கட்டுரையாளர் சம்பிகா லியனஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிலும் சூடானிலும் சமாதானத்தை ஏற்படுத்த அயல் நாடுகள் மேற்கொண்ட பல தரகு முயற்சிகள் தோல்வி கண்டு யுத்தமே மீளவும் மீளவும் தொடர்ந்து வந்தது என்னும் கட்டுரையாளர் இறுதியில் சூடானின் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தாங்களாகவே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தான் ஏற்புடைய பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்து இவ்வாறான பல வழிகளில் சூடான் சிறிலங்காவுக்கு பிரச்சினைத் தீர்வுக்கான முன்னுதாரண வடிவமாக உள்ளது எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் முன்னுதாரணங்களில் சிறுபான்மையானவர்கள் பெரும்பான்மையானவர்கள் மேல் ஆட்சி செலுத்திய நிலைகள் உள்ளதால் அவற்றை விட சூடானின் முன்னுதாரணம் சிறிலங்காவுக்குப் சிறப்புடையதாக அமைகிறது எனக் கட்டுரையாளர் கருதுகின்றார்.
இவ்வாறு கூறிவிட்டு கட்டுரையாளர் நிலம், வரிகள் பாதுகாப்பு என்னும் மூன்று விடயங்களில் எவ்வாறு அதிகாரங்களைப் பெறுவது என்பதற்குச் சிறிலங்கா அரசாங்கத்தின் யுூலை மாத இடைக்கால நிர்வாக விவாதிப்பு ஆவணத்திற்கு முன்மொழிவுகளை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமானதும் கடும் முயற்சியானதுமான ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கும் இதற்காக அவர்கள் நீண்ட காலத்தைச் செலவிட்டுள்ளார்கள் எனத் தன் கருத்தை விபரித்துள்ளார்.
ஆயினும் தற்பொழுது உள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால் சிறிலங்கா முஸ்லீம்; காங்கிரஸ் தற்பொழுது பிரித்தானியாவில் ஆய்வுச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு விட்டு நாடு திரும்பியதும் இரண்டு மாதத்துள் தாங்களும் இடைக்கால நிர்வாகம் தொடர்பாகத் தங்களுடைய சொந்த முன்மொழிவுகளைச் சமர்பிப்பக்கப் போவதாகத் தெரிவித்து வருவதேயாகுமென கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீளவும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பமாகவுள்ளதாக உத்தேசப் பேச்சுகக்ள் அடிபடும் நிலையில் மூன்றாவது தரப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுவதாக கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி கவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகத் தீர்வுகள் 1981ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதாகவும் ஆனால் அன்று 40 வீதமாக இருந்த தமிழர்களின் சனத்தொகை இன்று 33 வீதமாக குறைந்து விட்டது என்னும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னைய அடிப்படையிலேயே தங்கள் தீர்வுகளைத் தேடுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு உதாரணமாக கிழக்கில் 37 வீதம் முஸ்லீம்களும் 30 வீதம் சிங்களவர்களும் உள்ளனரெனவும் ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் அதிகமாகவுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தங்களுடைய நீதி நிர்வாகத்தை நீடித்துள்ளனர் எனக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் ஈடுபட்ட எந்த ஒரு தரப்பும் பேச்சுவார்த்தைக் காலங்களில் அத்தரப்பு போர்க்காலத்தில் படைபலம் கொண்டு பெற்றிருந்த நன்மைகளை விட எந்த அதிக நன்மையையும் அடைந்துகொள்ள அனுமதிக்க கூடாது என்பது சர்வதேச வழமையெனவும் ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை சர்வதேச வழமைக்கு மாறாக சம நிலையின்றி விடுதலைப்புலிகளின் பக்கம் சார்புத்தன்மை அதிகமாகவுள்ளது எனவும் சம்பிகா லியன ஆராய்ச்சி கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா படையினரிடையே தோல்வியுற்ற படையினர் என்ற மனோநிலை அதிகரித்து உள்ளதெனவும் முன்னர் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து இருந்த நிலையிலும் அவர்கள் உற்சாகமாக கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும் ஆனால் இன்றோ அவர்கள் மனச்சோர்வுற்று ஒரு படையினர் தன்னிடமே இந்நிலையில் ஒரு படையினன் இங்கு எதற்குத் தேவையெனக் கேட்டதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். சிறிலங்கா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது படைகளின் உற்சாகத்திற்கு மிகவும் உதவுமெனவும் கட்டுரையாளர் கருதுகின்றார்.
இந்நேரத்தில் இராணுவத்தன்மையை அகற்றுதல் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தின் அளவை மேலும் குறைக்க அனுமதிப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் பேரம் பேசும் ஆற்றலைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பௌத்த மதம் 70 வீதமான மக்களால் பின்பற்றப்படும் மதம் எனவும் அதற்கு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்குவது என்பது இறுதித்தீர்வில் முன் வைக்கப்படும் பொழுது அதனைச் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்குமெனவும் இந்நிலையில் அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது எந்தஅளவுக்குச் சாத்தியமாகுமென்று கூற முடியாதிருப்பதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி அச்சம் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் இடைக்கால நிர்வாகம் குறித்த எழுத்து மூலமான தங்கள் பதிலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் அனுசரணையாளர் மூலம் சமர்ப்பிப்பதற்கு இன்னமும் இரு தினங்கள் இருக்கும் நிலையில் த சன்டே லீடரில் தெரிவிக்கப்பெற்ற ஊகங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ள கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சியின் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்மொழிவுகளில் பெரும்பாலானவை சூடானிடம் இருந்து இரவல் வாங்கப்பெற்றவையா ? டுவுவுநு pசழிழளயடள: டீரடம ழக வாநஅ டிழசசழறநன கசழஅ ளுரனயn? என்ற இக்கட்டுரை சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களின் இடைக்கால நிர்வாகம் என்பதை எவ்வாறு பார்க்கப்போகிறது என்பதற்கு முன்னுதாரணமாகவுள்ளது.
நன்றி: இலண்டன் ஐபிசி தமிழ் வானொலி
தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக வரைபின் பலவிடயங்கள் வட ஆபிரிக்க நாடான சூடானின் இடைக்கால நிர்வாகத் திட்டங்களிலிருந்து இரவல் பெறப்பட்டுள்ளதா எனச் சம்பிகா லியன ஆராய்ச்சி எனும் சிங்களப் பத்திரிகையாளர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா சூடான் ஆகிய இரு நாடுகளிலும் காணப்படும் போராட்டங்களுக்கு இடையில் போராட்டத்தின் தன்மைகளிலும் வரலாற்றிலும் பல ஒப்புவமைகள் இருப்பதாகக் கூறியுள்ள கட்டுரையாசிரியர் 1983 முதல் இரு நாடுகளிலும் நடைபெற்று வரும் போராட்டங்களால் சிறிலங்காவில் 75000 பேரும் சூடானில் ஒன்று புள்ளி ஐந்து மில்லியன் பேரும் இறந்துள்ளனர் எனத் தொவித்துள்ளார்.
சூடானில் பெரும்பான்மையினரான சன்னி முஸ்லீம்கள் (ளுரnni ஆரளடiஅள) 70 வீதமென்றும் சிறிலங்காவில் சிங்கள பௌத்தர்களும் அதே அளவினர் எனக் கட்டுரையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கு சூடானில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையில் முஸ்லீம் பெரும்பான்மையினர் இடமிருந்து உள்ளக சுய நிர்ணய உரிமையினைக் கோருகின்றார்கள் எனவும் தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவ்வாறே உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வுக்கு விருப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கட்டுரையாளர் சம்பிகா லியனஆராய்ச்சி விளக்குகின்றார்.
இரு நாடுகளிலும் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு பலமாகவுள்ளதெனவும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியமானதாகவுள்ளது என்பது கட்டுரையாளரின் கருத்து. மேலும் நோர்வே, கடந்த நவம்பர் மாதத்தில் ஒஸ்லோவில் சிறிலங்காவில் சமாதானத்தை உறுதிப்படுத்த உதவி வழங்கும் நாடுகளின் மகாநாட்டை நடத்தியது போல தற்பொழுது சூடானின் புனரமைப்புக்கான உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு ஒன்றை நோர்வே நடாத்தவிருப்பதாக இவ்வாரத்தில் அறிவித்துள்ளது.
சூடானின் அரசாங்கத்திற்கும் போராளிகளுக்கும் இடையிலான அடுத்த கட்டப் பேச்சுக்கள் நவம்பர் 30ம் திகதி இடம்பெறும் எனத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வாரத்தில் சூடானின் இரு தரப்பினரையும் கென்யாவில் சந்தித்த அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் அவர்கள் எதிர்வரும் மார்கழி மாதத்திற்கு இடையில் இரு தரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிடல் வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றார் எனவும் கட்டுரையாளர் சம்பிகா லியனஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிலும் சூடானிலும் சமாதானத்தை ஏற்படுத்த அயல் நாடுகள் மேற்கொண்ட பல தரகு முயற்சிகள் தோல்வி கண்டு யுத்தமே மீளவும் மீளவும் தொடர்ந்து வந்தது என்னும் கட்டுரையாளர் இறுதியில் சூடானின் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தாங்களாகவே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தான் ஏற்புடைய பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்து இவ்வாறான பல வழிகளில் சூடான் சிறிலங்காவுக்கு பிரச்சினைத் தீர்வுக்கான முன்னுதாரண வடிவமாக உள்ளது எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் முன்னுதாரணங்களில் சிறுபான்மையானவர்கள் பெரும்பான்மையானவர்கள் மேல் ஆட்சி செலுத்திய நிலைகள் உள்ளதால் அவற்றை விட சூடானின் முன்னுதாரணம் சிறிலங்காவுக்குப் சிறப்புடையதாக அமைகிறது எனக் கட்டுரையாளர் கருதுகின்றார்.
இவ்வாறு கூறிவிட்டு கட்டுரையாளர் நிலம், வரிகள் பாதுகாப்பு என்னும் மூன்று விடயங்களில் எவ்வாறு அதிகாரங்களைப் பெறுவது என்பதற்குச் சிறிலங்கா அரசாங்கத்தின் யுூலை மாத இடைக்கால நிர்வாக விவாதிப்பு ஆவணத்திற்கு முன்மொழிவுகளை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமானதும் கடும் முயற்சியானதுமான ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கும் இதற்காக அவர்கள் நீண்ட காலத்தைச் செலவிட்டுள்ளார்கள் எனத் தன் கருத்தை விபரித்துள்ளார்.
ஆயினும் தற்பொழுது உள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால் சிறிலங்கா முஸ்லீம்; காங்கிரஸ் தற்பொழுது பிரித்தானியாவில் ஆய்வுச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு விட்டு நாடு திரும்பியதும் இரண்டு மாதத்துள் தாங்களும் இடைக்கால நிர்வாகம் தொடர்பாகத் தங்களுடைய சொந்த முன்மொழிவுகளைச் சமர்பிப்பக்கப் போவதாகத் தெரிவித்து வருவதேயாகுமென கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீளவும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பமாகவுள்ளதாக உத்தேசப் பேச்சுகக்ள் அடிபடும் நிலையில் மூன்றாவது தரப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுவதாக கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி கவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகத் தீர்வுகள் 1981ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதாகவும் ஆனால் அன்று 40 வீதமாக இருந்த தமிழர்களின் சனத்தொகை இன்று 33 வீதமாக குறைந்து விட்டது என்னும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னைய அடிப்படையிலேயே தங்கள் தீர்வுகளைத் தேடுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு உதாரணமாக கிழக்கில் 37 வீதம் முஸ்லீம்களும் 30 வீதம் சிங்களவர்களும் உள்ளனரெனவும் ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் அதிகமாகவுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தங்களுடைய நீதி நிர்வாகத்தை நீடித்துள்ளனர் எனக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் ஈடுபட்ட எந்த ஒரு தரப்பும் பேச்சுவார்த்தைக் காலங்களில் அத்தரப்பு போர்க்காலத்தில் படைபலம் கொண்டு பெற்றிருந்த நன்மைகளை விட எந்த அதிக நன்மையையும் அடைந்துகொள்ள அனுமதிக்க கூடாது என்பது சர்வதேச வழமையெனவும் ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை சர்வதேச வழமைக்கு மாறாக சம நிலையின்றி விடுதலைப்புலிகளின் பக்கம் சார்புத்தன்மை அதிகமாகவுள்ளது எனவும் சம்பிகா லியன ஆராய்ச்சி கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா படையினரிடையே தோல்வியுற்ற படையினர் என்ற மனோநிலை அதிகரித்து உள்ளதெனவும் முன்னர் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து இருந்த நிலையிலும் அவர்கள் உற்சாகமாக கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும் ஆனால் இன்றோ அவர்கள் மனச்சோர்வுற்று ஒரு படையினர் தன்னிடமே இந்நிலையில் ஒரு படையினன் இங்கு எதற்குத் தேவையெனக் கேட்டதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். சிறிலங்கா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது படைகளின் உற்சாகத்திற்கு மிகவும் உதவுமெனவும் கட்டுரையாளர் கருதுகின்றார்.
இந்நேரத்தில் இராணுவத்தன்மையை அகற்றுதல் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தின் அளவை மேலும் குறைக்க அனுமதிப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் பேரம் பேசும் ஆற்றலைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பௌத்த மதம் 70 வீதமான மக்களால் பின்பற்றப்படும் மதம் எனவும் அதற்கு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்குவது என்பது இறுதித்தீர்வில் முன் வைக்கப்படும் பொழுது அதனைச் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்குமெனவும் இந்நிலையில் அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது எந்தஅளவுக்குச் சாத்தியமாகுமென்று கூற முடியாதிருப்பதாகவும் கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சி அச்சம் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் இடைக்கால நிர்வாகம் குறித்த எழுத்து மூலமான தங்கள் பதிலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் அனுசரணையாளர் மூலம் சமர்ப்பிப்பதற்கு இன்னமும் இரு தினங்கள் இருக்கும் நிலையில் த சன்டே லீடரில் தெரிவிக்கப்பெற்ற ஊகங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ள கட்டுரையாளர் சம்பிகா லியன ஆராய்ச்சியின் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்மொழிவுகளில் பெரும்பாலானவை சூடானிடம் இருந்து இரவல் வாங்கப்பெற்றவையா ? டுவுவுநு pசழிழளயடள: டீரடம ழக வாநஅ டிழசசழறநன கசழஅ ளுரனயn? என்ற இக்கட்டுரை சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களின் இடைக்கால நிர்வாகம் என்பதை எவ்வாறு பார்க்கப்போகிறது என்பதற்கு முன்னுதாரணமாகவுள்ளது.
நன்றி: இலண்டன் ஐபிசி தமிழ் வானொலி

