08-26-2005, 08:04 PM
ஓலிபரப்பாளர் ரேலங்கியும் அவரது கணவர் செல்வராஜாவையும் விடுதலைப் புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தனியார் தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்த விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து கொலைச் சம்பவங்களுக்கும் ஆயுதக்குழுக்களும்இ சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சாட்டி வந்தன.
ஓலிபரப்பாளர் ரேலங்கியும் அவரது கணவர் செல்வராஜாவையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் தமக்குள் ஏற்படும் உள்முரண்பாடுகளால் கொல்லப்படும் போது அதற்கு விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவது வழமையாக இடம்பெறும் செயல். ஆனால் தற்போது ஒலிபரப்பாளர் ரேலங்கி செல்வராஜா படுகொலை தொடர்பில் விடுதலைப் புலிகள் மீது ஏன் பழி போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
சிறிலங்காவின் தலைநகரில் இருந்து கொண்டு சிறிலங்காவினுடைய கூலிப்படைகளாகவோ அல்லது அவர்களுடைய தூண்டுதலின் பேரிலேயோ விடுதலைப் புலிகள் மீதான ஒட்டுமொத்த அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு கொலையாளிகள் இவ்வாறான முயற்சிகளை செய்து வருகிறார்கள் என்று எங்களுக்கு தெரிகிறது.
இவ்வாறான கொலைகளை செய்ய வேண்டிய தேவையோஇ சூழலோ எமக்கு இல்லை. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரமாக செயற்பட்டதாகவோ நாம் அறியவில்லை. ஆனால் இப்போது இவ்வாறான குற்றங்கள் எம்மீது சுமத்துவது வழமையாகி விட்டது.
சிறிலங்காவின் தலைநகரில் ஊடுருவியுள்ள ஆயுதக்குழுக்கள் பற்றியும் அங்குள்ள பாதாள உலகக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொலைகள் பற்றியும் உங்களுக்கு நன்கு தெரியும். இந்த கொலைகளுக்கான பொறுப்பை விடுதலைப் புலிகள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ளும் ஒரு போக்கே தென்னிலங்கையில் காணப்படுகிறது. இதனால் உண்மையில் பாதிக்கப்படப் போவது சிறிலங்கா அரசாங்கம் தான்.
ஏனெனில் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியையோ அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிiயோ கைவிட்டுவிட்டு எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துகின்றனர். இது அவர்களுக்குத்தான் பாரதூரமான விளைவை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்று - கூறினார்
புதினம்
கொழும்பு தனியார் தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்த விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து கொலைச் சம்பவங்களுக்கும் ஆயுதக்குழுக்களும்இ சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சாட்டி வந்தன.
ஓலிபரப்பாளர் ரேலங்கியும் அவரது கணவர் செல்வராஜாவையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் தமக்குள் ஏற்படும் உள்முரண்பாடுகளால் கொல்லப்படும் போது அதற்கு விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவது வழமையாக இடம்பெறும் செயல். ஆனால் தற்போது ஒலிபரப்பாளர் ரேலங்கி செல்வராஜா படுகொலை தொடர்பில் விடுதலைப் புலிகள் மீது ஏன் பழி போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
சிறிலங்காவின் தலைநகரில் இருந்து கொண்டு சிறிலங்காவினுடைய கூலிப்படைகளாகவோ அல்லது அவர்களுடைய தூண்டுதலின் பேரிலேயோ விடுதலைப் புலிகள் மீதான ஒட்டுமொத்த அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு கொலையாளிகள் இவ்வாறான முயற்சிகளை செய்து வருகிறார்கள் என்று எங்களுக்கு தெரிகிறது.
இவ்வாறான கொலைகளை செய்ய வேண்டிய தேவையோஇ சூழலோ எமக்கு இல்லை. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரமாக செயற்பட்டதாகவோ நாம் அறியவில்லை. ஆனால் இப்போது இவ்வாறான குற்றங்கள் எம்மீது சுமத்துவது வழமையாகி விட்டது.
சிறிலங்காவின் தலைநகரில் ஊடுருவியுள்ள ஆயுதக்குழுக்கள் பற்றியும் அங்குள்ள பாதாள உலகக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொலைகள் பற்றியும் உங்களுக்கு நன்கு தெரியும். இந்த கொலைகளுக்கான பொறுப்பை விடுதலைப் புலிகள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ளும் ஒரு போக்கே தென்னிலங்கையில் காணப்படுகிறது. இதனால் உண்மையில் பாதிக்கப்படப் போவது சிறிலங்கா அரசாங்கம் தான்.
ஏனெனில் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியையோ அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிiயோ கைவிட்டுவிட்டு எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துகின்றனர். இது அவர்களுக்குத்தான் பாரதூரமான விளைவை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்று - கூறினார்
புதினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

