08-25-2005, 12:49 AM
<b>மணிபல்லவத்துக் துயர் உற்ற காதை</b>
மணிமேகலை கண் விழிக்க அவள் பார்த்த காட்சிகள் அவளுக்கு புதுமையாகத் தோன்றியது. மணிபல்லவத்து மணல் வெளியில் உதிர்ந்து கிடந்த மலர் இதழ்களின் மேல் இரவெல்லாம் அவள் தூங்கி இருக்கிறாள். தாம் எங்குள்ளோம் என்று தெரியாத அவள் திகைப்புற்றாள். சுதமதியைக்காணாது பெரிதும் வருந்தினாள். சுதமதி தன்னை விட்டுவிட்டு எங்கயோ சென்று விட்டாள் என புலம்பலானாள்.கண்ணீருடன் புலம்பித்தவித்த மணிமேகலையின் முன்னர் ஒரு புத்தபீடிகை தீடீரென்று தோன்றியது.இந்தப் பீடிகையை அடைய வேண்டும் என்று கீழ்த்திசையை சார்ந்த நாக நாட்டு அரசர்கள் இருவர் போர் புரிந்தார்கள் என்பது வரலாறு. புத்தபீடிகையை கண்டதும்மணிமேகலை தம்முடைய சிவந்த கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கலானாள். அந்தப் பீடிகையை வணங்கியதும் அவள் முற்பிறப்பை பற்றி அறிந்து கொண்டாள்.
எப்போதும் கடலின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் அசோக நகரத்தை ஆண்ட இரவிவன்மன் மனைவியாம் அமுதபதி என்னும் பெருந்தேவியின் வயிற்றில் இலக்குமி என்னும் பெயருடன் பிறந்தேன் அத்திபதி என்னும் அரசனும் அவன் பெருந்தகை தேவியாம் சித்திரபுரத்தை ஆண்ட சீதரன் திருமகளாக விளங்கிய 'நீலபதி' என்னும் அரசிக்கும் மகனாகப் பிறந்த இராகுலன் என்பவரின் மனைவியானேன். இவ்வாறு நாங்கள் இனிதே வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் உன்னிடம் வர இன்றிலிருந்து பதினாறாவது நாளில் என் கணவன் திட்டி விடம் என்னும் பாம்பு கடித்து இறப்பார் என்றும் நீ கூறினாய், மேலும் என் கணவரைத்தொடர்ந்து நானும் தீப்புகுந்து இறப்பதாகவும் உரைத்தாய். பின்னர் நான் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறக்கப் போவதாகவும் அங்கு சென்று பிறந்து வளர்ந்து வரும் நாளில் எனக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்படும் என்றும் தெரிவித்தாய்.
இந்தப் பெருந்துன்பத்தை மணிமேகலா தெய்வம் வந்து தீர்த்து வைப்பாள் என்றும் இந்தத் துன்பத்திலிருந்தும் என்னைக் காக்க, அந்தத் தெய்வமானது அங்கிருந்து யாரும் அறியா வண்ணம் தெந்திசை நோக்கி எடுத்துச் சென்று ஒரு தீவில் கொண்டு வைக்கும் என்றும் கூறினாய். புத்தபீடிகையை வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்றும் உரைத்தாய். இவ்வாறு நான் புத்த பீடிகையை தொழுது வணங்கும் போது எனது பழம் பிறப்புப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டேன்.என்னை அந்த தீவிற்கு கொண்டு வந்த தெய்வம் என் கணவனைப் பற்றிக் கூறும் என்றாய். அந்த தெய்வம் வந்தவுடன் எனது கணவனைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறன், எனவே அந்த தெய்வத்தை காண துடிக்கிறேன். அந்த தெய்வத்தை இதுவரை காணவில்லையே என்ன செய்வேன் என மணிமேகலை ஏங்கி அழுதாள்.
மணிமேகலை கண் விழிக்க அவள் பார்த்த காட்சிகள் அவளுக்கு புதுமையாகத் தோன்றியது. மணிபல்லவத்து மணல் வெளியில் உதிர்ந்து கிடந்த மலர் இதழ்களின் மேல் இரவெல்லாம் அவள் தூங்கி இருக்கிறாள். தாம் எங்குள்ளோம் என்று தெரியாத அவள் திகைப்புற்றாள். சுதமதியைக்காணாது பெரிதும் வருந்தினாள். சுதமதி தன்னை விட்டுவிட்டு எங்கயோ சென்று விட்டாள் என புலம்பலானாள்.கண்ணீருடன் புலம்பித்தவித்த மணிமேகலையின் முன்னர் ஒரு புத்தபீடிகை தீடீரென்று தோன்றியது.இந்தப் பீடிகையை அடைய வேண்டும் என்று கீழ்த்திசையை சார்ந்த நாக நாட்டு அரசர்கள் இருவர் போர் புரிந்தார்கள் என்பது வரலாறு. புத்தபீடிகையை கண்டதும்மணிமேகலை தம்முடைய சிவந்த கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கலானாள். அந்தப் பீடிகையை வணங்கியதும் அவள் முற்பிறப்பை பற்றி அறிந்து கொண்டாள்.
எப்போதும் கடலின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் அசோக நகரத்தை ஆண்ட இரவிவன்மன் மனைவியாம் அமுதபதி என்னும் பெருந்தேவியின் வயிற்றில் இலக்குமி என்னும் பெயருடன் பிறந்தேன் அத்திபதி என்னும் அரசனும் அவன் பெருந்தகை தேவியாம் சித்திரபுரத்தை ஆண்ட சீதரன் திருமகளாக விளங்கிய 'நீலபதி' என்னும் அரசிக்கும் மகனாகப் பிறந்த இராகுலன் என்பவரின் மனைவியானேன். இவ்வாறு நாங்கள் இனிதே வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் உன்னிடம் வர இன்றிலிருந்து பதினாறாவது நாளில் என் கணவன் திட்டி விடம் என்னும் பாம்பு கடித்து இறப்பார் என்றும் நீ கூறினாய், மேலும் என் கணவரைத்தொடர்ந்து நானும் தீப்புகுந்து இறப்பதாகவும் உரைத்தாய். பின்னர் நான் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறக்கப் போவதாகவும் அங்கு சென்று பிறந்து வளர்ந்து வரும் நாளில் எனக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்படும் என்றும் தெரிவித்தாய்.
இந்தப் பெருந்துன்பத்தை மணிமேகலா தெய்வம் வந்து தீர்த்து வைப்பாள் என்றும் இந்தத் துன்பத்திலிருந்தும் என்னைக் காக்க, அந்தத் தெய்வமானது அங்கிருந்து யாரும் அறியா வண்ணம் தெந்திசை நோக்கி எடுத்துச் சென்று ஒரு தீவில் கொண்டு வைக்கும் என்றும் கூறினாய். புத்தபீடிகையை வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்றும் உரைத்தாய். இவ்வாறு நான் புத்த பீடிகையை தொழுது வணங்கும் போது எனது பழம் பிறப்புப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டேன்.என்னை அந்த தீவிற்கு கொண்டு வந்த தெய்வம் என் கணவனைப் பற்றிக் கூறும் என்றாய். அந்த தெய்வம் வந்தவுடன் எனது கணவனைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறன், எனவே அந்த தெய்வத்தை காண துடிக்கிறேன். அந்த தெய்வத்தை இதுவரை காணவில்லையே என்ன செய்வேன் என மணிமேகலை ஏங்கி அழுதாள்.
<b> .. .. !!</b>

