08-22-2005, 05:38 PM
பிரான்ஸ்: பாரீஸ் வாகன விபத்தில் தமிழ் பெண்ணும் குழந்தையும் பலி
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 22:24 ஈழம்] [புதினம் நிருபர்]
பாரிசில் நடைபெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கைத் தமிழ் பெண்னொருவர் தனது 3 வயது குழந்தையுடன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிற்றுண்டிச் சாலையொன்றில் தனது குழந்தையுடன் தேனீர் அருந்திக் கொண்டிருக்கையில் வேகமாக வந்த வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து சிற்றுண்டிச் சாலைக்குள் உட்புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலியானவர் சுஜாதா நடராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்தின் போது இவரது கணவர் சற்றுத் தொலைவில் தனக்கு அறிமுகமான ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தமையினால் அவர் தப்பியுள்ளார்.
இவர்களது ப+தவுடல்கள் உறவினர்களின் கோரிக்கையின் பேரில் இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை பாரிசிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது
www.puthinam.com
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 22:24 ஈழம்] [புதினம் நிருபர்]
பாரிசில் நடைபெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கைத் தமிழ் பெண்னொருவர் தனது 3 வயது குழந்தையுடன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிற்றுண்டிச் சாலையொன்றில் தனது குழந்தையுடன் தேனீர் அருந்திக் கொண்டிருக்கையில் வேகமாக வந்த வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து சிற்றுண்டிச் சாலைக்குள் உட்புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலியானவர் சுஜாதா நடராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்தின் போது இவரது கணவர் சற்றுத் தொலைவில் தனக்கு அறிமுகமான ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தமையினால் அவர் தப்பியுள்ளார்.
இவர்களது ப+தவுடல்கள் உறவினர்களின் கோரிக்கையின் பேரில் இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை பாரிசிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

