10-25-2003, 09:04 PM
அஜீவனின் எச்சில் போர்வை ஒளிபரப்பாகிய அத்தனை நிமிடத்துளிகளிலும் ஏதோ ஒர் எதிர்பார்ப்புதான்…. கதாபாத்திரத்திற்குள் தெரிகிறது.
எடுத்துக்கொள்ளப்பட்ட கரு அகதியின் நிலை.
ஊரிலிருந்து வந்த கடிதத்தின் வரிகள் ....அவை மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்ற.....அதை வெளிப்படுத்துகின்ற விதம்…. உண்மையில் என்னை ஒருகணம் தாயகத்திற்கு அழைத்துச்செல்கிறது.
வெட்டிய மரத்துக்கு மேல் இருந்துகொண்டு இருகைகளால் முகத்தை மூடிக்கொள்வதும் மூக்கை சீறித்துடைப்பதும் நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களாக பிரதிபலிக்கின்றது.
மரங்களுக்கிடையே கமராவை கொண்டு செல்வதில்.....அஜீவனின் கைவண்ணம் அங்கே…..பரிணமிக்கின்றது.
கமராவை கையாளும் முறை நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு...மேலும் பல குறும்படங்களைத்தர வேண்டும் என்று கூறிக்கொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன்.
நட்புடன்.
தமிழ்செல்லம்.
எடுத்துக்கொள்ளப்பட்ட கரு அகதியின் நிலை.
ஊரிலிருந்து வந்த கடிதத்தின் வரிகள் ....அவை மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்ற.....அதை வெளிப்படுத்துகின்ற விதம்…. உண்மையில் என்னை ஒருகணம் தாயகத்திற்கு அழைத்துச்செல்கிறது.
வெட்டிய மரத்துக்கு மேல் இருந்துகொண்டு இருகைகளால் முகத்தை மூடிக்கொள்வதும் மூக்கை சீறித்துடைப்பதும் நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களாக பிரதிபலிக்கின்றது.
மரங்களுக்கிடையே கமராவை கொண்டு செல்வதில்.....அஜீவனின் கைவண்ணம் அங்கே…..பரிணமிக்கின்றது.
கமராவை கையாளும் முறை நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு...மேலும் பல குறும்படங்களைத்தர வேண்டும் என்று கூறிக்கொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன்.
நட்புடன்.
தமிழ்செல்லம்.

