Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனமாற்றம்
#1
ஒரு நீர்நிலையில் சிங்கத்திற்கும், காட்டுப்பன்றிக்கும் பெரிய வாக்குவாதம். யார் அங்கே தண்ணீர் குடிப்பது என்ற சண்டை பலமாகி, கைகலப்புவரை போய்விட்டது. சிங்கம், ''நான்தான் தலைவன். நான் குடித்தபின்தான் மற்றவர்கள் குடிக்க வேண்டும்'' என்றது. காட்டுப்பன்றியும் பிடிவாதமான மிருகம். ''நீ என்னதான் காட்டு ராஜாவாக இருந்தாலும், என் பிறப்புரிமை இந்த இடத்தில்¢ நீரருந்துவது. அதனால் சாகும்வரை போராடுவேனே தவிர, உனக்காக காத்திருக்க மாட்டேன்'' என்றது.

சிங்கமும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு மிருகங்களுக்கும் ஆக்ரோஷமான சண்டை துவங்கியது. நடுவே சிங்கம் வானத்தை நோக்கி கர்ஜித்தது. மேலே வானில் இரண்டு பருந்துகள் பறந்து கொண்டிருந்தன. சண்டை முடிந்து இருவரில் ஒருவர் இறந்து போவார்கள். அதுவரை காத்திருக்கலாம் என்று வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

சிங்கம் காட்டுப்பன்றியைக் கூப்பிட்டு, ''பிழைத்துப்போ! தண்ணீர் குடி! பரவாயில்லை'' என்றது.

''ஏன் இந்த மனமாற்றம்?'' என்று காட்டுப் பன்றி கேட்டபோது, ''பருந்துக்கு விருந்தாக இருப்பதைவிட, பன்றியுடன் சமாதானம் உயர்ந்தது'' என்றது சிங்கம்.

நீதி: - யதார்த்தம் பிடிவாதத்தைத் துரத்தும்.

நன்றி: அம்பலம்
[i][b]
!
Reply


Messages In This Thread
மனமாற்றம் - by சாமி - 10-25-2003, 08:09 PM
[No subject] - by thamizh.nila - 01-20-2005, 05:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)