08-20-2005, 07:35 AM
Mathan Wrote:என்னதான் காதலித்தாலும் பெற்று வளர்த்தோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்தால் தான் சிறப்பாக அமையும். அதே சமயம் பெற்றோர்களும் பிள்ளைகளை புரிந்துகொண்டு அவர்களின் தேர்வு சரியாக இருக்கும் போது சம்மதிக்க வேண்டும். இந்த செய்தியை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இதில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இல்லை ,,,, சுற்றம் என்ன நினைக்குமோ என்று அவமானத்தை தாங்கமுடியாமல் தான் தற்கொலை செய்திருக்கிறார்கள். சுயநலனுக்காக தற்கொலை செய்துகொண்டதால் இது அவர்களில் தவறு தான்.
மதன் உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் பெற்றோரை உங்கள் நிலைக்கு எடுத்து வருவதென்பது எப்போதும் இலகுவான விடயமல்ல... உங்கள் மனவோட்டம் போல அவர்களுக்கும் அமைந்தால் அமையும் என்றால் அது மிக இலகு..இன்றேல் அது கடினம்...! முயன்றால் முடியாதது எதுவும் இல்லை...ஒரு கால அவசாகத்தோடு பெற்றோரை அணுக வேண்டும் இது விடயத்தில்...அவர்களுக்கும் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்...! இல்லை என்றால் சட்டத்தை அணுகுவதே சிறந்தது...அதன் பின்னாவது புரிய வேண்டியவங்க புரிஞ்சுக்குவாங்க தங்கள் தவறை...!
ஆனால் பெற்றோர் தனிமைப்படுவதை பிள்ளைகள் எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கக் கூடாது...ஒருவேளை அவர்களைப் பிரிந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வாழ வேண்டி நேரிட்டால் கூட...! இப்போ பெற்றோர் பெரிதும் புரிந்து கொள்ளக் கூடிய நிலைக்கு வந்திவிட்டார்கள்... ஈழத்தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை...அது ஆரோக்கியமான விடயம்...! இருந்தாலும் இன்னும் இருக்கினம் அதே பழைய சாதக சாதி சம்பிரதாயக் கோட்பாடுகளுக்கு உயிர் கொடுக்க ஆக்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

