08-19-2005, 04:33 PM
கதிர்காமர் உயிர்தானா உயிர்!
By
Aug 19, 2005, 12:04
Printer friendly page
சிறிலங்கா அரசின் மிக முக்கிய பதவி வகித்து வந்த அமைச்சர் கதிர்காமர் வெள்ளி நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படையினரையும், படைப் புலனாய்வுப் பிரிவினரையும் திகைப்பிலாழ்த்தியுள்ள இக்கொலை ஏனைய அரசியல்வாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான துரோகத்தனங்களைச் சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருப்பவர்களின் நெஞ்சை ஒரு இடி இடித்திருக்கிறது. தங்களை தமிழர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் காட்டிக் கொண்டு சிங்கள அரசு அளிக்கும் ஏக போக சலுகைகளை அள்ளிப் பரிமாறும் சிலர் தமது நாடி சாஸ்திரத்தைத் திருப்பி சரிபார்த்திருக்கின்றனர்.
இப்படி ஒரு படுகொலை கதிர்காமருக்கு துல்லியமாக இல க்கு வைத்து நடத்தப்படமாட்டாது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள் வீட்டு முற்றத்தில் கூட நிற்பதற்குத் தயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தம் கதை முடிக்க கொலையாளிகள் எந்த வடிவில் வருவார்கள் என்பதை சிந்தித்து சிந்தித்து விழிமூடாது மண்டையைக் குழப்பும் அரசியல்வாதிகள் இப்போது அவ்வாறு இருக்கும் துரோகிகள் தமக்குப் பாதுகாப்பு என இன்னும் சிங்களப் படைகளை அதிகரித்துக் கொள்வதுதான் மருந்து மாத்திரையாக அமையும்.
இவை நிற்க கதிர்காமர் சினைப்பர் தாக்குதலில் குண்டுபட்டு வீழ்த்த சேதி முதலில் சந்திரிகா அம்மையாருக்குத்தானாம் தெரிவிக்கப்பட்டதாம். அம்மையார் அந்தக் கணத்தில் இப்படி ஒரு நிலை கதிர்காமருக்கு ஏற்படும் என நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதிர்காமர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறையாய் இருந்தார். பதறி அடித்து கொழும்புத் தேசிய வைத்தியசாலைக்கு வந்தார். சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அம்மணியின் பாதுகாப்பு பிரிவு கேட்ட போது அவர் அதனை நிராகரித்தாராம்.
தான் வழமையாகப் பயணிக்கும் மோட்டர் காரைத் தவித்தும் பிறிதொரு காரில் கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார். 'கதிர்காமரை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என மருத்துவர்களிடம் அழுது மன்றாடியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தொட்டுக் காட்டவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
போர் நிறுத்தம் ஏற்பட்டு இற்றைவரை சமாதானத்துக்கான எந்த அம்சங்களையும் நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. தமிழர் தாயகத்தில் போர் நிறுத்தத்திற்குப் பின்னர் எத்தனை படுகொலைகள் அரங்கேறி விட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு, இன்னும் எத்தனை போராளிகள், பொதுமக்கள், ஊனமுற்ற போராளிகளைக் கூட ஒட்டுப்படைகள் ஊடுருவி சுட்டுக் கொன்றதல்லவா.
இந்தச் சம்பவங்களால் தமிழினம் கதறி அழும்போது அம்மையார் அனுதாபம் தெரிவித்தாரா? கொலையாளிகளை கைது செய்து போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தினாரா? கதிர்காமரின் ஆலோசனையில் அரசியல் நடத்திக் கொண்டு இருந்தார். இன்று கதிர்காமரின் உயிர் பிரியும் தறுவாயில் அவரது உயிரைக் காப்பாற்றுமாறு அழுது புலம்பியிருக்கின்றார். இறுதியில் அவரது வேண்டுகோள் தோல்வியாகி விட்டது. இன்னும் சிங்கள பேரினவாதத்துடன் இருந்து கொண்டு தமிழினத்துக்குத் துரோகம் செய்யாதே என நினைத்ததோ என்னவோ கதிர்காமர் உயிர் உடலை விட்டுப் பிரிந்து விட்டது.
தப்பித்தவறி அவரது உயிர் தப்பியிருந்தால் அவரது துரோகத்தனங்களும் பழி வாங்கலும் தமிழ் இனத்துக்கு எதிராக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். காயப்பட்ட கதிர்காமரைக் காப்பற்றி சிக்ஷர் அடிக்கலாம் என நினைத்த சந்திரிகாவுக்கு ஆடுகளத்தை விட்டே அவுட்டாக வேண்டிய நிலையே ஏற்பட்டது. அதேவேளை மீண்டும் ஒரு போர் நெருக்கடி நிலையை தமிழ் மக்கள் மீது திணித்து பழிதீர்ப்பதற்கான முயற்சியாக அவசரகாலச் சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் நுழைவாயில்களில் சோதனைக் கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் மீது தமது அராஜகத்தனங்களைக் கட்டவிழ்த்துக் கொண்டு இருக்கும் படைத்தரப்புக்கு அம்மணியின் அவசரகாலச் சட்டப் பிரகடனம் உச்சந் தலையில் ஐஸ் வைத்த மாதிரியிருந்தது. இனிநாம் எதனையும் செய்வோம் என்ற இறுமாப்புடன் படைத்தரப்பு சோதனைக் கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உண்மையில் இது போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் ஒரு போர் முழுமானால் படைத்தரப்பினரின் அடாவடித்தனங்களின் ஒத்திகையாக இந்தச் சம்பவம் நோக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் அவசரகாலச் சட்டப் பிரகடனமும் படையினரின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே தமிழ் மக்கள் கருத வேண்டியுள்ளது. போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன் பின் சமாதானப் பேச்சுக்கள் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனவாதக் கூட்டோடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி சமாதானத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததா? மாறாக தமிழ் மக்களின் இயல்பு நிலை மேலும் மோசமாகியதுடன் ஒட்டுப் படைகளின் உதவியோடு போர் நிறுத்தத்தைப் பலவீனப்படுத்தும் சம்பவங்களே நடந்தேறி வருகின்றன.
அதே சமயம் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிப்புற்ற தமிழர் தாயகத்தினை மீள் புனரமைப்புச் செய்வதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சுனாமிப் பொதுக் கட்டமைப்பினைக் கூட இயங்கச் செய்ய முடியாத அளவிற்கு உயர் நீதிமன்றத் தடை உத்தரவினால் முடங்கிப்போய்க் கிடக்கிறது. இனவாதக் கட்சியான ஜே. பி. பி ஆளும் கூட்டு முகாமிலிருந்து விலகிச் சென்ற பிற்பாடு கூட சமாதானத்துக்கான நல்லெண்ண முயற்சிகளை சந்திரிகா அம்மையார் மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் உயிரையும், இரத்தத்தையும் சமாதானத்துக்காகக் கொடுத்து பொறுமை காக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.
தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்து தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்தி, ஆழிப் பேரலைக் கட்டமைப்பினை இயங்கச் செய்திருந்தால் நாட்டில் அமைதிநிலை தோன்றியிருக்கும். வடக்குக் கிழக்கில் இந்த போர் ஓய்வு காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைச் சமாதானத்துக்காக இழந்து கொண்டிருக்கும் போது அதற்கு காரண கர்த்தாக்களான ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைந்து தமிழ் மக்களின் இயல்வு நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காத அம்மையார் அவர்கள் லக்ஷ்மன் கதிர்காமர் படுகாயமடைந்த பிற்பாடு பதறியடித்து அவரது உயிரைக் காப்பாற்றுங்கள் என ஒப்பாரி வைப்பது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
கதிர்காமர் உயிர்தானா உயிர். மற்றவர்கள் படுகொலை செய்யப்படும் போது அது உயிர் இல்லையா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகளின் அராஜகத்தனத்தால் தேச விரோத நடவடிக்கைகளால், சுனாமிப் பேரழிவால் எத்தனை மக்கள் அழுதுபுலம்பி ஒப்பாரி வைக்கின்றார்கள். இனியாவது அம்மணி சிந்திப்பாரா? இந்த ஒப்பாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா.
By
Aug 19, 2005, 12:04
Printer friendly page
சிறிலங்கா அரசின் மிக முக்கிய பதவி வகித்து வந்த அமைச்சர் கதிர்காமர் வெள்ளி நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படையினரையும், படைப் புலனாய்வுப் பிரிவினரையும் திகைப்பிலாழ்த்தியுள்ள இக்கொலை ஏனைய அரசியல்வாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான துரோகத்தனங்களைச் சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருப்பவர்களின் நெஞ்சை ஒரு இடி இடித்திருக்கிறது. தங்களை தமிழர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் காட்டிக் கொண்டு சிங்கள அரசு அளிக்கும் ஏக போக சலுகைகளை அள்ளிப் பரிமாறும் சிலர் தமது நாடி சாஸ்திரத்தைத் திருப்பி சரிபார்த்திருக்கின்றனர்.
இப்படி ஒரு படுகொலை கதிர்காமருக்கு துல்லியமாக இல க்கு வைத்து நடத்தப்படமாட்டாது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள் வீட்டு முற்றத்தில் கூட நிற்பதற்குத் தயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தம் கதை முடிக்க கொலையாளிகள் எந்த வடிவில் வருவார்கள் என்பதை சிந்தித்து சிந்தித்து விழிமூடாது மண்டையைக் குழப்பும் அரசியல்வாதிகள் இப்போது அவ்வாறு இருக்கும் துரோகிகள் தமக்குப் பாதுகாப்பு என இன்னும் சிங்களப் படைகளை அதிகரித்துக் கொள்வதுதான் மருந்து மாத்திரையாக அமையும்.
இவை நிற்க கதிர்காமர் சினைப்பர் தாக்குதலில் குண்டுபட்டு வீழ்த்த சேதி முதலில் சந்திரிகா அம்மையாருக்குத்தானாம் தெரிவிக்கப்பட்டதாம். அம்மையார் அந்தக் கணத்தில் இப்படி ஒரு நிலை கதிர்காமருக்கு ஏற்படும் என நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதிர்காமர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறையாய் இருந்தார். பதறி அடித்து கொழும்புத் தேசிய வைத்தியசாலைக்கு வந்தார். சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அம்மணியின் பாதுகாப்பு பிரிவு கேட்ட போது அவர் அதனை நிராகரித்தாராம்.
தான் வழமையாகப் பயணிக்கும் மோட்டர் காரைத் தவித்தும் பிறிதொரு காரில் கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார். 'கதிர்காமரை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என மருத்துவர்களிடம் அழுது மன்றாடியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தொட்டுக் காட்டவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
போர் நிறுத்தம் ஏற்பட்டு இற்றைவரை சமாதானத்துக்கான எந்த அம்சங்களையும் நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. தமிழர் தாயகத்தில் போர் நிறுத்தத்திற்குப் பின்னர் எத்தனை படுகொலைகள் அரங்கேறி விட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு, இன்னும் எத்தனை போராளிகள், பொதுமக்கள், ஊனமுற்ற போராளிகளைக் கூட ஒட்டுப்படைகள் ஊடுருவி சுட்டுக் கொன்றதல்லவா.
இந்தச் சம்பவங்களால் தமிழினம் கதறி அழும்போது அம்மையார் அனுதாபம் தெரிவித்தாரா? கொலையாளிகளை கைது செய்து போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தினாரா? கதிர்காமரின் ஆலோசனையில் அரசியல் நடத்திக் கொண்டு இருந்தார். இன்று கதிர்காமரின் உயிர் பிரியும் தறுவாயில் அவரது உயிரைக் காப்பாற்றுமாறு அழுது புலம்பியிருக்கின்றார். இறுதியில் அவரது வேண்டுகோள் தோல்வியாகி விட்டது. இன்னும் சிங்கள பேரினவாதத்துடன் இருந்து கொண்டு தமிழினத்துக்குத் துரோகம் செய்யாதே என நினைத்ததோ என்னவோ கதிர்காமர் உயிர் உடலை விட்டுப் பிரிந்து விட்டது.
தப்பித்தவறி அவரது உயிர் தப்பியிருந்தால் அவரது துரோகத்தனங்களும் பழி வாங்கலும் தமிழ் இனத்துக்கு எதிராக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். காயப்பட்ட கதிர்காமரைக் காப்பற்றி சிக்ஷர் அடிக்கலாம் என நினைத்த சந்திரிகாவுக்கு ஆடுகளத்தை விட்டே அவுட்டாக வேண்டிய நிலையே ஏற்பட்டது. அதேவேளை மீண்டும் ஒரு போர் நெருக்கடி நிலையை தமிழ் மக்கள் மீது திணித்து பழிதீர்ப்பதற்கான முயற்சியாக அவசரகாலச் சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் நுழைவாயில்களில் சோதனைக் கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் மீது தமது அராஜகத்தனங்களைக் கட்டவிழ்த்துக் கொண்டு இருக்கும் படைத்தரப்புக்கு அம்மணியின் அவசரகாலச் சட்டப் பிரகடனம் உச்சந் தலையில் ஐஸ் வைத்த மாதிரியிருந்தது. இனிநாம் எதனையும் செய்வோம் என்ற இறுமாப்புடன் படைத்தரப்பு சோதனைக் கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உண்மையில் இது போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் ஒரு போர் முழுமானால் படைத்தரப்பினரின் அடாவடித்தனங்களின் ஒத்திகையாக இந்தச் சம்பவம் நோக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் அவசரகாலச் சட்டப் பிரகடனமும் படையினரின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே தமிழ் மக்கள் கருத வேண்டியுள்ளது. போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன் பின் சமாதானப் பேச்சுக்கள் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனவாதக் கூட்டோடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி சமாதானத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததா? மாறாக தமிழ் மக்களின் இயல்பு நிலை மேலும் மோசமாகியதுடன் ஒட்டுப் படைகளின் உதவியோடு போர் நிறுத்தத்தைப் பலவீனப்படுத்தும் சம்பவங்களே நடந்தேறி வருகின்றன.
அதே சமயம் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிப்புற்ற தமிழர் தாயகத்தினை மீள் புனரமைப்புச் செய்வதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சுனாமிப் பொதுக் கட்டமைப்பினைக் கூட இயங்கச் செய்ய முடியாத அளவிற்கு உயர் நீதிமன்றத் தடை உத்தரவினால் முடங்கிப்போய்க் கிடக்கிறது. இனவாதக் கட்சியான ஜே. பி. பி ஆளும் கூட்டு முகாமிலிருந்து விலகிச் சென்ற பிற்பாடு கூட சமாதானத்துக்கான நல்லெண்ண முயற்சிகளை சந்திரிகா அம்மையார் மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் உயிரையும், இரத்தத்தையும் சமாதானத்துக்காகக் கொடுத்து பொறுமை காக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.
தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்து தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்தி, ஆழிப் பேரலைக் கட்டமைப்பினை இயங்கச் செய்திருந்தால் நாட்டில் அமைதிநிலை தோன்றியிருக்கும். வடக்குக் கிழக்கில் இந்த போர் ஓய்வு காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைச் சமாதானத்துக்காக இழந்து கொண்டிருக்கும் போது அதற்கு காரண கர்த்தாக்களான ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைந்து தமிழ் மக்களின் இயல்வு நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காத அம்மையார் அவர்கள் லக்ஷ்மன் கதிர்காமர் படுகாயமடைந்த பிற்பாடு பதறியடித்து அவரது உயிரைக் காப்பாற்றுங்கள் என ஒப்பாரி வைப்பது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
கதிர்காமர் உயிர்தானா உயிர். மற்றவர்கள் படுகொலை செய்யப்படும் போது அது உயிர் இல்லையா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகளின் அராஜகத்தனத்தால் தேச விரோத நடவடிக்கைகளால், சுனாமிப் பேரழிவால் எத்தனை மக்கள் அழுதுபுலம்பி ஒப்பாரி வைக்கின்றார்கள். இனியாவது அம்மணி சிந்திப்பாரா? இந்த ஒப்பாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா.
i love you dadadadad

