08-19-2005, 03:12 PM
vasisutha Wrote:கொழும்பில் இப்படி பல சிறுவர்களை பார்த்திருக்கிறேன்.
பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆளை விட பெரிய
உடுப்பு மாட்டிக்கொண்டு குழி விழுந்த கண்களோடு
கடைக்கு வந்து வீட்டுக்காரருக்கு தேவையான சாமான்களை
வாங்கி தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு போகும் இந்த
சிறுவர்களை கொழும்பில் பரவலாக காணமுடியும்.
அநேகமாக மலையகப் பகுதியில் இருந்து தான்
இந்த சிறுவர்களை கொண்டுவருவார்கள்.
உண்மையில் இது ஒரு கீழ்த்தனமான செயல். இப்படிச் செய்பவர்கள் அந்த பிள்ளையின் இடத்தில் ஒரு தடவை தன்னை வைத்து சிந்தித்து பார்த்தால் அன்று விளங்கும் அவருக்கு அந்த கொடுமையின் வடு.
இதுவரை என் கண்முன்னால் நான் இப்படி ஒரு மனிதரைக்கானவில்லை சிலவேளைகளில் இப்படி ஒரு சம்பவம் இனி வருங்காலங்களில் என் கண்ணில்பட்டால் அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை நன்றாகவே நையப்புடைக்கப்படுவார்.

