08-19-2005, 02:55 PM
aathipan Wrote:தாயகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட(சுனாமி மற்றும் போர் மூலமாக) குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது யாருக்கும் தெரியுமா?. எனது நண்பர் ஒரு குழந்தையைத்தத்து எடுத்துப் படிக்க வைக்க விரும்புகிறார். உதவ முடியுமா?
ஆம்....... இது ஒரு நல்ல செயல். அப்படி உங்கள் நண்பர் செய்வாரென்றால் உண்மையிலேயே அவர் ஒரு பாராட்டத்தக்க மனிதர். நீங்கள் தமிழிழத்தில் உள்ள காப்பகங்களில் இருந்து ஒரு குழந்தையினை பொறுப்பு எடுக்கலாம். அவ்வாறு எடுக்கும் போது இரண்டு முறைகளில் எடுக்கலாம்.
1) நீங்கள் பொறுப்பு எடுக்கும் பிள்ளையை அதே காப்பகத்தில் வைத்து உங்கள் செலவில் ( வாழ்க்கை, கல்வி ) அவர்களின் ஆளுமையில் பராமரிக்கலாம்.
2) நீங்கள் பொறுப்பு எடுக்கும் பிள்ளையினை உங்களுடனேயே கூட்டிச் செல்லலாம். இதற்குச் சில சட்ட, சட்டமற்ற சம்பிரதாயங்களுக்கு நீங்கள் முகம் கொடுக்க வேண்டி நேரிடும்.
இதனை பற்றி மேலதிக விபரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தையோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலயங்களையோ அணுகி மேற்கொண்டு தகவலகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

