Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ செய்திகள்..
#4
விடுதலைப் புலிகளுடன் அவசர சந்திப்பிற்கு ஜனாதிபதி சந்திரிகா அழைப்பு!
[வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2005, 21:52 ஈழம்] [கொழும்பு நிருபர்]
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் அவசரக் கூட்டமொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நோர்வே பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.


சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாட்டாளர்கள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இது நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் செயல்பாடு குறித்து ஆராயும் பொருட்டும் எதிர்காலத்தில் வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்கும் பொருட்டும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் கதிரகாமர் படுகொலைக்கு முன்னதாக இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் சிரேஸ்ட விடுதலைப் புலிப் போராளிகளுக்குமிடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஏற்கனவே அரசாங்கம் ஊடாக யுத்த நிறுத்த கண்கானிப்புக் குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கையொன்றை முன்வைத்தார் என்றும் ஜனாதிபதி செயலகம் இது பற்றி விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 08-18-2005, 05:37 PM
[No subject] - by simran2005 - 08-19-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 08-20-2005, 04:08 PM
[No subject] - by Birundan - 08-22-2005, 05:28 PM
[No subject] - by ஊமை - 08-24-2005, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)