Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ செய்திகள்..
#3
யுத்த நிறுத்த உடன்படிக்கையை பேணிப் பாதுகாப்பதற்கான பொறுப்பை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அறிவிக்குமாறு நோர்வே சமாதானப் பிரதிநிதிகளிடம் சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா கேட்டுக்கொண்டுள்ளார்.


அமைச்சர் கதிர்காமரின் கொலை தொடர்பாக மிகுந்த கவலையடைந்துள்ளதாக அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அரசுத் தலைவர் சந்திரிகா தெரிவித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சனை கடந்த திங்கட்கிழமை சந்தித்த போது அமைச்சர் கதிர்காமர் கொலைக்குப்பின்னர் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை எடுத்துக்கூறி அரசாங்கமும் தாமும் மிகுந்த கவலையடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளிடம் அறிவிக்குமாறு அரசுத் தலைவர் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.

குறிப்பாக யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரு தரப்பாரும் மதித்து பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் அவசியத்தை விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் அரசுத் தலைவர் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் நிலவுகின்ற சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளதாக அரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதினம்
Reply


Messages In This Thread
என்ன கொடுமையப்பா இது - by ஊமை - 08-18-2005, 03:29 PM
[No subject] - by வினித் - 08-18-2005, 05:37 PM
[No subject] - by simran2005 - 08-19-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 08-20-2005, 04:08 PM
[No subject] - by Birundan - 08-22-2005, 05:28 PM
[No subject] - by ஊமை - 08-24-2005, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)