06-21-2003, 10:09 AM
அறியப்படாதவர் மீது
ஒரு அஞ்சலிப் பாடல்
-வி யாசன்
என்றும் போலத்தான் அன்றும் விடிந்தது
எந்த மாற்றமுமில்லாது
வழியில் அகப்பட்டதனைத்தையும் தழுவியபடி
நேற்றைய இரவைக்கீறி காற்று உயிர்ப்புற்றுலவியது.
நம்பிக்கையே நாளாந்தமாகிய வாசல்களில்
மெல்ல மெல்ல வெய்யில் பரவியது.
அவிச்சலில்லாத அந்த ஆனந்தப்பொழுதில்
வன்னியின் துயரத்துள்ளும் ஒரு சுகம்தெரிந்தது.
பாதங்களில் வேகம்புூட்டாத பரவசத்துடன்
விடுதலை மனிதர்கள் வெளியே வந்தனர்.
எந்தவானொலி என்ன சொல்லிற்றோ தெரியாது.
முகிலுரசிய தலைகளில் முகங்கள் புூவனமாயின.
மகிழ்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும் போல
ஆனந்தத்தவிப்பில் பலர் அழுதேவிட்டனர்.
வாய்வந்த வார்த்தைகளும் கூட
தொண்டையில் சிக்குண்டு திணறின
எடுத்தது எடுத்தபடியும் போட்டது போட்டபடியும்
புழுகமேறிய தமிழர் சைக்கிளேறி உலாப்போயினர்.
நெஞ்சுக்குள் சந்தோசம் நிறையும்போது
புூரிப்பின் வேர்களில் யாருக்கும் புூப்புூக்கும்.
புூத்துச் சிலிர்த்துப்போனது எம்புூமி.
காற்றின் திசைகளெல்லாம் கட்டுநாயக்காவே விரிந்தது.
பன்னிரண்டு குண்டுக்குருவிகளின் குடலுருவிப்போனதாம்.
எவரோ எய்த அம்பு
வீணான பொல்லாப்பேதும் வியாசனுக்கு வேண்டாமே
எய்தவரை ஓ எனக்கொள்வோம்
அது யாராகவும் இருந்துவிட்டுப்போகட்டும்,
அம்பெய்த அபிமன்யுூக்களைப் பற்றியே
எல்லாவாய்களும் பேசின.
அருச்சுனனின் புதல்வர்களே!
உங்களுக்கெம் நன்றியென உரைத்தது காற்று.
தன் சாபக் கவிதைகள் பலித்ததெனச்
சந்தோஸித்தான் வியாசன்.
வானத்தாயும் வஞ்சிக்கவில்லை
அன்று பாளம்பிளந்த எம்மண்மீது
சில தூறல்கள் விழுந்தன.
ஓம்: ஓமெனத் தேவருரைத்த வாழ்த்தொலி
எல்லாச் செவிகளிலும் கேட்டது.
வெற்றிப்பெருமிதத்தின் வீறாய்ப்பிலிருந்தாள்
கொற்றப்பெருமாட்டி,
உயிரற்ற யந்திரங்கள் மீது இத்தனை கோபமா? என்று
'அரசியற் சாதுரியர்' யாரும் ஆச்சரியப்படலாம்,
எள்ளி நகையாடியும் சிலர் எழுதலாம்.
கட்டுநாயக்காவில் கருகிப்போனவை
வெட்டுக்கத்தியும் சின்னப் புட்டுப்பானையுமல்ல,
எரிந்தது பகைவரின் பலம்,
அழிந்தது அவர்களின் ஆணவம்,
எங்கள் உயிருறிஞ்சிக் குடித்தவை
இந்த ஊத்தைப் பேய்கள் தான்.
நவாலியிலும்; நாகர்கோவிலிலும்
நரபலியெடுத்த ரத்தப்பிசாசுகளிவை.
கிளாலியிலும்; சுதந்திரபுரத்திலும்
எம் உறவுகளைத் தீயிட்ட எரிமாடன்கள் இவைதான்,
மந்துவிலிலும், மாத்தளனிலும்
சின்னப்பிஞ்சுகளின் உயிர்தின்ற வன்மவல்லூறுகளிவை.
இந்த மகிழ்ச்சி இருக்காதா எங்களுக்கு?
குண்டுகொட்டிய போது கீழே நின்றவருக்கு
கொடுத்த தண்டனையறிந்து கொள்ளை மகிழ்ச்சி
குருதியும் சதையுமாகக் கூட்டியள்ளியவருக்குத்தான்
இந்த அழிப்பின் பெறுமதி புரியும்,
பிஞ்சைப் பறிகொடுத்த பெருதுயரில்
நெஞ்சிலும் தலையிலுமடித்து ஓலமிட்டாளே ஒருதாய்
அவளைக்கேளுங்கள்
கட்டுநாயக்காவுக்கு அவளின் கருவறை பதில்சொல்லும்.
குண்டுபிளந்த தாயின் மார்பருகே கிடந்து
பச்சைப்புல்லொன்று பாலுக்கழுததே
அந்தச் சந்திரவதனத்துத் தளிரைக் கேளுங்கள்
முற்றாக எரியவில்லையா கட்டுநாயக்கா?
என்று மூச்செரியும்.
ஊரிழந்த துயரில் உருகியபடி
கிளாலிக்கரையில் வந்து கிடந்தோமே.
விட்டானா பாவி
விரட்டி விரட்டி உயிர்ப்புூக்களைக் கிள்ளியெறிந்துவிட்டு
கட்டுநாயக்காவிற்தானே களைப்பாறினான்
நெருப்பிட்டது யாரெனத் தெரியாதெனினும்
தகும் செயலாற்றியவர்களுக்கு எம் தலைசாய்த்தோம்.
'செட்டிக்குத்தானே தெரியும் வட்டியும் முதலும்'
இந்திரபுரியை விற்றுத்தான் இவை இறக்குமதியாயின.
இந்த வல்லூறுகள் வெறும் யந்திரங்களல்ல.
எதிரி தவம்செய்து பெற்ற வரங்களிவை.
எங்களைக் கொல்லவென வாங்கிய நாகாஸ்த்திரங்கள்.
உட்புக முடியாதெனும் நம்பிக்கையில்
வித்தகர் வகுத்த பத்மவியுூகம் பிளந்து
உள்ளே புகுந்தவர் யாரெனத் தெரியாதெனினும்
அவர்கள் சென்ற திசைநோக்கிச் சிரம் சாய்த்தோம்.
விமானத்தளத்தின் அருகுள்ள விளையாட்டுத்திடலில்
பழிதீர்க்கப் போனவரின் பாதணிகள் கிடந்தனவாம்
செருப்புகளை எடுத்துவாருங்கள் சிம்மானசனத்தில் வைப்போம்.
சென்றவர்கள் உண்டெறிந்த மீதவுணவிருந்ததாம்
எடுத்து வாருங்கள் ஒரு பருக்கையுண்டாலே போதும்
எமக்கும் பலம் பெருகும்.
வண்டிலில் வந்தார்கள், வாய்க்காலால் வந்தார்கள்
கடலால் வந்தார்கள்
காற்றாகிக் குதித்தார்களென்று கூறுகின்றீர்களே
வெற்றுப்பீரங்கிகளே உங்களுக்கு வெட்கமே கிடையாதா?
கண்ணி வயல் கடந்து
காவல் அரண் கடந்து, மின்சாரவேலி மீதேறி
வந்தவர்களென்று கூறும்போதில்
பெருமையில் நாங்கள் புல்லரித்துப் போகிறோம்.
சிரசேறும் செருக்கில் திணறுகிறோம்.
புத்தபெருமானே!
சத்தியமாய் எங்களுக்குத் தெரியாது.
வந்தவர்கள் தமிழரென்பதால் வாழ்த்துகிறோம்.
அவர்கள் கொன்றவையெல்லாம்
முன்னரெம்மைக் கொன்றவையென்பதால்
நாலுவரியெழுதி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம்.
கழிவு நீர் வாய்க்காலுக்குள்ளாலே நடந்தார்களாம்
வாய்க்காலே! உமக்கெமது நன்றி!
தென்னை மரத் தோப்புக்குள்ளே திரிந்தார்களாம்
தென்னை மரங்களே! உங்களுக்கெம் நன்றி
மின்சாரவெட்டுக்கு உத்தரவிட்ட ரத்வத்தையாரே!
நன்றிக்குரியவர் நீருமானீர்.
கட்டுநாயக்காவின் தலையில் குட்டியவரே
நீங்கள் யார்பெற்ற பிள்ளைகளோ நாமறியோம்.
உங்கள் பெயரும் அறியோம்
உங்கள் ஊரும் தெரியோம்
ஆயினுமுமக்கு ஆயிரம் தீபங்களேற்றினோம்.
நாயினும் கீழாய் நலிவுற்ற தமிழினத்தை
உலகத்தின் உதடுகளால் உச்சரிக்க வைத்தவரே!
எழுதும் எந்தவரியும் உங்களிடம் தோற்கும்,
நீங்ளெழுதிய வரிகள் மட்டுமே நிலைக்கும்.
பிரிந்தோம்
மீண்டும் சந்திப
ஒரு அஞ்சலிப் பாடல்
-வி யாசன்
என்றும் போலத்தான் அன்றும் விடிந்தது
எந்த மாற்றமுமில்லாது
வழியில் அகப்பட்டதனைத்தையும் தழுவியபடி
நேற்றைய இரவைக்கீறி காற்று உயிர்ப்புற்றுலவியது.
நம்பிக்கையே நாளாந்தமாகிய வாசல்களில்
மெல்ல மெல்ல வெய்யில் பரவியது.
அவிச்சலில்லாத அந்த ஆனந்தப்பொழுதில்
வன்னியின் துயரத்துள்ளும் ஒரு சுகம்தெரிந்தது.
பாதங்களில் வேகம்புூட்டாத பரவசத்துடன்
விடுதலை மனிதர்கள் வெளியே வந்தனர்.
எந்தவானொலி என்ன சொல்லிற்றோ தெரியாது.
முகிலுரசிய தலைகளில் முகங்கள் புூவனமாயின.
மகிழ்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும் போல
ஆனந்தத்தவிப்பில் பலர் அழுதேவிட்டனர்.
வாய்வந்த வார்த்தைகளும் கூட
தொண்டையில் சிக்குண்டு திணறின
எடுத்தது எடுத்தபடியும் போட்டது போட்டபடியும்
புழுகமேறிய தமிழர் சைக்கிளேறி உலாப்போயினர்.
நெஞ்சுக்குள் சந்தோசம் நிறையும்போது
புூரிப்பின் வேர்களில் யாருக்கும் புூப்புூக்கும்.
புூத்துச் சிலிர்த்துப்போனது எம்புூமி.
காற்றின் திசைகளெல்லாம் கட்டுநாயக்காவே விரிந்தது.
பன்னிரண்டு குண்டுக்குருவிகளின் குடலுருவிப்போனதாம்.
எவரோ எய்த அம்பு
வீணான பொல்லாப்பேதும் வியாசனுக்கு வேண்டாமே
எய்தவரை ஓ எனக்கொள்வோம்
அது யாராகவும் இருந்துவிட்டுப்போகட்டும்,
அம்பெய்த அபிமன்யுூக்களைப் பற்றியே
எல்லாவாய்களும் பேசின.
அருச்சுனனின் புதல்வர்களே!
உங்களுக்கெம் நன்றியென உரைத்தது காற்று.
தன் சாபக் கவிதைகள் பலித்ததெனச்
சந்தோஸித்தான் வியாசன்.
வானத்தாயும் வஞ்சிக்கவில்லை
அன்று பாளம்பிளந்த எம்மண்மீது
சில தூறல்கள் விழுந்தன.
ஓம்: ஓமெனத் தேவருரைத்த வாழ்த்தொலி
எல்லாச் செவிகளிலும் கேட்டது.
வெற்றிப்பெருமிதத்தின் வீறாய்ப்பிலிருந்தாள்
கொற்றப்பெருமாட்டி,
உயிரற்ற யந்திரங்கள் மீது இத்தனை கோபமா? என்று
'அரசியற் சாதுரியர்' யாரும் ஆச்சரியப்படலாம்,
எள்ளி நகையாடியும் சிலர் எழுதலாம்.
கட்டுநாயக்காவில் கருகிப்போனவை
வெட்டுக்கத்தியும் சின்னப் புட்டுப்பானையுமல்ல,
எரிந்தது பகைவரின் பலம்,
அழிந்தது அவர்களின் ஆணவம்,
எங்கள் உயிருறிஞ்சிக் குடித்தவை
இந்த ஊத்தைப் பேய்கள் தான்.
நவாலியிலும்; நாகர்கோவிலிலும்
நரபலியெடுத்த ரத்தப்பிசாசுகளிவை.
கிளாலியிலும்; சுதந்திரபுரத்திலும்
எம் உறவுகளைத் தீயிட்ட எரிமாடன்கள் இவைதான்,
மந்துவிலிலும், மாத்தளனிலும்
சின்னப்பிஞ்சுகளின் உயிர்தின்ற வன்மவல்லூறுகளிவை.
இந்த மகிழ்ச்சி இருக்காதா எங்களுக்கு?
குண்டுகொட்டிய போது கீழே நின்றவருக்கு
கொடுத்த தண்டனையறிந்து கொள்ளை மகிழ்ச்சி
குருதியும் சதையுமாகக் கூட்டியள்ளியவருக்குத்தான்
இந்த அழிப்பின் பெறுமதி புரியும்,
பிஞ்சைப் பறிகொடுத்த பெருதுயரில்
நெஞ்சிலும் தலையிலுமடித்து ஓலமிட்டாளே ஒருதாய்
அவளைக்கேளுங்கள்
கட்டுநாயக்காவுக்கு அவளின் கருவறை பதில்சொல்லும்.
குண்டுபிளந்த தாயின் மார்பருகே கிடந்து
பச்சைப்புல்லொன்று பாலுக்கழுததே
அந்தச் சந்திரவதனத்துத் தளிரைக் கேளுங்கள்
முற்றாக எரியவில்லையா கட்டுநாயக்கா?
என்று மூச்செரியும்.
ஊரிழந்த துயரில் உருகியபடி
கிளாலிக்கரையில் வந்து கிடந்தோமே.
விட்டானா பாவி
விரட்டி விரட்டி உயிர்ப்புூக்களைக் கிள்ளியெறிந்துவிட்டு
கட்டுநாயக்காவிற்தானே களைப்பாறினான்
நெருப்பிட்டது யாரெனத் தெரியாதெனினும்
தகும் செயலாற்றியவர்களுக்கு எம் தலைசாய்த்தோம்.
'செட்டிக்குத்தானே தெரியும் வட்டியும் முதலும்'
இந்திரபுரியை விற்றுத்தான் இவை இறக்குமதியாயின.
இந்த வல்லூறுகள் வெறும் யந்திரங்களல்ல.
எதிரி தவம்செய்து பெற்ற வரங்களிவை.
எங்களைக் கொல்லவென வாங்கிய நாகாஸ்த்திரங்கள்.
உட்புக முடியாதெனும் நம்பிக்கையில்
வித்தகர் வகுத்த பத்மவியுூகம் பிளந்து
உள்ளே புகுந்தவர் யாரெனத் தெரியாதெனினும்
அவர்கள் சென்ற திசைநோக்கிச் சிரம் சாய்த்தோம்.
விமானத்தளத்தின் அருகுள்ள விளையாட்டுத்திடலில்
பழிதீர்க்கப் போனவரின் பாதணிகள் கிடந்தனவாம்
செருப்புகளை எடுத்துவாருங்கள் சிம்மானசனத்தில் வைப்போம்.
சென்றவர்கள் உண்டெறிந்த மீதவுணவிருந்ததாம்
எடுத்து வாருங்கள் ஒரு பருக்கையுண்டாலே போதும்
எமக்கும் பலம் பெருகும்.
வண்டிலில் வந்தார்கள், வாய்க்காலால் வந்தார்கள்
கடலால் வந்தார்கள்
காற்றாகிக் குதித்தார்களென்று கூறுகின்றீர்களே
வெற்றுப்பீரங்கிகளே உங்களுக்கு வெட்கமே கிடையாதா?
கண்ணி வயல் கடந்து
காவல் அரண் கடந்து, மின்சாரவேலி மீதேறி
வந்தவர்களென்று கூறும்போதில்
பெருமையில் நாங்கள் புல்லரித்துப் போகிறோம்.
சிரசேறும் செருக்கில் திணறுகிறோம்.
புத்தபெருமானே!
சத்தியமாய் எங்களுக்குத் தெரியாது.
வந்தவர்கள் தமிழரென்பதால் வாழ்த்துகிறோம்.
அவர்கள் கொன்றவையெல்லாம்
முன்னரெம்மைக் கொன்றவையென்பதால்
நாலுவரியெழுதி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம்.
கழிவு நீர் வாய்க்காலுக்குள்ளாலே நடந்தார்களாம்
வாய்க்காலே! உமக்கெமது நன்றி!
தென்னை மரத் தோப்புக்குள்ளே திரிந்தார்களாம்
தென்னை மரங்களே! உங்களுக்கெம் நன்றி
மின்சாரவெட்டுக்கு உத்தரவிட்ட ரத்வத்தையாரே!
நன்றிக்குரியவர் நீருமானீர்.
கட்டுநாயக்காவின் தலையில் குட்டியவரே
நீங்கள் யார்பெற்ற பிள்ளைகளோ நாமறியோம்.
உங்கள் பெயரும் அறியோம்
உங்கள் ஊரும் தெரியோம்
ஆயினுமுமக்கு ஆயிரம் தீபங்களேற்றினோம்.
நாயினும் கீழாய் நலிவுற்ற தமிழினத்தை
உலகத்தின் உதடுகளால் உச்சரிக்க வைத்தவரே!
எழுதும் எந்தவரியும் உங்களிடம் தோற்கும்,
நீங்ளெழுதிய வரிகள் மட்டுமே நிலைக்கும்.
பிரிந்தோம்
மீண்டும் சந்திப

