08-17-2005, 07:56 PM
அநுரா பண்டாரநாயக்க புதிய வெளிநாட்டமைச்சராக நாளை சத்தியப்பிரமாணம்
[வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2005, 01:13 ஈழம்] [கொழும்பு நிருபர்]
புதிய வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரரும் உல்லாசத்துறை அமைச்சருமான அநுரா பண்டாரநாயக்க, தனது பதவியின் மூலம், சிங்கள மொழி மற்றும் பௌத்த மதத்திற்கு மீண்டும் புகழ் தேடிக்கொடுக்கும் வகையில் செயற்படப்போவதாக சூளுரைத்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வந்து சிறீலங்காவில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல, அவை உறுதியளித்த சுனாமி நிவாரணத்தையோ அல்லது புனருத்தாரணப் பணிகளையே சரியாக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த அநுரா, தனது புதிய பதவியில், அவர்களது நாட்டின் தலைமை நிறுவனங்களை அணுகி இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அநுரா பண்டாரநாயக்க, தனது புதிய அமைச்சிற்கான பொறுப்பை ஏற்று, ஜனாதிபதி சந்திரிகா முன்னே பதவிப் பிரமாணம் எடுக்கவுள்ளதாகவும், இந்நிகழ்வு அதிகமாக நாளை நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.
[வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2005, 01:13 ஈழம்] [கொழும்பு நிருபர்]
புதிய வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரரும் உல்லாசத்துறை அமைச்சருமான அநுரா பண்டாரநாயக்க, தனது பதவியின் மூலம், சிங்கள மொழி மற்றும் பௌத்த மதத்திற்கு மீண்டும் புகழ் தேடிக்கொடுக்கும் வகையில் செயற்படப்போவதாக சூளுரைத்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வந்து சிறீலங்காவில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல, அவை உறுதியளித்த சுனாமி நிவாரணத்தையோ அல்லது புனருத்தாரணப் பணிகளையே சரியாக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த அநுரா, தனது புதிய பதவியில், அவர்களது நாட்டின் தலைமை நிறுவனங்களை அணுகி இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அநுரா பண்டாரநாயக்க, தனது புதிய அமைச்சிற்கான பொறுப்பை ஏற்று, ஜனாதிபதி சந்திரிகா முன்னே பதவிப் பிரமாணம் எடுக்கவுள்ளதாகவும், இந்நிகழ்வு அதிகமாக நாளை நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

