06-21-2003, 10:08 AM
விண்பொய்க்கா வளமெறிந்து, விரிசுடர் எழில்வீசும்
பொன்னான புூமியிலே
மண்வாசத்துடனேயே மலர்வாசம் கமழ்ந்து நிற்க
மாடிணைத்து ஏரோடி மணிமணியாய்
நெல்விதைத்து நெற்றியுடன் நிலமகளும்
வியர்வையாலே உறவாடி
பல்வளமும் பொலிந்தொளிர்ந்த பொன்நாடு - எம்நாடு
பஞ்சத்தெரிகுடிலாய் பாழ்பட்டுப் போனதென்னே!!
தென்றல் தவழ்ந்து வர தெம்மாங்குப் பாட்டிசைத்து
தேரோடித் திழைத்திருந்த தேன்தமிழ் ஈழமிது
கன்றல்க் காடாகி கயல்பாய்ந்த அருவிகளும் - கானகத்துச்
சுடுகாடாய் கருகிப் போனதென்னே!
புழுதி புரட்டியிங்கு பொன்னெடுத்த பார்விட்டு
புூச்சிகளாய் கலைந்தோடி
அழுதிங்கு அலைகின்றோம் - ஆதரிப்பார் யாருமின்றி
அயலவனின் வாசலிலே.
அன்னமிட்டு ஆதரித்து அன்புடனே அரவணைத்து
அணைவோரை அணைப்போமே - இன்று
சின்னதுகள் வாய்வயிறு ஒட்டியிங்கு அலறுதய்யா - எம்
சீர்பாய்ந்த பாரதுவும் செங்குருதிச் சிவப்பாச்சு!
ஆராரோ ஆரிவரோ அழகாக ஒலித்த மண்ணில் இன்று
ஆவென்று வாய்பிளந்து ஓலமிடும் சாவோசை!
ஆராரோ அடிமிதித்து அழகுநகர் பாழாச்சு!!
ஆவியுடன் பேயலையும் ஆளில்லா வீடாச்சு!!!
கோலாடிக் கும்மியெடுத்து கோயிலில் விளக்கேற்றி
காலெடுத்துப் பரதமாடிக் கனிவுூறக் கவியிசைத்து
மேலாக நிமிர்ந்ததெம் மேனிநிலம் போனதய்யா!! - எம்
மாதாவும் எங்கே? மால்மருகன் கோயிலெங்கே?
யாதெவையும் விட்டோடி யாசகராய் ஆனமிங்கே?
யாழெடுத்த நிலந்தன்னின் யௌவனம் தானெங்கே?
ஏதெவையும் போனாலும் ஏற்றமுறு வீரமது
எங்கேயும் போகவில்லை! எழுந்துவிட்டால் ஏதுஇல்லை?
போர்மேகம் ஓடிப் புதுப் பொலிவு புலர்ந்திடும்
பைந்தமிழ் நிலமெல்லாம் பசுமை புத்தொளிரும்
வேரோடு சாய்ந்துவிடும்லு}
வெறிகொண்ட வேற்றரசு!
தாரோடு நாமாண்ட தாயகம் மீண்டிடும்,
தண்தமிழும் இசைபாடும் - தீந்தென்றல் விளையாடும்
ஏரோடு மீண்டுமங்கு ஏற்றமும் எழுந்துவிடும்! - இனியென்றும்
எம்மினம் தலைநிமிரும்!! - இதைத் தரணி போற்றும
பொன்னான புூமியிலே
மண்வாசத்துடனேயே மலர்வாசம் கமழ்ந்து நிற்க
மாடிணைத்து ஏரோடி மணிமணியாய்
நெல்விதைத்து நெற்றியுடன் நிலமகளும்
வியர்வையாலே உறவாடி
பல்வளமும் பொலிந்தொளிர்ந்த பொன்நாடு - எம்நாடு
பஞ்சத்தெரிகுடிலாய் பாழ்பட்டுப் போனதென்னே!!
தென்றல் தவழ்ந்து வர தெம்மாங்குப் பாட்டிசைத்து
தேரோடித் திழைத்திருந்த தேன்தமிழ் ஈழமிது
கன்றல்க் காடாகி கயல்பாய்ந்த அருவிகளும் - கானகத்துச்
சுடுகாடாய் கருகிப் போனதென்னே!
புழுதி புரட்டியிங்கு பொன்னெடுத்த பார்விட்டு
புூச்சிகளாய் கலைந்தோடி
அழுதிங்கு அலைகின்றோம் - ஆதரிப்பார் யாருமின்றி
அயலவனின் வாசலிலே.
அன்னமிட்டு ஆதரித்து அன்புடனே அரவணைத்து
அணைவோரை அணைப்போமே - இன்று
சின்னதுகள் வாய்வயிறு ஒட்டியிங்கு அலறுதய்யா - எம்
சீர்பாய்ந்த பாரதுவும் செங்குருதிச் சிவப்பாச்சு!
ஆராரோ ஆரிவரோ அழகாக ஒலித்த மண்ணில் இன்று
ஆவென்று வாய்பிளந்து ஓலமிடும் சாவோசை!
ஆராரோ அடிமிதித்து அழகுநகர் பாழாச்சு!!
ஆவியுடன் பேயலையும் ஆளில்லா வீடாச்சு!!!
கோலாடிக் கும்மியெடுத்து கோயிலில் விளக்கேற்றி
காலெடுத்துப் பரதமாடிக் கனிவுூறக் கவியிசைத்து
மேலாக நிமிர்ந்ததெம் மேனிநிலம் போனதய்யா!! - எம்
மாதாவும் எங்கே? மால்மருகன் கோயிலெங்கே?
யாதெவையும் விட்டோடி யாசகராய் ஆனமிங்கே?
யாழெடுத்த நிலந்தன்னின் யௌவனம் தானெங்கே?
ஏதெவையும் போனாலும் ஏற்றமுறு வீரமது
எங்கேயும் போகவில்லை! எழுந்துவிட்டால் ஏதுஇல்லை?
போர்மேகம் ஓடிப் புதுப் பொலிவு புலர்ந்திடும்
பைந்தமிழ் நிலமெல்லாம் பசுமை புத்தொளிரும்
வேரோடு சாய்ந்துவிடும்லு}
வெறிகொண்ட வேற்றரசு!
தாரோடு நாமாண்ட தாயகம் மீண்டிடும்,
தண்தமிழும் இசைபாடும் - தீந்தென்றல் விளையாடும்
ஏரோடு மீண்டுமங்கு ஏற்றமும் எழுந்துவிடும்! - இனியென்றும்
எம்மினம் தலைநிமிரும்!! - இதைத் தரணி போற்றும

