06-21-2003, 10:07 AM
காலத்தின் கருவுூலங்கள்
-ஆதிலட்சுமி சிவகுமார்.
என் ஜென்மங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறவே
என்னைத்தேடி எங்கேயும் நீ அலையவேண்டாம்.
கண்ணீரில் உன்னைக் கரைக்கவேண்டாம்.
இனிமைகளை துறக்கவேண்டாம்
பனியில் நனைந்து முகம்சிலிர்த்து நிற்கும்
புூக்களை உற்றுப்பார்; அதில்
என் முகம் இருக்கிறது.
காலையில் கண்களை விழித்தவுடன்
யன்னலூடாக ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறதே காற்று
ஆழமாக அக்காற்றை உள்ளிளுத்துப்பார்; அதில் என்
மூச்சின் வாசத்தை உணர்வாய்!
எதிரியிடமிருந்து மீட்டெடுத்த நிலப்பரப்புகளில்
அவதானமாய் அடியெடுத்து நடந்துபார்!
அங்கே என் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன.
வேகமாகப் போகும் வாகனங்களின் பின்னே
எழுந்து பரவி அடங்குகிறதே புழுதி
அதில் என் உடற்கலங்கள் உருமாறியுள்ளன.
நிலவு பிரிந்த வானத்தில் தனித்து நின்று
கண்சிமிட்டுகின்றனவே நட்சத்திரங்கள்
அவற்றில் என்புன்னகைகள் பொதிந்துள்ளன.
மூசி எழுந்து வந்து உன் முன்னால் மண்டியிட்டு
திரும்பிச் செல்கின்றனவே திரைகள்
அவற்றில் என் ஆன்மா மிதக்கின்றது.
என்னைத்தேடி நீ எங்கேயும் அலையவேண்டாம்
காலத்தின் கருவுூலமாய் உன்காலடியில் கிடக்
-ஆதிலட்சுமி சிவகுமார்.
என் ஜென்மங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறவே
என்னைத்தேடி எங்கேயும் நீ அலையவேண்டாம்.
கண்ணீரில் உன்னைக் கரைக்கவேண்டாம்.
இனிமைகளை துறக்கவேண்டாம்
பனியில் நனைந்து முகம்சிலிர்த்து நிற்கும்
புூக்களை உற்றுப்பார்; அதில்
என் முகம் இருக்கிறது.
காலையில் கண்களை விழித்தவுடன்
யன்னலூடாக ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறதே காற்று
ஆழமாக அக்காற்றை உள்ளிளுத்துப்பார்; அதில் என்
மூச்சின் வாசத்தை உணர்வாய்!
எதிரியிடமிருந்து மீட்டெடுத்த நிலப்பரப்புகளில்
அவதானமாய் அடியெடுத்து நடந்துபார்!
அங்கே என் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன.
வேகமாகப் போகும் வாகனங்களின் பின்னே
எழுந்து பரவி அடங்குகிறதே புழுதி
அதில் என் உடற்கலங்கள் உருமாறியுள்ளன.
நிலவு பிரிந்த வானத்தில் தனித்து நின்று
கண்சிமிட்டுகின்றனவே நட்சத்திரங்கள்
அவற்றில் என்புன்னகைகள் பொதிந்துள்ளன.
மூசி எழுந்து வந்து உன் முன்னால் மண்டியிட்டு
திரும்பிச் செல்கின்றனவே திரைகள்
அவற்றில் என் ஆன்மா மிதக்கின்றது.
என்னைத்தேடி நீ எங்கேயும் அலையவேண்டாம்
காலத்தின் கருவுூலமாய் உன்காலடியில் கிடக்

