Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்ரநெற் காதல்கள்
#12
[size=18]கதை 4 : சக்களத்தி சண்டை

ஆறு மாதங்களுக்கு முன் நானும் என் ரூம் மேட் அன்னாவும் சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கினோம். பாடம் தொடர்பாக நிறைய கட்டுரைகளும் உதவிகளும் இன்டர்நெட்டில் கிடைக்கும் என்பதற்காகத்தான் அதை வாங்கினோம். ஆனால் தற்செயலாக ஒரு நாள் சாட் செய்யப் போக, அதற்குப் பிறகு நாங்கள் கம்ப்யூட்டரை சாட் செய்யத்தான் பயன்பத்தினோம்!

ஒரு நாள் சாட் செய்து கொண்டிருந்தபோது யாரோ ஒருவன் "ஹாய்!" என்று ஒரு மெசேஜ் அனுப்பினான். நானும் ஹாய் சொல்லி அவனுடன் பேச ஆரம்பித்தேன். அவன் பெயர் ஸ்டீவ். கொஞ்ச நேரத்தில் அவன் தன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான். ஸ்டீவ் வளவள என்று பேசிக்கொண்டே இருந்தாலும் எங்கள் சாட் ஜாலியாக இருந்தது.

அவன் தன் ஆறு மாத கேர்ள்ஃப்ரெண்ட் பற்றி சொன்னான். எங்கள் முதல் சந்திப்பிலேயே நாங்கள் மூன்று மணி நேரம் பேசினோம். நாம் மீண்டும் சந்திப்போம் என்று அவன் சொல்ல, அன்றைய சாட் அதோடு முடிந்தது. ஸ்டீவும் நானும் தினமும் சாட் செய்தோம். அவனுடன் பேசப் பேச எங்களுக்குள் இடையில் எத்தனை விஷயம் ஒத்துப் போனது என்று தெரிந்தது.

இதற்கிடையில் அவன் கேர்ள்ஃப்ரெண்ட் தாரா அவனுக்குப் பிரச்னை கொடுக்க ஆரம்பித்தாள். ஸ்டீவின் காதலி சரியான பொறாமைப் பேய். ஸ்டீவ் வேறு பெண்களுடன் பேசினால் அவனை ஆயிரம் கேள்விகள் கேட்பாளாம். ஃபோனில் பேசினால், "யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டு நச்சரிப்பாளாம். தாராவுக்கு நாங்கள் மணிக்கணக்கில் சாட் செய்வதைப் பார்த்து எரிச்சல்.

நாங்கள் வெறும் ஃப்ரெண்ட்ஸ்தான் என்று ஸ்டீவ் சொல்லிப் பார்த்தான். தாரா அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பிறகு அவனுக்கு அன்னாவை ஆன்லைனில் அறிமுகம் செய்து வைத்தேன். அவளும் ஸ்டீவுடன் சாட் செய்யத் தொடங்க, தாராவுக்கு வெறியே வந்துவிட்டது. ஸ்டீவைப் பற்றி அவள் புலம்பியதெல்லாம் அபத்தமாக இருந்தது.

ஸ்டீவ் வீட்டில் யாருக்கும் தாராவைப் பிடிக்காது. அவன் நண்பர்களுக்கும் அவளைப் பிடிக்காது. ஸ்டீவ் தனியாக ஒரு ரூமில் தாராவுடன் தங்கியிருந்தான். தாரா தன்னுடன் இருப்பதே இல்லை என்று ஸ்டீவ் வருத்தப்பட்டான். சில சமயம் தாரா ஊர் சுற்றப் போய்விட்டு சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் திரும்பி வராமல் இருப்பாள்.

தாராவின் சில்லறை புத்தியை சகித்துக் கொள்ள புத்தர் மாதிரி இருக்கவேண்டும். சில சமயம் அவள் ஸ்டீவின் பெயரில் ஆன்லைனில் வந்து என்னையும் அன்னாவையும் வெறுப்பேற்றுவாள். அவளும் ஸ்டீவும் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகப் புளுகுவாள். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பாள்.

நாங்கள் ஸ்டீவை அவளிடமிருந்து "திருட" முயற்சி செய்யவில்லை என்று நாங்களும் அவளுக்கு எடுத்து சொன்னோம். அவள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் நிலைமை ரொம்ப மோசமானது. தாரா ஸ்டீவை ஏமாற்றுகிறாள் என்று ஸ்டீவின் அண்ணன் எங்களிடம் சொன்னான். தாராவை விட்டுப் பிரிந்துவிடு என்று நானும் அன்னாவும் ஸ்டீவுக்கு அறிவுரை சொன்னோம். இதற்கிடையில் ஸ்டீவ் மெல்ல மெல்ல என்னைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான்!

உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றான். வேறு யரையும் விட என்னை விரும்புவதாகச் சொன்னான். ஸ்டீவ் அன்னாவிடமும் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறான் போலிருக்கிறது. "ஸ்டீவ் தான் உனக்கேற்ற ஆள்" என்று அவளும் விடாமல் சொல்ல ஆரம்பித்தாள்.

ஸ்டீவ் கடைசியில் தாராவுக்கு குட்பை சொன்னான். அதுவும் நான் சொன்னதற்காக. தாரா அதை வைத்து டிராமா நடத்தினாள். அவன் கண்ணெதிரிலேயே மாத்திரைகள் விழுங்கினாள். அவை சாதாரண காய்ச்சல் மாத்திரைகள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் ஸ்டீவுக்குத் தெரியாது.

ஸ்டீவை முடிந்த வரை பிளாக்மெயில் செய்யப் பார்த்தாள் தாரா. பிறகு ஸ்டீவ் தன் கையை விட்டுப் போய்விட்டான் என்று புரிந்துகொண்டு கிளம்பினாள் அவள். ஆனால் போவதற்கு முன், நாங்கள் பேசக்கூடாது என்பதற்காக ஸ்டீவின் மைக்ரோஃபோனை உடைத்துவிட்டுத்தான் போனாள்.

இப்போது எங்களுக்கு யார் தொந்தரவும் இல்லை. ஸ்டீவ் மேல் எனக்குப் பைத்தியமாகிவிட்டது! ஸ்டீவ் இல்லை என்றால் அவன் அண்ணனுடனோ தங்கையுடனோ ஜாலியாக சாட் செய்துகொண்டிருப்பேன். நான் மிக விரைவில் கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று சொன்னார்கள்.

நானும் ஸ்டீவும் நேரில் சந்திப்பதுதான் எங்கள் காதலின் அடுத்த கட்டம். அதில் ஒன்றும் சிக்கல் இருக்கப் போவதில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் முன்பே ஃபோட்டோவில் பார்த்துவிட்டோம். நாங்கள் முடிந்த வரை நெருக்கமாக இருந்துவிட்டோம். எனவே ஏமாற்றத்திற்கு இடமில்லை. நாங்கள் இருவரும் இப்போது அந்த நாளுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். பரிட்சை எல்லாம் முடிந்த பிறகு!



நன்றி : வெப்உலகம்

................
Reply


Messages In This Thread
[No subject] - by arun - 10-20-2003, 09:15 PM
[No subject] - by ganesh - 10-21-2003, 06:09 PM
[No subject] - by arun - 10-21-2003, 09:46 PM
[No subject] - by Paranee - 10-22-2003, 05:23 AM
[No subject] - by shanthy - 10-22-2003, 08:08 AM
[No subject] - by veera - 10-22-2003, 09:19 AM
[No subject] - by ganesh - 10-22-2003, 05:48 PM
[No subject] - by nalayiny - 10-22-2003, 06:21 PM
[No subject] - by arun - 10-22-2003, 07:30 PM
[No subject] - by Mathivathanan - 10-22-2003, 07:44 PM
[No subject] - by arun - 10-22-2003, 07:50 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 08:19 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:54 AM
[No subject] - by nalayiny - 10-23-2003, 03:37 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 03:48 PM
[No subject] - by arun - 10-23-2003, 07:29 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:26 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:27 PM
[No subject] - by Kanani - 10-24-2003, 08:30 AM
[No subject] - by arun - 10-26-2003, 07:55 PM
[No subject] - by arun - 10-26-2003, 08:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)