06-21-2003, 10:06 AM
பாடகன்
ஒரு சிறிய மாலைப் பொழுது
ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமம்
இரண்டு தூங்கும் விழிகள்
முப்பது வருடங்கள்
ஐந்து யுத்தங்கள்
காலம் எனக்காக ஒரு கோதுமைத் தாழை
ஒளித்து வைக்கிறது
பாடகன் பாடுகிறான்
நெருப்பையும் அன்னியர்களையும்
மாலைப் பொழுது
மாலைப் பொழுதாகவே இருந்தது
பாடகன் பாடிக் கொண்டிருந்தான்
அவர்கள் அவனை விசாரித்தனர்
நீ ஏன் பாடுகிறாய்?
அவர்கள் அவனைக் கைது செய்கையில்
அவன் பதில் கூறுகிறான்
ஏனெனில் நான் பாடுகிறேன்
அவர்கள் அவனைச் சோதனையிட்டனர்
அவனது மார்பில் அவனது இதயம் மட்டும்
அவனது இதயத்தில் அவனது மக்கள் மட்டும்
அவனது குரலில் அவனது துயரம் மட்டும்
அவனது துயரத்தில் அவனது சிறைச்சாலை மட்டும்
அவனது சிறைச்சாலையில்
அவர்கள் தேடுதல் நடத்தினர்
சங்கிலியில் பிணைப்புண்டு கிடக்கும்
தங்களை மட்டுமே அங்கு கண்டனர்
(Pழநஅ ழக வாந டயனெ) (நிலத்தின் கவிதை) என்ற
நீண்ட கவிதையின் ஒரு பகுதி)
மஹ்முட் தர்வீஸ்
ஒரு சிறிய மாலைப் பொழுது
ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமம்
இரண்டு தூங்கும் விழிகள்
முப்பது வருடங்கள்
ஐந்து யுத்தங்கள்
காலம் எனக்காக ஒரு கோதுமைத் தாழை
ஒளித்து வைக்கிறது
பாடகன் பாடுகிறான்
நெருப்பையும் அன்னியர்களையும்
மாலைப் பொழுது
மாலைப் பொழுதாகவே இருந்தது
பாடகன் பாடிக் கொண்டிருந்தான்
அவர்கள் அவனை விசாரித்தனர்
நீ ஏன் பாடுகிறாய்?
அவர்கள் அவனைக் கைது செய்கையில்
அவன் பதில் கூறுகிறான்
ஏனெனில் நான் பாடுகிறேன்
அவர்கள் அவனைச் சோதனையிட்டனர்
அவனது மார்பில் அவனது இதயம் மட்டும்
அவனது இதயத்தில் அவனது மக்கள் மட்டும்
அவனது குரலில் அவனது துயரம் மட்டும்
அவனது துயரத்தில் அவனது சிறைச்சாலை மட்டும்
அவனது சிறைச்சாலையில்
அவர்கள் தேடுதல் நடத்தினர்
சங்கிலியில் பிணைப்புண்டு கிடக்கும்
தங்களை மட்டுமே அங்கு கண்டனர்
(Pழநஅ ழக வாந டயனெ) (நிலத்தின் கவிதை) என்ற
நீண்ட கவிதையின் ஒரு பகுதி)
மஹ்முட் தர்வீஸ்

