08-15-2005, 06:25 PM
<b>அமைச்சர் கதிர்காமரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40691000/jpg/_40691914_funesap.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பூதவுடல் இன்று பூரண அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.
மிகவும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்த இந்தத் தகனக் கிரியைகளின்போது இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் வந்து கலந்து கொண்டார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40691000/jpg/_40691896_procession_afp_cr_203.jpg' border='0' alt='user posted image'>
இன்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் அமைச்சர் கதிர்காமரின் பூதவுடல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பூரண இராணுவ மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது மகனும், மருமகனும் அவரது பூதவுடலுக்கு தீ மூட்டினார்கள்.
இந்த இறுதிக்கிரியைகளில் இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சர் யான் பீற்றர்சன், நோர்வே பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்ஹிசன் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்சித் கசூரி ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.
இலங்கை அரசின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலியுரையை நிகழ்த்தினார்.
BBC tamil
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40691000/jpg/_40691914_funesap.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பூதவுடல் இன்று பூரண அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.
மிகவும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்த இந்தத் தகனக் கிரியைகளின்போது இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் வந்து கலந்து கொண்டார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40691000/jpg/_40691896_procession_afp_cr_203.jpg' border='0' alt='user posted image'>
இன்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் அமைச்சர் கதிர்காமரின் பூதவுடல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பூரண இராணுவ மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது மகனும், மருமகனும் அவரது பூதவுடலுக்கு தீ மூட்டினார்கள்.
இந்த இறுதிக்கிரியைகளில் இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சர் யான் பீற்றர்சன், நோர்வே பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்ஹிசன் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்சித் கசூரி ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.
இலங்கை அரசின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலியுரையை நிகழ்த்தினார்.
BBC tamil

