08-14-2005, 09:42 PM
<img src='http://www.virakesari.lk/VIRA/20050815/images/index.jpg' border='0' alt='user posted image'>
இதுவரை இக் கொலை தொடர்பாக 28 தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
<b>குளியல் அறையிலிருந்து முறுக்கு,கேக்,பிஸ்கட் மீட்பு
துப்பாக்கிதாரிகள் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்தனரா?
புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம்</b>
(கிருஷ்ணி கந்தசாமி)
அமைச்சர் கதிர்காமர் மீது மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
அவற்றின் விபரம் வருமாறு:
அமைச்சர் கதிர்காமருக்கு சொந்தமான வீட்டின் பக்கவாட்டில் எதிர்ப்புறமாக அமைந்துள்ள மாடி வீடொன்றின் குளியல் அறையிலிருந்தே சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குளியல் அறையில் தற்காலிகமாக 8 அடி உயரத்தில் மரத்திலான மேடை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் சினைப்பர் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இது இரவில் நன்கு பார்க்கக் கூடியதும், சத்தமின்றி குண்டுகளை செலுத்தக் கூடியதுமாகும்.
தாக்குதலையடுத்து சுமார் 15 நிமிட நேரத்தில் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடப்பட்டுள்ளது. இதன் போது
சினைப்பர் குண்டு, வெற்று தோட்டாக்கள் ஐந்து மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குளியலறையிலிருந்து பிஸ்கட், சொக்லேட், சீஸ், கேக், பழங்கள், முறுக்கு, தண்ணீர் போத்தல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கும் அமைச்சரின் வீட்டுக்கும் இடையில் சுமார் 100 மீற்றர்களாகும். அத்துடன் தாக்குதலை மேற்கொண்டோர் ஐந்து தினங்களாவது அங்கு தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 5 தடவைகள் சினைப்பர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. அவற்றில் மூன்று அமைச்சரின் வீட்டு சுவரை துளைத்துச் சென்றுள்ளன.
இத்தாக்குதலை மேற்கொள்ளும் பொருட்டு இருவர் குறித்த பகுதியில் வந்து மறைந்திருந்திருக்கலாம் என்றும் தாக்குதலையடுத்து சுமார் 5 நிமிட நேரத்தில் அவர்கள் அங்கிருந்தும் தலைமறைவாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேற்படி தாக்குதல் இடம் பெற்ற வீடு முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு சொந்தமானதாகும். அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது உறவினரான லக்ஷ்மன் தளையசிங்கம் :வயது 58, மனைவி விபியன் செல்வலோஜினி (வயது 52) ஆகியோர் கீழ்த் தளத்தில் வசித்து வருகின்றனர். அத்துடன் இவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார்.
தங்கள் வீட்டின் மேல்மாடி பாவனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும், தாங்கள் அங்கு செல்வதில்லை என்றும் தளையசிங்கம் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன் ஆயுததாரிகள் எவ்வாறு அங்கு வந்துமறைந்திருந்து தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
ஆயுததாரிகள் இவ்வீட்டின் குளியல் அறையிலிருந்தவாறு, அமைச்சர் கதிர்காமரை நீண்டகாலம் குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தாக்குதலை நடத்தியோர் வீட்டின் கீழாக உள்ள பற்றைகளைக் கடந்து நாரஹென்பிட்டியூடாக தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
Veerakesari
இதுவரை இக் கொலை தொடர்பாக 28 தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
<b>குளியல் அறையிலிருந்து முறுக்கு,கேக்,பிஸ்கட் மீட்பு
துப்பாக்கிதாரிகள் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்தனரா?
புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம்</b>
(கிருஷ்ணி கந்தசாமி)
அமைச்சர் கதிர்காமர் மீது மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
அவற்றின் விபரம் வருமாறு:
அமைச்சர் கதிர்காமருக்கு சொந்தமான வீட்டின் பக்கவாட்டில் எதிர்ப்புறமாக அமைந்துள்ள மாடி வீடொன்றின் குளியல் அறையிலிருந்தே சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குளியல் அறையில் தற்காலிகமாக 8 அடி உயரத்தில் மரத்திலான மேடை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் சினைப்பர் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இது இரவில் நன்கு பார்க்கக் கூடியதும், சத்தமின்றி குண்டுகளை செலுத்தக் கூடியதுமாகும்.
தாக்குதலையடுத்து சுமார் 15 நிமிட நேரத்தில் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடப்பட்டுள்ளது. இதன் போது
சினைப்பர் குண்டு, வெற்று தோட்டாக்கள் ஐந்து மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குளியலறையிலிருந்து பிஸ்கட், சொக்லேட், சீஸ், கேக், பழங்கள், முறுக்கு, தண்ணீர் போத்தல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கும் அமைச்சரின் வீட்டுக்கும் இடையில் சுமார் 100 மீற்றர்களாகும். அத்துடன் தாக்குதலை மேற்கொண்டோர் ஐந்து தினங்களாவது அங்கு தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 5 தடவைகள் சினைப்பர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. அவற்றில் மூன்று அமைச்சரின் வீட்டு சுவரை துளைத்துச் சென்றுள்ளன.
இத்தாக்குதலை மேற்கொள்ளும் பொருட்டு இருவர் குறித்த பகுதியில் வந்து மறைந்திருந்திருக்கலாம் என்றும் தாக்குதலையடுத்து சுமார் 5 நிமிட நேரத்தில் அவர்கள் அங்கிருந்தும் தலைமறைவாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேற்படி தாக்குதல் இடம் பெற்ற வீடு முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு சொந்தமானதாகும். அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது உறவினரான லக்ஷ்மன் தளையசிங்கம் :வயது 58, மனைவி விபியன் செல்வலோஜினி (வயது 52) ஆகியோர் கீழ்த் தளத்தில் வசித்து வருகின்றனர். அத்துடன் இவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார்.
தங்கள் வீட்டின் மேல்மாடி பாவனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும், தாங்கள் அங்கு செல்வதில்லை என்றும் தளையசிங்கம் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன் ஆயுததாரிகள் எவ்வாறு அங்கு வந்துமறைந்திருந்து தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
ஆயுததாரிகள் இவ்வீட்டின் குளியல் அறையிலிருந்தவாறு, அமைச்சர் கதிர்காமரை நீண்டகாலம் குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தாக்குதலை நடத்தியோர் வீட்டின் கீழாக உள்ள பற்றைகளைக் கடந்து நாரஹென்பிட்டியூடாக தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
Veerakesari

