06-21-2003, 10:04 AM
விண்வரை விரியும் வியத்தகு வீரம்
விரிந்தோர் மலரை நிகர்த்திடும் அழகு
பண்ணெடுத் தெவரும் பாடிடும் பண்பு
பரணியொன் றெழுத வல்லவுன் வெற்றி
கண்வழி வழியும் கருணையின் கசிவு
களத்தினில் பகையை வெல்லுமுன் ஆற்றல்
இன்னும் பல்லாண்டு ஆண்டென வளர்க.
இளமையோடிருந்து வாழ்க பல்லாண்டு!
ரூஙூஸசூசி;
ஆயிரம் அகவை நினக்கெனவாகும்
அன்பினர் வாழ்த்து அதையுருவாக்கும்.
நாவிருந் தெழுமென் நற்கலி யெழுதும்.
நலன்பெறும் சொற்கள் நடப்பனவாகும்.
காவியப் பொருளே! காலையின் கதிரே!
கவினுறப் பொலியும் அருள்மிகு திருவே!
தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனே
திருவெலாம் சூழ வாழ்க பல்லாண்டு!
-புதுவை இரத்தினதுரை
விரிந்தோர் மலரை நிகர்த்திடும் அழகு
பண்ணெடுத் தெவரும் பாடிடும் பண்பு
பரணியொன் றெழுத வல்லவுன் வெற்றி
கண்வழி வழியும் கருணையின் கசிவு
களத்தினில் பகையை வெல்லுமுன் ஆற்றல்
இன்னும் பல்லாண்டு ஆண்டென வளர்க.
இளமையோடிருந்து வாழ்க பல்லாண்டு!
ரூஙூஸசூசி;
ஆயிரம் அகவை நினக்கெனவாகும்
அன்பினர் வாழ்த்து அதையுருவாக்கும்.
நாவிருந் தெழுமென் நற்கலி யெழுதும்.
நலன்பெறும் சொற்கள் நடப்பனவாகும்.
காவியப் பொருளே! காலையின் கதிரே!
கவினுறப் பொலியும் அருள்மிகு திருவே!
தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனே
திருவெலாம் சூழ வாழ்க பல்லாண்டு!
-புதுவை இரத்தினதுரை

