08-14-2005, 06:21 PM
<span style='font-size:23pt;line-height:100%'><b>\"அமைச்சர் கதிர்காமர் கொலைக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணமே\"- இலங்கை இராணுவப் பேச்சாளர்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050813143954srilanka_funeral.jpg' border='0' alt='user posted image'>
கொழும்பில் உயர் பாதுகாப்பு உள்ள ஓர் இடத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலகுவாக சுட்டுக் கொல்லப்பட்டது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரிய அளவிலான பிழை இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று இலங்கை இராணுவப் பேச்சாளார் தயா ரட்ணாயக்கா ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கவனக்குறைவை பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெளியுறவுத் துறை அமைச்சரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும், இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு யாரேனும் ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ பொறுப்பாக இருந்தால் அது இந்த விசாரணையில் தெரிய வரும், இலங்கயைப் பொறுத்த வரையில் இந்தப் பிரச்சனை 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது, பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாது, இது பாதுகாப்புப் படையினரின் பொறுப்பு மட்டும் அல்ல, அதையும் தாண்டி நிலைமை சென்று விட்டது நாம் அனைவரும் இணைந்து நின்று இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் ரட்ணாயக்கா கூறினார்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050812230327lanka_police203.jpg' border='0' alt='user posted image'>
<i>கடும் சோதனை</i>
தாங்கள் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள்தான் பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் இறுதியாக இதில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று தங்களுக்குத் தெரியும் என்றும், ஏனென்றால் இது போன்ற செயல்களைச் செய்து கொண்டு விடுதலைப் புலிகள் வெற்றி பெற முடியாது என்றும் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறினார்.
ஆனால் இலங்கை பாதுகாப்புப் படைகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பல முறை மீறியதாகவும், கிழக்கில் துணைப் படைகளை வைத்து தங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதாகவும் உங்கள் மீது புலிகள் குற்றம் சுமத்துகிறார்களே என்று கேட்டதற்குப் பதிலளித்த ரட்ணாயக்கா அவர்கள், விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்றின் மீது கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்றும், இதில் அடையாளந் தெரியாத நபர்கள் கைக்குண்டினை வீசியிருக்கிறார்கள் என்றும், அமைச்சர் கதிர்காமர் அவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணைகளின் கவனத்தைத் திசை திருப்பும் விதமாகவே விடுதலைப் புலிகள் இப்படிக் கூறுகின்றனர் என்றும், உலகின் மொத்த கவனத்தையும் திசை திருப்பும் விதமாகவே விடுதலைப் புலிகள் வேண்டுமென்று இவ்வாறு கூறுகின்றனர் என்றும் இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறினார்.</span>
-BBC tamil
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050813143954srilanka_funeral.jpg' border='0' alt='user posted image'>
கொழும்பில் உயர் பாதுகாப்பு உள்ள ஓர் இடத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலகுவாக சுட்டுக் கொல்லப்பட்டது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரிய அளவிலான பிழை இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று இலங்கை இராணுவப் பேச்சாளார் தயா ரட்ணாயக்கா ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கவனக்குறைவை பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெளியுறவுத் துறை அமைச்சரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும், இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு யாரேனும் ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ பொறுப்பாக இருந்தால் அது இந்த விசாரணையில் தெரிய வரும், இலங்கயைப் பொறுத்த வரையில் இந்தப் பிரச்சனை 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது, பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாது, இது பாதுகாப்புப் படையினரின் பொறுப்பு மட்டும் அல்ல, அதையும் தாண்டி நிலைமை சென்று விட்டது நாம் அனைவரும் இணைந்து நின்று இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் ரட்ணாயக்கா கூறினார்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050812230327lanka_police203.jpg' border='0' alt='user posted image'>
<i>கடும் சோதனை</i>
தாங்கள் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள்தான் பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் இறுதியாக இதில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று தங்களுக்குத் தெரியும் என்றும், ஏனென்றால் இது போன்ற செயல்களைச் செய்து கொண்டு விடுதலைப் புலிகள் வெற்றி பெற முடியாது என்றும் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறினார்.
ஆனால் இலங்கை பாதுகாப்புப் படைகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பல முறை மீறியதாகவும், கிழக்கில் துணைப் படைகளை வைத்து தங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதாகவும் உங்கள் மீது புலிகள் குற்றம் சுமத்துகிறார்களே என்று கேட்டதற்குப் பதிலளித்த ரட்ணாயக்கா அவர்கள், விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்றின் மீது கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்றும், இதில் அடையாளந் தெரியாத நபர்கள் கைக்குண்டினை வீசியிருக்கிறார்கள் என்றும், அமைச்சர் கதிர்காமர் அவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணைகளின் கவனத்தைத் திசை திருப்பும் விதமாகவே விடுதலைப் புலிகள் இப்படிக் கூறுகின்றனர் என்றும், உலகின் மொத்த கவனத்தையும் திசை திருப்பும் விதமாகவே விடுதலைப் புலிகள் வேண்டுமென்று இவ்வாறு கூறுகின்றனர் என்றும் இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறினார்.</span>
-BBC tamil

