Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" சுட்டுக் கொலை
#67
<b><span style='color:red'>புலிகள் கொலை செய்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
அமைச்சர், பிரதி அமைச்சர் தெரிவிப்பு
(டி. சார்ள்ஸ் பீட்டர்)

[size=15]வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்தது விடுதலைப் புலிகள் தான் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் விடுதலைப் புலிகள் அதனை மறுக்கிறார்கள் எனவும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு விஜேராம மாவத்தையிலுள்ள கதிர்காமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு முக்கிய நபரை இன்று இலங்கை இழந்துவிட்டது. இந்த கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் யார் இந்த கொலையை செய்தாலும் அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கதிர்காமர் பெரும் பாடுபட்டார். இந்த கொலையின் மூலம் நாட்டின் சமாதானத்தை கொண்டு வருவது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

லக்ஷ்மன் கதிர்காமர் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவராவார். ஆனால் எத்தனையோ அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து மேடைகளில் பேசினார்கள். அவர்களே இன்று அனுதாபப்படுகிறார்கள்'' என்று கூறினார். இதேவேளை கதிர்காமரின் படுகொலையால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதகமான நிலை ஏற்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிலான் பெரேரா,

""நாட்டின் பாதுகாப்பை தற்போது பலப்படுத்தியுள்ளோம் அவசர கால சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் பாதுகாப்புக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்'' எனத் தெரிவித்தார். இதேவேளை கதிர்காமருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்திருந்த நீதி அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறுகையில்இ புலிகள் கதிர்காமரை கொலை செய்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.

[b]கதிர்காமரின் வாழ்க்கையில் சில துளிகள் </b>
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் 1932 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பிறந்தார்.

கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கியமைக்கான கல்லூரியின் "ரைத்' தங்கப் பதக்கத்தையும் பெற்றவர்.

1953ல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமானிப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்தார். இதே ஆண்டில் அதியுயர் சட்டக் கல்விப் பரீட்சையின் இடைநிலைப் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.

1954ல் இலங்கைச் சட்டக் கல்லூரியில் அதியுயர் சட்ட இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் முதலாவதாக தேர்ச்சியடைந்தார். சாட்சிய சட்டம்இ தனி நபர்இ சொத்துக்கள் தொடர்பான சட்டம் என்பவற்றுக்கும் பரிசில்களையும் பெற்றார்.

1955ல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.

சட்டத்துறையில் பரிஸ்டர் என்ற வகையில் இவர் 1958 இல் ஐக்கிய ராச்சிய சட்டமன்றத்திலும் உறுப்பினரானார்.

1959ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக யூனியனின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

1960ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் (ஆ.ஃடிவ) பி.லிற் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

1955, 1960, 1971, 1974 காலப் பகுதியில் லண்டன் பிரிவுக்கவுன்சிலின் சட்டக் குழுவில் பணி புரிந்தார்.

1960, 1971, 1989, 1994 வரையிலும் இலங்கை சட்டக் கழகத்திலும் பணியாற்றினார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பில் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர்இ அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய பசுபிக் அரசாங்கங்களின் அறிவு சொத்து தொடர்பான ஆலோசனை வழங்கும் ஆசியப் பசுபிக் பிராந்திய பணிப்பாளராகவும் (1983 1988) வரை பணியாற்றியுள்ளார்.

1963ல் வியட்நாமில் கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே இடம்பெற்ற பிரச்சினையை ஆராய்வதற்கென சர்வதேச மன்னிப்புச் சபையினால் ஆணையாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

1990ல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வெளிவிவகார ஆய்வுக் குழுவுக்கும் புலமைச் சொத்து சம்பந்தமான ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையிலும் இலங்கை அரசுக்கு பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். 1991 ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.

இலங்கையின் சட்டச் சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்து சேவையாற்றி வந்த இவர் இலங்கையின் நிர்மாணத் தொழில் சேவைகளுக்கான ஆலோசனைச் சேவைகளை மேல்நிலைப்படுத்துவதற்கான கமிட்டிக்கும் தலைமை தாங்கினார்.

பல்வேறு சர்வதேச சட்டச் சஞ்சிகைகளிலும் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

வெளிவிவகாரங்கள் பற்றிய சட்டம் சம்பந்தமாகவும், ஜோர்ஜ் வொஷிங்டன், ஹாவார்ட், ஒக்ஸ்போர்ட், பிரின்ஸ்டன் நிவ்யோர்க் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலுள்ள நிறுவனங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.

கொள்கைகள் திட்டமிடல் ஆலோசனைச் சபையில் ஒரு உறுப்பினராகவும் இவர் நியமனம் பெற்றிருந்தார். 1997 இல் பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திரக் கரையோரச் சங்கத்தின் உப தலைவராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

1994 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த இவர், அந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1998 1999 இல் சார்க் நாடுகளது அமைச்சர் குழுவின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

<b>பூதவுடலை படமெடுக்க நேற்று அனுமதி மறுப்பு </b>
டி. சார்ள்ஸ் பீட்டர்ஸ்

படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாரியாரின் வேண்டுகோளுக்கிணங்க லக்ஷ்மன் கதிர்காமரின் பூதவுடலை படமெடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் எவரும் நேற்றைய தினம் அனுமதிக்கப்படவில்லை.

படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மர் கதிர்காமரின் பூதவுடல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பொரளை ரேமன்ட் மலர்ச்சாலையிலிருந்து கொழும்பு 7, விஜேராம மாவத்தையிலிருக்கும் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு பொலிஸ் அணி வகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

கதிர்காமரின் பூதவுடல் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் கொண்டு செல்லப்பட்டவுடன்,

பொலிஸார் ஊடகவியலாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக பொலிஸாரிடம் காரணம் கேட்டபோது, கதிர்காமரின் பாரியார் தான் படமெடுப்பதற்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார் என தெரிவித்தனர்.

இதேவேளை, சுதந்திர சதுக்கத்தில் நாளை இடம்பெறவிருக்கும் கதிர்காமரின் இறுதிக் கிரியைகள் நிகழ்வுகளையும், ஊடகவியலாளர்கள் படமெடுக்க முடியாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

</span>

Veerakesari
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 08-12-2005, 06:27 PM
[No subject] - by cannon - 08-12-2005, 06:31 PM
[No subject] - by கறுணா - 08-12-2005, 06:40 PM
[No subject] - by narathar - 08-12-2005, 06:45 PM
[No subject] - by Nitharsan - 08-12-2005, 06:46 PM
[No subject] - by narathar - 08-12-2005, 06:50 PM
[No subject] - by kavithaa - 08-12-2005, 06:53 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 07:04 PM
[No subject] - by வினித் - 08-12-2005, 07:05 PM
[No subject] - by கறுணா - 08-12-2005, 07:09 PM
[No subject] - by Mohan - 08-12-2005, 07:12 PM
[No subject] - by narathar - 08-12-2005, 07:13 PM
[No subject] - by அனிதா - 08-12-2005, 07:14 PM
[No subject] - by narathar - 08-12-2005, 07:18 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 07:23 PM
[No subject] - by Thala - 08-12-2005, 07:28 PM
[No subject] - by கீதா - 08-12-2005, 07:34 PM
[No subject] - by shanmuhi - 08-12-2005, 07:50 PM
[No subject] - by Sriramanan - 08-12-2005, 08:29 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 08:33 PM
[No subject] - by Sriramanan - 08-12-2005, 08:34 PM
[No subject] - by adsharan - 08-12-2005, 09:14 PM
[No subject] - by tamilini - 08-12-2005, 09:14 PM
[No subject] - by AJeevan - 08-12-2005, 09:36 PM
[No subject] - by வன்னியன் - 08-12-2005, 09:37 PM
[No subject] - by AJeevan - 08-12-2005, 09:46 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 09:51 PM
[No subject] - by Niththila - 08-12-2005, 09:53 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 08-12-2005, 10:06 PM
[No subject] - by eelapirean - 08-12-2005, 10:31 PM
[No subject] - by muniyama - 08-12-2005, 10:48 PM
[No subject] - by kurukaalapoovan - 08-12-2005, 11:22 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 08-12-2005, 11:24 PM
[No subject] - by anpagam - 08-12-2005, 11:49 PM
[No subject] - by hari - 08-13-2005, 01:54 AM
[No subject] - by hari - 08-13-2005, 02:32 AM
[No subject] - by lankan - 08-13-2005, 04:27 AM
[No subject] - by Nitharsan - 08-13-2005, 05:54 AM
[No subject] - by jeya - 08-13-2005, 05:55 AM
[No subject] - by Thala - 08-13-2005, 06:26 AM
[No subject] - by sinnappu - 08-13-2005, 06:51 AM
[No subject] - by MUGATHTHAR - 08-13-2005, 06:52 AM
[No subject] - by sinnappu - 08-13-2005, 06:54 AM
[No subject] - by வியாசன் - 08-13-2005, 07:14 AM
[No subject] - by sinnappu - 08-13-2005, 07:54 AM
[No subject] - by வியாசன் - 08-13-2005, 08:12 AM
[No subject] - by narathar - 08-13-2005, 08:43 AM
[No subject] - by வன்னியன் - 08-13-2005, 08:44 AM
[No subject] - by narathar - 08-13-2005, 09:09 AM
[No subject] - by narathar - 08-13-2005, 09:13 AM
[No subject] - by vijitha - 08-13-2005, 10:42 AM
[No subject] - by Mathuran - 08-13-2005, 11:17 AM
[No subject] - by Thala - 08-13-2005, 11:43 AM
[No subject] - by Birundan - 08-13-2005, 09:40 PM
[No subject] - by hari - 08-14-2005, 02:48 AM
[No subject] - by hari - 08-14-2005, 03:07 AM
[No subject] - by Vaanampaadi - 08-14-2005, 04:53 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 10:08 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 10:10 AM
[No subject] - by AJeevan - 08-14-2005, 01:26 PM
[No subject] - by AJeevan - 08-14-2005, 06:21 PM
[No subject] - by Danklas - 08-14-2005, 07:30 PM
[No subject] - by kirubans - 08-14-2005, 08:02 PM
[No subject] - by kirubans - 08-14-2005, 08:52 PM
[No subject] - by Danklas - 08-14-2005, 09:20 PM
[No subject] - by AJeevan - 08-14-2005, 09:42 PM
[No subject] - by kurukaalapoovan - 08-15-2005, 04:20 PM
[No subject] - by AJeevan - 08-15-2005, 06:25 PM
[No subject] - by kirubans - 08-15-2005, 07:42 PM
[No subject] - by sinnakuddy - 08-15-2005, 09:21 PM
[No subject] - by Danklas - 08-17-2005, 02:21 PM
[No subject] - by narathar - 08-17-2005, 02:46 PM
[No subject] - by hari - 08-17-2005, 03:18 PM
[No subject] - by vasisutha - 08-17-2005, 03:26 PM
[No subject] - by cannon - 08-17-2005, 09:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)