06-21-2003, 10:03 AM
விதைகள்
ஸெர்கே பேகஸ்
நாங்கள் பத்துலட்சக் கணக்கானவர்கள்
நாங்கள் மூத்த மரங்கள்
புதிதாக வளரும் செடிகள்
விதைகள்
அங்காரா தலைக் கவசத்திலிருந்து
விடிகாலையில் அவர்கள் வந்தார்கள்
எங்களை வேரோடு பிடுங்கினார்கள்
எம்மை தொலைதூரம்
வெகு தொலைதூரம் எடுத்துச் சென்றார்கள்
வழியில் நிறைய
பழைய மரங்களின் தலைகள் உதிர்ந்தன
குளிரில் நிறைய புதிய செடிகள் இறந்தன
காலடியில் நிறைய விதைகள் சிதறி தொலைந்து
காணாமற் போய் மறந்துபட்டன
கோடை காலத்தின் சன்னமான நதிபோல்
நாங்கள் கசிந்தோம்
இலையுதிர் காலத்தினுள் பறவைக்கூட்டம் போல
நாம் மறைந்தோம்
ஆயிரக் கணக்கில் மங்கலாகினோம்
எம்மிடம் விதைகளிருந்தன
காற்று மறுபடி
கொண்டு சேர்த்த விதைகள்
பசிகொண்ட மலைகளை மறுபடி அவை சேர்த்தன
பாறைகளின் வெடிப்பில் அவை
மறைந்து கொண்டன
முதல் மழை
இரண்டாம் மழை
மூன்றாம் மழை
மறுபடி அவை வளர்ந்தன
மறுபடியும் நாங்கள் ஒரு ஆரண்யம்
நாங்கள் பத்துலட்சக் கணக்கானவர்கள்
நாங்கள் விதைகள்
செடிகள்
மூத்த மரங்கள்
பழைய தலைக்கவசம் செத்தது
இப்போது நீங்கள்
புதுத் தலைக்கவசம்
ஏன் நீங்கள் ஆகாயத்தின் தலையை
உங்களின் கீழ் வைக்கப் பார்க்கிறீர்கள்?
எனக்குத் தெரியும்
அது உங்களுக்கும் கூடத்தெரியும்
மழைக்கும் காற்றுக்கும்
ஒரேயொரு விதை இருக்குமட்டும்
இந்த ஆரண்யம் எந்நாளும் முடிவுறாது
ஸெர்கே பேகஸ்
நாங்கள் பத்துலட்சக் கணக்கானவர்கள்
நாங்கள் மூத்த மரங்கள்
புதிதாக வளரும் செடிகள்
விதைகள்
அங்காரா தலைக் கவசத்திலிருந்து
விடிகாலையில் அவர்கள் வந்தார்கள்
எங்களை வேரோடு பிடுங்கினார்கள்
எம்மை தொலைதூரம்
வெகு தொலைதூரம் எடுத்துச் சென்றார்கள்
வழியில் நிறைய
பழைய மரங்களின் தலைகள் உதிர்ந்தன
குளிரில் நிறைய புதிய செடிகள் இறந்தன
காலடியில் நிறைய விதைகள் சிதறி தொலைந்து
காணாமற் போய் மறந்துபட்டன
கோடை காலத்தின் சன்னமான நதிபோல்
நாங்கள் கசிந்தோம்
இலையுதிர் காலத்தினுள் பறவைக்கூட்டம் போல
நாம் மறைந்தோம்
ஆயிரக் கணக்கில் மங்கலாகினோம்
எம்மிடம் விதைகளிருந்தன
காற்று மறுபடி
கொண்டு சேர்த்த விதைகள்
பசிகொண்ட மலைகளை மறுபடி அவை சேர்த்தன
பாறைகளின் வெடிப்பில் அவை
மறைந்து கொண்டன
முதல் மழை
இரண்டாம் மழை
மூன்றாம் மழை
மறுபடி அவை வளர்ந்தன
மறுபடியும் நாங்கள் ஒரு ஆரண்யம்
நாங்கள் பத்துலட்சக் கணக்கானவர்கள்
நாங்கள் விதைகள்
செடிகள்
மூத்த மரங்கள்
பழைய தலைக்கவசம் செத்தது
இப்போது நீங்கள்
புதுத் தலைக்கவசம்
ஏன் நீங்கள் ஆகாயத்தின் தலையை
உங்களின் கீழ் வைக்கப் பார்க்கிறீர்கள்?
எனக்குத் தெரியும்
அது உங்களுக்கும் கூடத்தெரியும்
மழைக்கும் காற்றுக்கும்
ஒரேயொரு விதை இருக்குமட்டும்
இந்த ஆரண்யம் எந்நாளும் முடிவுறாது

