06-21-2003, 10:02 AM
மொழிபெயர்ப்பு: யமுனா ராஜேந்திரன்
நமது பிரச்சினைகளைப்போல, நமது துயரங்களை ஒத்தனவாக, நமது ஏக்கங்களைப் போன்று, நமது போர்க்குரல் மாதிரியே குர்திஸ் மக்களினதும், 'புவிப்பரப்பெங்கும் சிதறடிக்கப்பட்டு வாழும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் குர்திஸ் மக்கள், தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்டவர்கள். ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, ஆர்மீனியா எனத் துண்டாடப்பட்ட வாழ்வும் கலாச்சாரமும் அவர்களுடையது. அவர்களது வாழ்வு நொறுங்கிப்போனது போலவே அவர்களது மொழியும் படைப்புக்களும் கவிதைகளும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து கொடூரமாக அழிக்கப்பட்டு வருகிறது. அழிவு பற்றிய கண்ணீர் அவர்களது ஆன்மாவில் ஏற்படுத்தும் வலி, வாழ்வுக்கான எதிர்ப்புணர்வு போன்றவைகளே அவர்களின் கவிதைகள். உடனடி வாழ்வனுபவம் மக்களின் பேச்சுமொழி, அரசியல் தொலைநோக்கு போன்றன அவர்களின் கவிதைகளில் வெளியாகின்றது. இழந்துவிட்ட தாயகத்தைப் பற்றிய ஆதங்கம் அழிவுற்ற தாயகத்திற்கு அல்ல, விடுதலைபெற்ற தாயகத்திற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம், இயற்கை மற்றும் அரசியல் உற்பவங்களில் இருந்து மீண்டும் எழுச்சியுடன் துளிர்க்கும் அவர்களது சங்ககாலம் போன்றவைகளே இன்றைய குர்திஸ் கவிதைகளின் பாடுபொருள்' என்கிறார் இக்கவிதைகளை மொழிபெயர்த்த யமுனா ராஜேந்திரன். எளிமையும், ஆழமும், தீவிர உணர்வும் மிக்க இந்தக் கவிதைகள் நமது சூழலுக்கு மிக அவசியமானவை. எமது படைப்பாளிகளின் பார்வைகள் அகலிக்கவும், படைப்புச் செழுமை, ஆழம், வெளிப்பாட்டு நேர்மை என்பனவற்றுக்கும் இவை பாடமானவை. இவற்றின் முக்கியத்துவம் கருதி மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்களில்லை என்ற குர்திஸ் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளைத் தருகின்றோம்.
நமது பிரச்சினைகளைப்போல, நமது துயரங்களை ஒத்தனவாக, நமது ஏக்கங்களைப் போன்று, நமது போர்க்குரல் மாதிரியே குர்திஸ் மக்களினதும், 'புவிப்பரப்பெங்கும் சிதறடிக்கப்பட்டு வாழும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் குர்திஸ் மக்கள், தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்டவர்கள். ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, ஆர்மீனியா எனத் துண்டாடப்பட்ட வாழ்வும் கலாச்சாரமும் அவர்களுடையது. அவர்களது வாழ்வு நொறுங்கிப்போனது போலவே அவர்களது மொழியும் படைப்புக்களும் கவிதைகளும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து கொடூரமாக அழிக்கப்பட்டு வருகிறது. அழிவு பற்றிய கண்ணீர் அவர்களது ஆன்மாவில் ஏற்படுத்தும் வலி, வாழ்வுக்கான எதிர்ப்புணர்வு போன்றவைகளே அவர்களின் கவிதைகள். உடனடி வாழ்வனுபவம் மக்களின் பேச்சுமொழி, அரசியல் தொலைநோக்கு போன்றன அவர்களின் கவிதைகளில் வெளியாகின்றது. இழந்துவிட்ட தாயகத்தைப் பற்றிய ஆதங்கம் அழிவுற்ற தாயகத்திற்கு அல்ல, விடுதலைபெற்ற தாயகத்திற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம், இயற்கை மற்றும் அரசியல் உற்பவங்களில் இருந்து மீண்டும் எழுச்சியுடன் துளிர்க்கும் அவர்களது சங்ககாலம் போன்றவைகளே இன்றைய குர்திஸ் கவிதைகளின் பாடுபொருள்' என்கிறார் இக்கவிதைகளை மொழிபெயர்த்த யமுனா ராஜேந்திரன். எளிமையும், ஆழமும், தீவிர உணர்வும் மிக்க இந்தக் கவிதைகள் நமது சூழலுக்கு மிக அவசியமானவை. எமது படைப்பாளிகளின் பார்வைகள் அகலிக்கவும், படைப்புச் செழுமை, ஆழம், வெளிப்பாட்டு நேர்மை என்பனவற்றுக்கும் இவை பாடமானவை. இவற்றின் முக்கியத்துவம் கருதி மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்களில்லை என்ற குர்திஸ் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளைத் தருகின்றோம்.

