06-21-2003, 10:01 AM
நாக.சிவசிதம்பரம்
எனக்குப் படிக்க
விளக்கில்லை:
விளக்கம் இல்லை
வெளியிறங்கி,
மூச்செடுக்க முற்றத்தில்
வெளிச்சம் இல்லை.
உழைச்சலுடன்...
சுற்றிவர நோக்கச்
சுடுகிறது உள்மனசு..
என்மூச்சுக் காற்றில்லை
எனது கால் ஈரமில்லை..
என்கோயில் வீதியிலே
இலைதெரியா மரநிழலில்
பள்ளியிலே... என்றந்தப்
பழைய நினைவிடங்கள்...
சுற்றிவர நோக்கச்
சுடுகிறது உள்மனசு
'வந்தவனின்' பக்கம்
வானும் 'வெளிச்சுப்' போய்..
மேகங்களும்... மௌன
'முட்டில்' திணறுதலாய்...
வயல் வரம்பில் தலைபுதைத்து
வதிவிடங்கள் இழந்த - சிறு
குழந்தைகளின் வெற்றுடம்பாய்
சிறுகுடலின் பெருநெருப்பாய்...
விளக்குப் புகையில்
விரித்தபடி புத்தகங்கள்
சுற்றிவர... நோக்க...!
எனக்குப் படிக்க
விளக்கில்லை:
விளக்கம் இல்லை
வெளியிறங்கி,
மூச்செடுக்க முற்றத்தில்
வெளிச்சம் இல்லை.
உழைச்சலுடன்...
சுற்றிவர நோக்கச்
சுடுகிறது உள்மனசு..
என்மூச்சுக் காற்றில்லை
எனது கால் ஈரமில்லை..
என்கோயில் வீதியிலே
இலைதெரியா மரநிழலில்
பள்ளியிலே... என்றந்தப்
பழைய நினைவிடங்கள்...
சுற்றிவர நோக்கச்
சுடுகிறது உள்மனசு
'வந்தவனின்' பக்கம்
வானும் 'வெளிச்சுப்' போய்..
மேகங்களும்... மௌன
'முட்டில்' திணறுதலாய்...
வயல் வரம்பில் தலைபுதைத்து
வதிவிடங்கள் இழந்த - சிறு
குழந்தைகளின் வெற்றுடம்பாய்
சிறுகுடலின் பெருநெருப்பாய்...
விளக்குப் புகையில்
விரித்தபடி புத்தகங்கள்
சுற்றிவர... நோக்க...!

