06-21-2003, 10:01 AM
ஏழைகளில் விரியும் காட்சிகள்
அந்த வீட்டில்
தீ நாவுகளால்
பல நாட்களாய்
தீண்டப்படாத அடுப்படி
புூனைக்கு
கையளிக்கப்பட்டிருந்தது.
வெற்றுக்கலங்கள்
வெறும் தண்ணீரையும்
அவர்கள் கண்ணீரையும்
சேகரித்தன
தாயின் மார்பை
உறுஞ்சி உறுஞ்சி பலனின்றி
அலுத்துக் கொண்டு அழுதது
அங்கொரு கைக்குழந்தை
என்றோ ஒருநாள்
வேயப்பட்ட கூரை
கறையானுக்கு
காணிக்கையாகியிருந்தது
வீட்டில் விரிசல்களுக்கிடையே
வெய்யிலும், மழையும், காற்றுமே
தடையின்றி வந்து போயின.
இரவில் நிலவிருந்தால் மாத்திரமே
அவர்கள் குடிலுக்கு
வெளிச்சம் வரும்
இரவின் பனிக்காற்று
அவர்கள் உடலை
குளிர்வித்தாலும்
உள்ளம் ஏனோ
எரிந்து கொண்டேயிருந்தது.
இருந்தாலும்,
என்றாவது ஒருநாள்
விடுதலை
தம் வீட்டில்
விளக்கேற்றும்
என்ற நம்பிக்கை
அவர்களுக்குள் இருந்தது.
செ. இராணிமைந்தன
அந்த வீட்டில்
தீ நாவுகளால்
பல நாட்களாய்
தீண்டப்படாத அடுப்படி
புூனைக்கு
கையளிக்கப்பட்டிருந்தது.
வெற்றுக்கலங்கள்
வெறும் தண்ணீரையும்
அவர்கள் கண்ணீரையும்
சேகரித்தன
தாயின் மார்பை
உறுஞ்சி உறுஞ்சி பலனின்றி
அலுத்துக் கொண்டு அழுதது
அங்கொரு கைக்குழந்தை
என்றோ ஒருநாள்
வேயப்பட்ட கூரை
கறையானுக்கு
காணிக்கையாகியிருந்தது
வீட்டில் விரிசல்களுக்கிடையே
வெய்யிலும், மழையும், காற்றுமே
தடையின்றி வந்து போயின.
இரவில் நிலவிருந்தால் மாத்திரமே
அவர்கள் குடிலுக்கு
வெளிச்சம் வரும்
இரவின் பனிக்காற்று
அவர்கள் உடலை
குளிர்வித்தாலும்
உள்ளம் ஏனோ
எரிந்து கொண்டேயிருந்தது.
இருந்தாலும்,
என்றாவது ஒருநாள்
விடுதலை
தம் வீட்டில்
விளக்கேற்றும்
என்ற நம்பிக்கை
அவர்களுக்குள் இருந்தது.
செ. இராணிமைந்தன

