08-12-2005, 08:18 AM
Quote:விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரும் சம்மந்தப்பட்டுள்ளார் என நீங்கள் கூறுகிறீர்கள் அதற்கான தகுந்த ஆதாரம் இருந்தால் நீங்கள் யாழிலுள்ள அரசியற்துறை அலுவலத்தில் மனுச்செய்யலாம். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கிளிநொச்சியில் உள்ள தலைமையகத்திற்கு மனுச்செய்யலாம் அல்லது நேரடியாகத் தலைவரிற்கு மனுச்செய்யலாம்.
இவற்றினை விடுத்து இவ்வாறான பொதுத் தளங்களில் விவாதிப்பது சிறந்ததல்ல. விடுதலைப்புலிப் புலிப்போராளிகள் தம் ஆசைதுறந்து இளைய இனிய உயிர்களை எம்மினம் வாழ உவந்து வழங்குபவர்கள். நாம் இன்றும் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர்களே காரணம். அவர்கள் தவறிழைக்கமாட்டார்கள் என்று சொல்லவரவில்லை. தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அவர்களுடன் சேர்ந்து நிற்கவும் வாய்ப்புண்டு.
எனவே மேலிடத்துடன் தொடர்பு கொண்டால் நிச்சயம் பதில் வரும் எனவே அதை செய்யுங்கள் ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சாதாரண அமைப்பு அல்ல அது தமிழீழ அரசு தவறு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிப்பார்கள் நீங்கள் சொன்ன உறுப்பினர் எந்தத்தரத்தில் இருந்தாலும் தவறு இழைத்திருந்தால் தண்டனை பெற்றே தீருவார் எனவே தயங்காமல் உரிய இடத்தில் தொடர்பு கொள்ளங்கள்
நன்றி
இறந்த உங்கள் நண்பர் குடும்பத்திற்க்கு என் வருத்தங்களை தெரிவிற்கிறேன்

