06-21-2003, 09:54 AM
உயிர்பெறும் காலம்
நீ எங்கிருக்கிறாய் என்பதை நானறியேன்
என் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட
ஒரு நாளில்
நீ அங்கும் நாம் இங்குமாய் பிரிந்துபோனோம்.
எப்படியிருக்கிறாய்...
அதே கனிந்த பார்வையுடன்லு} பொறுமையாய்..
தாயாய் என்னைத் தாலாட்டித்
தூங்க வைத்த நாட்கள்;
இன்னும் நெஞ்சுக் கூட்டுக்குள்
நெகிழ்ந்திடும் ஞாபகங்களாய் நிறைந்திருக்கின்றன.
இப்போதும் அடிக்கடி
கனவுகளில் வந்து
ஆறுதல் தருகிறாய்.
விழிக்குழிகள் நிறைந்த
சோகமான ஏக்கத்துடன்
என்னைத் தடவிக் கொடுக்கிறாய்.
பிரிவு சொல்லாமற் பிரிந்துபோன
அந்தக் கணங்களுக்காக
நான் வருந்துகிறேன்.
ஏடெடுத்த நாள் முதலாய்
படித்ததெல்லாம் உன்னிடந்தானே!
பிராணிகளிடத்தில் அன்பையும்
'பொறுமை செய்' என்ற பண்பையும்
இறையன்பு யாவற்றையும்
எனக்குக் கற்றுக்கொடுத்தது நீதானே!
எனக்கு உணவுூட்டிய உன்கைபற்றி
எப்போது விழி ஒற்றிக்கொள்வேன்.
காலநதியின் வேகத்தில்லு} நாமெல்லாம்
மீண்டும் எப்போது திரும்புவோம்.
ஒரு சுமையாய் கனக்கிறது இதயம்
ஆனாலும்
நான் வருவேன் மறுபடியும்
ஓர் இனிமையான நாளில்
எமது வீதிகளிலெல்லாம்
தடையற்ற ஒரு சுதந்திரமான பொழுதில்
உனது குழந்தையாய்...
-சுதாமதி
நீ எங்கிருக்கிறாய் என்பதை நானறியேன்
என் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட
ஒரு நாளில்
நீ அங்கும் நாம் இங்குமாய் பிரிந்துபோனோம்.
எப்படியிருக்கிறாய்...
அதே கனிந்த பார்வையுடன்லு} பொறுமையாய்..
தாயாய் என்னைத் தாலாட்டித்
தூங்க வைத்த நாட்கள்;
இன்னும் நெஞ்சுக் கூட்டுக்குள்
நெகிழ்ந்திடும் ஞாபகங்களாய் நிறைந்திருக்கின்றன.
இப்போதும் அடிக்கடி
கனவுகளில் வந்து
ஆறுதல் தருகிறாய்.
விழிக்குழிகள் நிறைந்த
சோகமான ஏக்கத்துடன்
என்னைத் தடவிக் கொடுக்கிறாய்.
பிரிவு சொல்லாமற் பிரிந்துபோன
அந்தக் கணங்களுக்காக
நான் வருந்துகிறேன்.
ஏடெடுத்த நாள் முதலாய்
படித்ததெல்லாம் உன்னிடந்தானே!
பிராணிகளிடத்தில் அன்பையும்
'பொறுமை செய்' என்ற பண்பையும்
இறையன்பு யாவற்றையும்
எனக்குக் கற்றுக்கொடுத்தது நீதானே!
எனக்கு உணவுூட்டிய உன்கைபற்றி
எப்போது விழி ஒற்றிக்கொள்வேன்.
காலநதியின் வேகத்தில்லு} நாமெல்லாம்
மீண்டும் எப்போது திரும்புவோம்.
ஒரு சுமையாய் கனக்கிறது இதயம்
ஆனாலும்
நான் வருவேன் மறுபடியும்
ஓர் இனிமையான நாளில்
எமது வீதிகளிலெல்லாம்
தடையற்ற ஒரு சுதந்திரமான பொழுதில்
உனது குழந்தையாய்...
-சுதாமதி

