Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதிக்கதைகள்
#1
<img src='http://img240.imageshack.us/img240/1489/chery1qf.jpg' border='0' alt='user posted image'>

ஒரு சின்ன சம்பவம்.
அந்தச் சிறுவன் வீட்டுத் தோட்டத்தைச் சுத்தம் செய்கிறேன் என்று அடர்ந்து கிடந்த புதர்களையும் செடிகளையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான்.

அப்படி வெட்டிய போது அவனுடைய தந்தை ஆசையாய் வளர்த்துக் கொண்டிருந்த செர்ரி செடியும் வெட்டுப்பட்டுவிட்டது.

குடும்பத்தினர் எல்லோருக்கும் பயம். ஏனென்றால் அவனது தந்தை கோபக்காரர். அவர் ஆசையாய் வளர்த்த செடி இல்லை என்றால்... என்ன செய்வது என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள்.

மறுநாள்.

''யார் என் செடியை வெட்டியது?'' என்று தோட்டத்துக்குச் சென்று வந்த தந்தை கோபமாய்க் கேட்டார்.

''நான்தாம்பா வெட்டினேன். தோட்டத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறுதலாய் வெட்டிவிட்டேன்'' என்றான் சிறுவன்.

அடுத்து அடிதான் விழப் போகிறது என்று காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அவர் ஒன்றும் செய்யவில்லை. 'இனிமேல் கவனமாய் இரு' என்று மட்டும் சொன்னார்.

ஏன் அடிக்கவில்லை?

அதற்கு தந்தை சொன்ன பதில், ''தைரியமாய் உண்மையைச் சொல்பவனைத் தண்டித்தால், அவன் வாழ்க்கையே பொய்யாகிவிடும். அவனால் உண்மையாக, வீரமாக வாழ முடியாது''.

அன்று உண்மை பேசிய சிறுவன் பிற்காலத்தில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக உயர்ந்த ஜார்ஜ் வாஷிங்டன்.

<b>நீதி:</b> உண்மை எப்போதும் உயர்வு தரும்
Reply


Messages In This Thread
நீதிக்கதைகள் - by vasisutha - 08-08-2005, 01:32 PM
[No subject] - by hari - 08-08-2005, 02:06 PM
[No subject] - by அனிதா - 08-08-2005, 05:11 PM
[No subject] - by Malalai - 08-08-2005, 08:06 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 10:44 PM
[No subject] - by vimalan - 08-14-2005, 11:33 PM
[No subject] - by Mathan - 08-15-2005, 07:40 AM
[No subject] - by Malalai - 08-16-2005, 03:58 PM
[No subject] - by tamilini - 08-16-2005, 05:23 PM
[No subject] - by Aalavanthan - 08-22-2005, 08:37 PM
[No subject] - by வினித் - 08-22-2005, 09:09 PM
[No subject] - by Thala - 08-22-2005, 09:14 PM
[No subject] - by அனிதா - 08-24-2005, 10:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)