06-21-2003, 09:53 AM
வார்த்தைகளில் சிக்காத
ஓர் உன்மத்தம்
உள்ளே திமிறும்.
வான் முகடுகளைத் தொட்டபடி
ஓடும் புகைச்சுருள்களில்
என் எண்ணத்தின் வேர்கள்
விரைந்து செல்லும்.
இரையெடுத்து ஏப்பம் விடும்
பாம்புகளின் வாசனை
என் சுற்றாடலை நிரப்பும்.
சிலந்திகள் பின்னிய வலையாய்
என் வீடு
கனத்துப் பிசிறடிக்கும்.
ஒற்றைக் குரலில்
ஓர் ஆன்மாவின்
சோகம் பிழிந்த அலறல்
காற்றில் கரையும்.
எங்கள் வீதிகளுக்கு வேலிபோட வந்தவர்கள்
வட்டத்துள்..
நாம் வெளியே விழிகளைத் திறந்தபடி
வாழ்ந்து பங்கப்பட்ட
வரலாறொன்றின் சாட்சியாய்
எச்சமாகிப் போன எலும்புக்கூடுகள் நடுவே.
ஆனாலும்,
பார் புூமியெங்கும் பாறைபிளந்து
ஓராயிரம் வேர்ப்பின்னல்கள்
இனி அவை துளிர்விடும்.
-சுதாமதி
ஓர் உன்மத்தம்
உள்ளே திமிறும்.
வான் முகடுகளைத் தொட்டபடி
ஓடும் புகைச்சுருள்களில்
என் எண்ணத்தின் வேர்கள்
விரைந்து செல்லும்.
இரையெடுத்து ஏப்பம் விடும்
பாம்புகளின் வாசனை
என் சுற்றாடலை நிரப்பும்.
சிலந்திகள் பின்னிய வலையாய்
என் வீடு
கனத்துப் பிசிறடிக்கும்.
ஒற்றைக் குரலில்
ஓர் ஆன்மாவின்
சோகம் பிழிந்த அலறல்
காற்றில் கரையும்.
எங்கள் வீதிகளுக்கு வேலிபோட வந்தவர்கள்
வட்டத்துள்..
நாம் வெளியே விழிகளைத் திறந்தபடி
வாழ்ந்து பங்கப்பட்ட
வரலாறொன்றின் சாட்சியாய்
எச்சமாகிப் போன எலும்புக்கூடுகள் நடுவே.
ஆனாலும்,
பார் புூமியெங்கும் பாறைபிளந்து
ஓராயிரம் வேர்ப்பின்னல்கள்
இனி அவை துளிர்விடும்.
-சுதாமதி

