10-19-2003, 08:13 PM
இன்டர்நெட் காதல்கள்
ஈ-மெயில், சாட்ரூம்கள், டேட்டிங் சர்வீஸ்களில் ஹசந்தித்து, காதல் வசப்படுபவர்கள் பலர். இந்தக் காதல் கதைகளில் சில இனிமையானவை. இன்னும் சில சோகமானவை. வேறு சில சிரிப்பூட்டுபவை.
[size=18]ஆள் மாறாட்டம்
இந்த சம்பவத்தை நான் பலரிடம் சொல்லிவிட்டேன். அத்தனை பேரும் இதை நம்பியதுதான் ஆச்சரியம். ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இன்டர்நெட் கஃபேகாரர் தொல்லை தாங்காமல் ஒரு டேட்டிங் சைட்டில் என் பெயரையும் ஈ-மெயில் முகவரியையும் கொடுத்துப் பதிவு செய்து கொண்டேன். அப்புறம் அதை மறந்து விட்டேன். ஏனென்றால் எனக்கு டேட்டிங் சைட்களில் நம்பிக்கை இல்லை. சாட்இ ஈ-மெயில்தான் என் ஸ்டைல்.
ரொம்ப நாள் கழித்து ஒரு முறை என் யாஹூ மெயில்பாக்ஸில் அந்த சைட்டிலிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. யாரோ ஒரு ஏஞ்சல்2000'-இடமிருந்து எனக்கு மெசேஜ் வந்திருந்ததைத் தெரிவிக்கத்தான் அந்த மெயில்.
அன்று மாலை ஏஞ்சல்2000 யாஹூ மெசஞ்சரில் வந்தாள். அவளுக்கு வாய் ரொம்ப நீளம். அன்று இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் ரசனையும் அவள் ரசனையும் நேர்மாறாக இருந்தது. ஆனால் இப்படி ஒரு பெண்ணுக்காகத்தான் நான் காத்திருந்தேன். நகைச்சுவை உணர்வு, புத்திசாலித்தனம், நல்ல ரசனை, எல்லாம் அவளிடம் இருந்தன. அவள் மும்பையில் இருப்பதாகவும், ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். அப்போதைக்கு நம்பினேன். நான் ஒரு வெப் டிசைனர். வயசு 26
மறுநாளும் சந்தித்தோம். ஆனால் நான் அப்போது ஆபீசில் இருந்த இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். மணி 9.30. கிளம்புகிறேன் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. நள்ளிரவு 12.45 வரை சாட்தான். அன்று ஆபீசிலேயே தூங்கினேன். எனக்கும் அவளுக்கும் ஒரு விஷயம் புரிந்தது. நாங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி. எனக்கு அவளிடம் லவ் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு soft corner இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் என்னைப் பற்றி அவளிடம் நிறைய சொன்னேன். அவள் எப்போதும் உஷாராக கம்மியாகத்தான் சொன்னாள்.
அதற்குப் பிறகுதான் சில விநோதமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அவளிடம் பேசும்போது ஒரு விஷயம் எனக்கு உறைக்கத் தொடங்கியது. நான் அவளுக்கு முன்பே தெரிந்த ஒரு இளைஞன் என்று நினைத்துக் கொண்டுதான் என்னுடன் இத்தனை நாளும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். நான் என்னைப் பற்றி சொன்ன பல விபரங்கள் அப்படியே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களுடன் ஒத்துப் போயிருக்கின்றன. நான் சரியாக மாட்டிக் கொண்டேன். நான் எவ்வளவு முறை சொல்லியும் அவள் நம்பவில்லை. "நான் தெலுங்குக்காரி, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கிறேன். நீ நரேஷாக இருந்தால் உனக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கும்" என்றாள். திடீரென்று அவள் என்னுடன் சாட் செய்வதை நிறுத்தினாள். யாஹூ மெசஞ்சரில் வருவதில்லை.
சில நாட்கள் கழித்து நான் அவளுக்கு ஒரு e-card ஐத் தூது அனுப்பினேன். அதற்கு பதிலாக அவள் என்னைத் திட்டி ஒரு e-card அனுப்பினாள். இந்த அட்டையைப் பார்த்து நான் நிஜமாகவே கடுப்பானேன். நாம் பிரிவதுதான் நல்லது. ஆளை விடு என்ற மெசேஜுடன் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன்.மறுநாள் அவளிடமிருந்து ஈ-மெயில் வந்திருந்தது. நான் அதற்கு பதில் போடவில்லை. யாஹூ மெசஞ்சரைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன்.
அவள் என்னை விடுவதாக இல்லை. எப்போதோ ஒரு முறை நான் ஒரு வெப்சைட்டைப் பற்றி அவளிடம் சொல்லியிருந்தேன். அந்த சைட்டின் மெசேஜ் போர்டில் அவள் அனுப்பிய கமென்ட் வந்திருக்கிறதாம். அந்த சைட்டை அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றி சொல்லி மெயில் போட்டிருந்தாள். எனக்கு மெயில் போட இந்த அல்ப விஷயத்தை ஒரு சாக்காக அவள் பயன்படுத்திக் கொண்டது எனக்குப் புரிந்தது. எங்ளுக்குள் ஒன்றுமே நடக்காதது போல் அவள் உற்சாகமாய் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு இரண்டு ஈ-மெயில்கள் கழித்து மீண்டும் காணாமல் போனாள். என்னை சீண்டிப் பார்ப்பது அவள் நோக்கமாக இருந்திருக்கலாம்.
இந்த முறை நான் விடவில்லை. eCrush.com என்ற வெப்சைட்டிலிருந்து அவளுக்கு ரகசியமாக ஒரு காதல் செய்தி அனுப்பினேன். இந்த சைட் நீங்கள் அனுப்பும் ஆணுக்குஃபெண்ணுக்கு ஹஉங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் உங்களைக் காதலிக்கிறார்' என்ற செய்தியை ஈ-மெயில் மூலம் தெரிவிக்கும். நீங்கள் அவரை அந்த சைட்டில் சந்தித்து நீங்கள் அவர் ரகசியமாக விரும்பும் ஆளாக இருந்தால் அவர் தன் நிஜ அடையாளத்தை உங்களிடம் தெரிவிப்பார். நான் அவளுக்கு eCrush அனுப்பி இரண்டு நாள் கழித்து எனக்கும் யாரிடமிருந்தோ ஒரு eCrush வந்தது. அது அவளாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.ஆனால் அவளுடன் சாட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டிருந்தது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ப்ரெஸ்டீஜை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
அதில் வந்த ஐடியாதான் eCrush. அவளுக்குள்ளும் என்னைப் போல் கொஞ்சமாவது ஒரு வெறுமை ஏற்பட்டிருக்கும். நாள் ஆக ஆக மெல்ல மெல்ல அந்த வெறுமை மறையத் தொடங்கியது. இருந்தாலும் அவளுடன் மீண்டும் பேசவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பல மாதங்கள் கழித்தும் நீடித்தது. அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று ஒரு நாள் யாஹூ மெசஞ்சரில் ஒரு மெசேஜ் அனுப்பினேன் "Wish you a happy married life"
மூன்று நாள் கழித்து அவளிடமிருந்து மூன்று offline message-கள் வந்திருந்தன. "Thanx", "Thanks உனக்கு எப்படித் தெரிஞ்சுது??," "சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன். எனக்குக் கல்யாணம் எல்லாம் ஆகல. நீ ஏன் அப்படி ஒரு மெசேஜை அனுப்பினே?" எனக்கு குஷி பிய்த்துக் கொண்டு போனது. பிறகு அவள் ஆன்லைனில் வந்தாள். "I missed you!" என்றேன். அவள் என் பெயரை தன் யாஹூ மெசஞ்சர் நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படி கெஞ்சினாள். அதாவது நாங்கள் பிரிந்தவுடன் அவள் என் பெயரைத் தன் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டிருந்தாள். என் நண்பர்கள் பட்டியலில் இருந்த உருப்படியான ஒரு பெயர் அவள்தான். அதனால் நான் அதை நீக்காமலே விட்டிருந்தேன்.
இப்போது நாங்கள் இணைந்துவிட்டோம். நான் "அவன்" இல்லை என்று இப்போது அவளுக்குத் தெரியும். அவள் என்னுடன் பேசும் தொனியும் மாறிவிட்டது. பேச்சில் அக்கறை எட்டிப் பார்க்கிறது. என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறாள். எனக்கு சாட் செய்ய நேரம் இருப்பதில்லை என்பதால் ஈ-மெயில்தான் அனுப்புகிறேன். அவள் நீளமான ஈ-மெயில்கள் அனுப்புகிறாள். தன்னைப் பற்றியும் முன்பை விட அதிகம் பேசுகிறாள். நான் மட்டும்தான் அவளை என் காதலி போல் செல்லமாக சீண்டுவேன். இப்போது அவளும் ஆரம்பித்துவிட்டாள். அவள் எங்கே வேலை பார்க்கிறாள் என்பதை மட்டும் சொல்லமாட்டேன் என்கிறாள். ஆகஇ இங்கே முடிகிறது கதை. நாங்கள் லவ் பண்ணவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது மாறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று நினைக்கிறேன். அப்படி ஒன்று நடக்கும்போது கதையை மேற்கொண்டு சொல்கிறேன்.
நன்றி : வெப்உலகம்
ஈ-மெயில், சாட்ரூம்கள், டேட்டிங் சர்வீஸ்களில் ஹசந்தித்து, காதல் வசப்படுபவர்கள் பலர். இந்தக் காதல் கதைகளில் சில இனிமையானவை. இன்னும் சில சோகமானவை. வேறு சில சிரிப்பூட்டுபவை.
[size=18]ஆள் மாறாட்டம்
இந்த சம்பவத்தை நான் பலரிடம் சொல்லிவிட்டேன். அத்தனை பேரும் இதை நம்பியதுதான் ஆச்சரியம். ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இன்டர்நெட் கஃபேகாரர் தொல்லை தாங்காமல் ஒரு டேட்டிங் சைட்டில் என் பெயரையும் ஈ-மெயில் முகவரியையும் கொடுத்துப் பதிவு செய்து கொண்டேன். அப்புறம் அதை மறந்து விட்டேன். ஏனென்றால் எனக்கு டேட்டிங் சைட்களில் நம்பிக்கை இல்லை. சாட்இ ஈ-மெயில்தான் என் ஸ்டைல்.
ரொம்ப நாள் கழித்து ஒரு முறை என் யாஹூ மெயில்பாக்ஸில் அந்த சைட்டிலிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. யாரோ ஒரு ஏஞ்சல்2000'-இடமிருந்து எனக்கு மெசேஜ் வந்திருந்ததைத் தெரிவிக்கத்தான் அந்த மெயில்.
அன்று மாலை ஏஞ்சல்2000 யாஹூ மெசஞ்சரில் வந்தாள். அவளுக்கு வாய் ரொம்ப நீளம். அன்று இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் ரசனையும் அவள் ரசனையும் நேர்மாறாக இருந்தது. ஆனால் இப்படி ஒரு பெண்ணுக்காகத்தான் நான் காத்திருந்தேன். நகைச்சுவை உணர்வு, புத்திசாலித்தனம், நல்ல ரசனை, எல்லாம் அவளிடம் இருந்தன. அவள் மும்பையில் இருப்பதாகவும், ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். அப்போதைக்கு நம்பினேன். நான் ஒரு வெப் டிசைனர். வயசு 26
மறுநாளும் சந்தித்தோம். ஆனால் நான் அப்போது ஆபீசில் இருந்த இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். மணி 9.30. கிளம்புகிறேன் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. நள்ளிரவு 12.45 வரை சாட்தான். அன்று ஆபீசிலேயே தூங்கினேன். எனக்கும் அவளுக்கும் ஒரு விஷயம் புரிந்தது. நாங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி. எனக்கு அவளிடம் லவ் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு soft corner இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் என்னைப் பற்றி அவளிடம் நிறைய சொன்னேன். அவள் எப்போதும் உஷாராக கம்மியாகத்தான் சொன்னாள்.
அதற்குப் பிறகுதான் சில விநோதமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அவளிடம் பேசும்போது ஒரு விஷயம் எனக்கு உறைக்கத் தொடங்கியது. நான் அவளுக்கு முன்பே தெரிந்த ஒரு இளைஞன் என்று நினைத்துக் கொண்டுதான் என்னுடன் இத்தனை நாளும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். நான் என்னைப் பற்றி சொன்ன பல விபரங்கள் அப்படியே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களுடன் ஒத்துப் போயிருக்கின்றன. நான் சரியாக மாட்டிக் கொண்டேன். நான் எவ்வளவு முறை சொல்லியும் அவள் நம்பவில்லை. "நான் தெலுங்குக்காரி, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கிறேன். நீ நரேஷாக இருந்தால் உனக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கும்" என்றாள். திடீரென்று அவள் என்னுடன் சாட் செய்வதை நிறுத்தினாள். யாஹூ மெசஞ்சரில் வருவதில்லை.
சில நாட்கள் கழித்து நான் அவளுக்கு ஒரு e-card ஐத் தூது அனுப்பினேன். அதற்கு பதிலாக அவள் என்னைத் திட்டி ஒரு e-card அனுப்பினாள். இந்த அட்டையைப் பார்த்து நான் நிஜமாகவே கடுப்பானேன். நாம் பிரிவதுதான் நல்லது. ஆளை விடு என்ற மெசேஜுடன் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன்.மறுநாள் அவளிடமிருந்து ஈ-மெயில் வந்திருந்தது. நான் அதற்கு பதில் போடவில்லை. யாஹூ மெசஞ்சரைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன்.
அவள் என்னை விடுவதாக இல்லை. எப்போதோ ஒரு முறை நான் ஒரு வெப்சைட்டைப் பற்றி அவளிடம் சொல்லியிருந்தேன். அந்த சைட்டின் மெசேஜ் போர்டில் அவள் அனுப்பிய கமென்ட் வந்திருக்கிறதாம். அந்த சைட்டை அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றி சொல்லி மெயில் போட்டிருந்தாள். எனக்கு மெயில் போட இந்த அல்ப விஷயத்தை ஒரு சாக்காக அவள் பயன்படுத்திக் கொண்டது எனக்குப் புரிந்தது. எங்ளுக்குள் ஒன்றுமே நடக்காதது போல் அவள் உற்சாகமாய் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு இரண்டு ஈ-மெயில்கள் கழித்து மீண்டும் காணாமல் போனாள். என்னை சீண்டிப் பார்ப்பது அவள் நோக்கமாக இருந்திருக்கலாம்.
இந்த முறை நான் விடவில்லை. eCrush.com என்ற வெப்சைட்டிலிருந்து அவளுக்கு ரகசியமாக ஒரு காதல் செய்தி அனுப்பினேன். இந்த சைட் நீங்கள் அனுப்பும் ஆணுக்குஃபெண்ணுக்கு ஹஉங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் உங்களைக் காதலிக்கிறார்' என்ற செய்தியை ஈ-மெயில் மூலம் தெரிவிக்கும். நீங்கள் அவரை அந்த சைட்டில் சந்தித்து நீங்கள் அவர் ரகசியமாக விரும்பும் ஆளாக இருந்தால் அவர் தன் நிஜ அடையாளத்தை உங்களிடம் தெரிவிப்பார். நான் அவளுக்கு eCrush அனுப்பி இரண்டு நாள் கழித்து எனக்கும் யாரிடமிருந்தோ ஒரு eCrush வந்தது. அது அவளாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.ஆனால் அவளுடன் சாட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டிருந்தது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ப்ரெஸ்டீஜை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
அதில் வந்த ஐடியாதான் eCrush. அவளுக்குள்ளும் என்னைப் போல் கொஞ்சமாவது ஒரு வெறுமை ஏற்பட்டிருக்கும். நாள் ஆக ஆக மெல்ல மெல்ல அந்த வெறுமை மறையத் தொடங்கியது. இருந்தாலும் அவளுடன் மீண்டும் பேசவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பல மாதங்கள் கழித்தும் நீடித்தது. அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று ஒரு நாள் யாஹூ மெசஞ்சரில் ஒரு மெசேஜ் அனுப்பினேன் "Wish you a happy married life"
மூன்று நாள் கழித்து அவளிடமிருந்து மூன்று offline message-கள் வந்திருந்தன. "Thanx", "Thanks உனக்கு எப்படித் தெரிஞ்சுது??," "சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன். எனக்குக் கல்யாணம் எல்லாம் ஆகல. நீ ஏன் அப்படி ஒரு மெசேஜை அனுப்பினே?" எனக்கு குஷி பிய்த்துக் கொண்டு போனது. பிறகு அவள் ஆன்லைனில் வந்தாள். "I missed you!" என்றேன். அவள் என் பெயரை தன் யாஹூ மெசஞ்சர் நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படி கெஞ்சினாள். அதாவது நாங்கள் பிரிந்தவுடன் அவள் என் பெயரைத் தன் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டிருந்தாள். என் நண்பர்கள் பட்டியலில் இருந்த உருப்படியான ஒரு பெயர் அவள்தான். அதனால் நான் அதை நீக்காமலே விட்டிருந்தேன்.
இப்போது நாங்கள் இணைந்துவிட்டோம். நான் "அவன்" இல்லை என்று இப்போது அவளுக்குத் தெரியும். அவள் என்னுடன் பேசும் தொனியும் மாறிவிட்டது. பேச்சில் அக்கறை எட்டிப் பார்க்கிறது. என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறாள். எனக்கு சாட் செய்ய நேரம் இருப்பதில்லை என்பதால் ஈ-மெயில்தான் அனுப்புகிறேன். அவள் நீளமான ஈ-மெயில்கள் அனுப்புகிறாள். தன்னைப் பற்றியும் முன்பை விட அதிகம் பேசுகிறாள். நான் மட்டும்தான் அவளை என் காதலி போல் செல்லமாக சீண்டுவேன். இப்போது அவளும் ஆரம்பித்துவிட்டாள். அவள் எங்கே வேலை பார்க்கிறாள் என்பதை மட்டும் சொல்லமாட்டேன் என்கிறாள். ஆகஇ இங்கே முடிகிறது கதை. நாங்கள் லவ் பண்ணவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது மாறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று நினைக்கிறேன். அப்படி ஒன்று நடக்கும்போது கதையை மேற்கொண்டு சொல்கிறேன்.
நன்றி : வெப்உலகம்
................

