06-21-2003, 09:51 AM
காடுகள்
கல்லு முள்ளுகள்
கரை காணா இடமெனத் தாவி
உலாவரும் ஊதல் காற்றே
நீ பேறு பெற்றாய.
கந்தகப் பொடி சுமந்து
கரைந்துருகி காவியமானவர்கள்
கட்டுடல்களும் தடவியே வருவாய்
பெருமைகொள்.
நீ பேறு பெற்றாய்.
உயிர் பிரியுமந்தக் கணமதில்
வாயுதிர்த்த வார்த்தைகள்
உம்முள் அமிழ்ந்துள்ளனவே.
அடியேனுடன் அந்த
உணர்வின் மேன்மையினை பகிர்வாயா?
வான் வெளிக்கு ஈடாக
நீளக் கால் பரப்பியே
மண் பருக்கைகள் மீது}ர்ந்து
கரைவந்தெம் கால் தடவும்
கடல் மடியே
என்னோடு பேசு.
உன் மடியில்தான்
உதயம் காண ஒளியாய் ஆனவர்
உயிர் மூச்சைத் திறந்தார்?
கரை நின்று விடைதேடு மெந்தன்
விழிகளுக்கு விடை கொடு.
ஒரு கணம் தானுமெந்தன்
புூமுகங்களைக் காவி வந்து காட்டிவிடு.
அலையின் மடிமீது காவிவந்து
அடியேனுக்கு காட்டிவிடு.
அது தானுமென்னை
ஓரளவுக்கு தேற்றுவிக்கும்.
அ. பி. குணா
கல்லு முள்ளுகள்
கரை காணா இடமெனத் தாவி
உலாவரும் ஊதல் காற்றே
நீ பேறு பெற்றாய.
கந்தகப் பொடி சுமந்து
கரைந்துருகி காவியமானவர்கள்
கட்டுடல்களும் தடவியே வருவாய்
பெருமைகொள்.
நீ பேறு பெற்றாய்.
உயிர் பிரியுமந்தக் கணமதில்
வாயுதிர்த்த வார்த்தைகள்
உம்முள் அமிழ்ந்துள்ளனவே.
அடியேனுடன் அந்த
உணர்வின் மேன்மையினை பகிர்வாயா?
வான் வெளிக்கு ஈடாக
நீளக் கால் பரப்பியே
மண் பருக்கைகள் மீது}ர்ந்து
கரைவந்தெம் கால் தடவும்
கடல் மடியே
என்னோடு பேசு.
உன் மடியில்தான்
உதயம் காண ஒளியாய் ஆனவர்
உயிர் மூச்சைத் திறந்தார்?
கரை நின்று விடைதேடு மெந்தன்
விழிகளுக்கு விடை கொடு.
ஒரு கணம் தானுமெந்தன்
புூமுகங்களைக் காவி வந்து காட்டிவிடு.
அலையின் மடிமீது காவிவந்து
அடியேனுக்கு காட்டிவிடு.
அது தானுமென்னை
ஓரளவுக்கு தேற்றுவிக்கும்.
அ. பி. குணா

