08-06-2005, 06:53 AM
தென்கொரியாவில் நடைபெற்ற அனைத்துலக சமாதான விளையாட்டு விழாவில் தமிழீழ வீரர்கள் சாதனை!!!
Written by Pandara Vanniyan Saturday, 06 August 2005
யுூலை 23ம் நாள் தொடக்கம் ஆகஸ்ட் 02ம் நாள் வரை தென்கொரியாவில் நடைபெற்ற 23 அகவைக்குட்பட்டோருக்கான அனைத்துலக சமாதான விளையாட்டு விழாவில் நிரஞ்சன் மற்றும் ரவீந்திரன் ரதீசன் ஆகிய தமிழீழ வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் 400 மீட்டர், 800 மீட்டர் ஆகிய ஓட்டப்போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 4 தர 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், திருகோணமலை மாவட்ட வீரரான ரவீந்திரன் ரதீசன் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும், 4 தர 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்தச் சாதனை வீரர்களுக்கு தமிழீழ விளையாட்டுத்துறை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இவர்களின் போக்குவரத்திற்காக தமிழீழ விளையாட்டுத்துறை இவர்களிற்கு 2 இலட்சம் ரூபா பணத்தினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்துள்ள நிரஞ்சன் மற்றும் ரதீசன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Written by Pandara Vanniyan Saturday, 06 August 2005
யுூலை 23ம் நாள் தொடக்கம் ஆகஸ்ட் 02ம் நாள் வரை தென்கொரியாவில் நடைபெற்ற 23 அகவைக்குட்பட்டோருக்கான அனைத்துலக சமாதான விளையாட்டு விழாவில் நிரஞ்சன் மற்றும் ரவீந்திரன் ரதீசன் ஆகிய தமிழீழ வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் 400 மீட்டர், 800 மீட்டர் ஆகிய ஓட்டப்போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 4 தர 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், திருகோணமலை மாவட்ட வீரரான ரவீந்திரன் ரதீசன் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும், 4 தர 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்தச் சாதனை வீரர்களுக்கு தமிழீழ விளையாட்டுத்துறை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இவர்களின் போக்குவரத்திற்காக தமிழீழ விளையாட்டுத்துறை இவர்களிற்கு 2 இலட்சம் ரூபா பணத்தினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்துள்ள நிரஞ்சன் மற்றும் ரதீசன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

