08-05-2005, 09:16 AM
Nitharsan Wrote:அந்த புலானாய்வு அரசியலின் படி இந்த தனது சுற்று வட்ட நாடுகளுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வரும் போது தமிழீழம் ஒன்றொரு நாடு அவர்களுக்கு தேவையில்லை. இது வரை காலமும் இலங்கை அரசை தனது கைக்குள் வைத்திரக்கவே இந்தா தமிழருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்ப்பட்டது. ஆனால் சீனா..பாக்கிஸ்தான் போன்றவற்றுடனும் அதே நேரம் அமேரிக்காவுடனும் இந்தியா ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் ஈழத்தமிழரின் நிலமை மோசமாகும் என்பதில் ஐயமில்லை காரணம் இந்து சமூத்திர சுற்றுவட்டத்தில் ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் தயாராய் இராது காரணம் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால்.. இந்தியாவின் இந்நடவடிக்கை சாத்தியப்படாத என்பது எனது கணிப்பு காரணம் இந்தியாவில் கொள்கைகளை பெரும்பாலும் அரசில் வாதிகளே தீர்மானிக்கின்றனர். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்ப்பட்டால் இந்த வெளி நாட்டுக்கு கொள்கைகள் தூக்கியேறிப்படலாம்....
நானும் இதைத்தான் தான் நினைக்கிறன். அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கு என்பது அமெரிக்க பொருளாதாரத்தை மையமாகக்கொண்டது அது ஏற்கனவே இந்தியாவில் வேரூண்டி இந்தியமக்களின் நாளாந்தக் கனவாக உள்ளது. இதை விட இந்தியா அமெரிக்காவுக்கு கொடுக்க ஏதும் இருப்பதாய் தெரியவில்லை.... அணு ஒப்பந்தம், ACPSA ஒப்பந்தங்கள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். சீனாவுடனான நெருக்கம் வடபகுதி பாதுகாப்பு ச்செலவுகளை குறைக்கலாம்.
இப்போதான கேள்வி இந்தியா இப்போதைவிட எப்படி கடுமையாக நடக்கமுடியும். ஏற்கனவே 1987ம் வருடமே இந்தியா கடுமையான நடவடிக்கை களில் இறங்கிவிட்டது. இப்போதும் கடுமையாகத்தான் நடக்கின்றது. உதாரணம் 1993ம் வருட கிட்டண்ணாவின் இளப்பு, 2002ம் வருட புலிகளின் கப்பல்கள் தகர்ப்பு.
இப்போ உள்ள கேள்வி அமெரிக்கா இந்தியா கூட்டுச்சேர்ந்து இலங்கையின் அமைவிடத்தையும் வளங்களையும் பங்குபோடுமா?.... என்னைக்கேட்டால். இல்லை என்பேன் காரணம் அமெரிக்க அமைவிடம் தெனாசியாவில் உறுதியாகாத நிலையில் எந்த ஒரு விட்டுக்கொடுப்புக்கும் அமெரிக்கா சம்மதிக்காது..ஏனென்றால் அது அமெரிக்காவின் எதிர்கால நடவடிக்கைகளை பாதிக்கும். அவ்வளவு விரைவாய் இந்தியா நம்பத்தகுந்தவர்களும் அல்ல...
யார் என்ன செய்தாலும் தமிழர்களின் எதிகாலம் தமிழர்களின் கையில் மட்டும் தான் இருக்கிறது. அதற்காக தமிழர் தங்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.. எப்படி என்றால்.. <b>பொருளாதாரத்தால். </b>
::

