06-21-2003, 09:49 AM
மண்ணுள் புதையுண்டு போனவரே
உயிர்ப்புறுவீர்.
எண்ணிலடங்காது- பகைக்
கரத்தால் கொன்றொழிக்கப் பட்டவரே
மீண்டும் பிறவுங்கள்.
கானகத்து மரங்களே
தளிர்கள் ஒவ வொன்றையும் மனிதராய்த் தருவீர்.
வாடிச் சருகாகும் புூக்களும் உயிர் பெற்றிங்குலவட்டும்
எறிகணையின் இடிச்சிரிப்பில்
குவியலாய்க் கிடக்கும் கட்டடத்தின் துகள்களே
உங்களுக்குள்ளும் உயிர்வந்து கொள்ளட்டும்.
எம் புூமியிற் பரந்துள நீர் நிலைகளெல்லாம்
நெருப்புச் சுமந்தெழுக
யாவரும் வருவீர்
யாவையும் எழுவீர்.
இடியோசை எழுப்பாதெழுந்த
புத்தாண்டை வரவேற்க
வாசலிற் கோலமிடுவோம்
மலர் தூவி வரவேற்போம்.
மனம் நிறைந்தெம் வாசலைக் கடந்து வந்து
ஆரத்தழுவி அன்பு காட்டுமெனில்
என்பையுங் கொடுப்போம்
தழுவிட விரையும்- எம்
கரங்களின் என்புகளை நசிக்குமெனில்
வீரியங் கொள்ள விழைவோம்.
நம்பிச் சிரித்த பற்களுக்கு. தன்
கோரப் பற்களைக் காட்டுமெனில்
அவற்றை உடைக்கும் பலம் கரங்களிற் கொள்வோம்
வசந்தம் சொரிந்து நாம்
வரவேற்று மகிழ்கையில்
தீக்கனல்களே தன் பரிசெனத் தருமெனில்
நெருப்பு நதியாய் மீண்டும் பெருகுவோம்
காட்டாற்று வெள்ளத்தை
ஆற்றுப்படுத்தி நாம்
அமைதியாய்ப் பாய்கையில்
கொந்தளிப்பதே தன் கொள்கையெனக் கொண்டால்
வெந்தழல் சுமப்போம் வாருங்கள்
உயிருள்ள யாவரும், உயிரற்ற பாவையும்.
முந்தைய ஆண்டுகள் பலவாறாய் வந்தன.
வரும்போது இனிமையாய்க் கதைபேசின பல.
பின்னர் கர்ண கடூரமாய்ச் சிரித்தன.
எம் நம்பிக்கை சிதைத்துக் குரல்வளை நசித்தன.
வரும்போதே எறிகணை மழை தூவி வந்தன சில
எல்லாமே எம் இரத்தக் குழம்பையும்
தசைக் குவியல்களையும் தின்று பசியாறிக் கொண்டன.
ஒவ வொன்றின் இறுதியிலும்
அதற்கெதிராய்ப் போரிட்ட புூக்களுக்கு
நெய்விளக்கேற்றி நெக்குருகினோம்.
அவர்க்காயன்றி
அநியாயமாய்ப் போனோருக்காக
அழுது கொண்டது மனது
எதிர்ப்பலையெழுப்பி வீழ்ந்தோரின்
விதைகுழிக்கருகில் நின்று வீணாகிப் போனவர்க்காக
விம்மியதெம் இதயம், அதனால்தான்
எச்சரிக்கையோடு வரவேற்போம் இதனையும்.
எத்தனை பாரச் சிலுவைகள் சுமந்தோம்.
எத்தனை உயிர்களைப் பலியாய்க் கொடுத்தோம்.
எத்தனை காலம் மனத்தவம் புூண்டோம்.
வருவதும் விரைவதும்
இடையிடை இழுபறிப் பட்டெமை அலைப்பதும்
இறுதியிற் தோல்வியில் முடிவதும்
வருகின்ற ஆண்டின் மகிமையைப் பொறுத்தது.
விட்டேற்றியாய்- இங்கனைத்தையும் உரைக்கிலேன்.
நட்டாற்றில் நின்- எம் இனத்தைத் துணிவெனும்
துடுப்பாற் கரை சேர்த்த
தூங்கா மணி விளக்கின் சுடர்க்கீழ்
ஒன்றுபட்டெழுந்த மாந்தரின் குரலாய் ஒலிக்கிறேன்
இனிய ஆண்டே
இதழ் விரிப்பாய் இதழ் தருவாய்.
சுகந்தம் தருவது உன் சுயத்தைப் பொறுத்தது.
இல்லை உன் மெல்லிதழ்க் கரத்திடை
புூநாகம் இருக்குமெனில்
விண் தொட்டெழ விரையும் வேகத்துடன் உன்னை
மண் பற்றி விழவைக்கும்
எம் உயிருள்ள யாவரும்
உயிரற்ற யாவையும்.
அம்புலி
உயிர்ப்புறுவீர்.
எண்ணிலடங்காது- பகைக்
கரத்தால் கொன்றொழிக்கப் பட்டவரே
மீண்டும் பிறவுங்கள்.
கானகத்து மரங்களே
தளிர்கள் ஒவ வொன்றையும் மனிதராய்த் தருவீர்.
வாடிச் சருகாகும் புூக்களும் உயிர் பெற்றிங்குலவட்டும்
எறிகணையின் இடிச்சிரிப்பில்
குவியலாய்க் கிடக்கும் கட்டடத்தின் துகள்களே
உங்களுக்குள்ளும் உயிர்வந்து கொள்ளட்டும்.
எம் புூமியிற் பரந்துள நீர் நிலைகளெல்லாம்
நெருப்புச் சுமந்தெழுக
யாவரும் வருவீர்
யாவையும் எழுவீர்.
இடியோசை எழுப்பாதெழுந்த
புத்தாண்டை வரவேற்க
வாசலிற் கோலமிடுவோம்
மலர் தூவி வரவேற்போம்.
மனம் நிறைந்தெம் வாசலைக் கடந்து வந்து
ஆரத்தழுவி அன்பு காட்டுமெனில்
என்பையுங் கொடுப்போம்
தழுவிட விரையும்- எம்
கரங்களின் என்புகளை நசிக்குமெனில்
வீரியங் கொள்ள விழைவோம்.
நம்பிச் சிரித்த பற்களுக்கு. தன்
கோரப் பற்களைக் காட்டுமெனில்
அவற்றை உடைக்கும் பலம் கரங்களிற் கொள்வோம்
வசந்தம் சொரிந்து நாம்
வரவேற்று மகிழ்கையில்
தீக்கனல்களே தன் பரிசெனத் தருமெனில்
நெருப்பு நதியாய் மீண்டும் பெருகுவோம்
காட்டாற்று வெள்ளத்தை
ஆற்றுப்படுத்தி நாம்
அமைதியாய்ப் பாய்கையில்
கொந்தளிப்பதே தன் கொள்கையெனக் கொண்டால்
வெந்தழல் சுமப்போம் வாருங்கள்
உயிருள்ள யாவரும், உயிரற்ற பாவையும்.
முந்தைய ஆண்டுகள் பலவாறாய் வந்தன.
வரும்போது இனிமையாய்க் கதைபேசின பல.
பின்னர் கர்ண கடூரமாய்ச் சிரித்தன.
எம் நம்பிக்கை சிதைத்துக் குரல்வளை நசித்தன.
வரும்போதே எறிகணை மழை தூவி வந்தன சில
எல்லாமே எம் இரத்தக் குழம்பையும்
தசைக் குவியல்களையும் தின்று பசியாறிக் கொண்டன.
ஒவ வொன்றின் இறுதியிலும்
அதற்கெதிராய்ப் போரிட்ட புூக்களுக்கு
நெய்விளக்கேற்றி நெக்குருகினோம்.
அவர்க்காயன்றி
அநியாயமாய்ப் போனோருக்காக
அழுது கொண்டது மனது
எதிர்ப்பலையெழுப்பி வீழ்ந்தோரின்
விதைகுழிக்கருகில் நின்று வீணாகிப் போனவர்க்காக
விம்மியதெம் இதயம், அதனால்தான்
எச்சரிக்கையோடு வரவேற்போம் இதனையும்.
எத்தனை பாரச் சிலுவைகள் சுமந்தோம்.
எத்தனை உயிர்களைப் பலியாய்க் கொடுத்தோம்.
எத்தனை காலம் மனத்தவம் புூண்டோம்.
வருவதும் விரைவதும்
இடையிடை இழுபறிப் பட்டெமை அலைப்பதும்
இறுதியிற் தோல்வியில் முடிவதும்
வருகின்ற ஆண்டின் மகிமையைப் பொறுத்தது.
விட்டேற்றியாய்- இங்கனைத்தையும் உரைக்கிலேன்.
நட்டாற்றில் நின்- எம் இனத்தைத் துணிவெனும்
துடுப்பாற் கரை சேர்த்த
தூங்கா மணி விளக்கின் சுடர்க்கீழ்
ஒன்றுபட்டெழுந்த மாந்தரின் குரலாய் ஒலிக்கிறேன்
இனிய ஆண்டே
இதழ் விரிப்பாய் இதழ் தருவாய்.
சுகந்தம் தருவது உன் சுயத்தைப் பொறுத்தது.
இல்லை உன் மெல்லிதழ்க் கரத்திடை
புூநாகம் இருக்குமெனில்
விண் தொட்டெழ விரையும் வேகத்துடன் உன்னை
மண் பற்றி விழவைக்கும்
எம் உயிருள்ள யாவரும்
உயிரற்ற யாவையும்.
அம்புலி

