06-21-2003, 09:49 AM
பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9)
திறப்பு, உணர்வு புூர்வமான நிகழ்வு:
ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படையினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் பிரதான யாழ் -கண்டி வீதி அதிகாரபுூர்வமாக 08.04.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதேவேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கெனச் சென்ற 15 விடுதலைப் புலிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள்திரண்டு மகிழ்ச்சி ஆரவாங்களுடன் தூக்கி அழைத்துச் சென்றனர். மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட இவ வுணர்வு புூர்வமான நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய இராணுவத் தளபதிகள் கேணல் பானு, கேணல் தீபன் ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தா களும், நோர்வேயின் போர்நிறுத்தக் குழுவின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட காண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் மற்றும் யாழ்-குடாநாட்டுக்கான சிறீலங்கா இராணுவத்தாளபதி மேஐர் nஐனரல் சிசிர விஐயசூரியாவும் மேலும் இரு இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
லையாய் விரித்தெழுந்த அளகபாரமே
எத்தனை அழகாயிருந்தாய்.
வரிசையிட்ட வனவிருட்சங்களிடையே
உரிமை கொண்டோடிய நெடியவளே!
நிலா நாளெனில்
உன் நிர்மல அழகே தனியானது.
உலா வருவோரிடையே
ஒலியற்ற மொழியில் உரையாடுவாய்.
அந்த உணர்வின் இசைகேட்பது சுகம்,
அடித்துப் போட்ட கரும்பாம்பாய் கிடந்தாலும்
எத்தனை அழகிருந்தது உன்னில்.
இரவெனில் உன்னெழில் இலங்கும்.
தேவமகளென வானிருந்திறங்கிய
சொர்ப்பன மகள் நீ.
தெருவென உன்னை எவர் நினைத்தார்?
தாயென இருந்தாய் எம் நெஞ்சில்.
பனிதூவும் இரவில் பார்க்கும் போது
மஞ்சள் குளித்துவரும் தங்கையரைப்போல
விழிமலர்த்தி விட்டு
பேசாமற் கிடப்பாய் போக்கிரி.
ஏதேனும் பேசவேண்டும் போலத் துடிக்கும்
கள்ளி கதைக்கவே மாட்டாய்
உள்ளிழுத்த ஆசையுடன் உட்கார்ந்திருப்பாய்
வனத்திடை ஓடிய உன்காலிடை
வசமிழந்திருந்தோம் ஒருகாலம்.
ஆனையிறவுக்கு இப்பால்வரும் ஒவ வொரு முறையும்
உன் அழகில் கிறங்கிப் போவோம்.
முறிகண்டியிலிருந்து உன் மேனியழகு
கோடிபெறக் கொலுவிருப்பாய்.
புழுதியடித்த பிச்சைக்காரனைப் போல
கொக்காவில் இன்றுபோலவே அன்றும்
பற்றைக் காடுபடர்ந்த பரதேசிக் கோலம்.
'பதினெட்டாம் போர்' ஏற்றத்தில் ஏற
மேனிக்குள் பாயும் ஒரு பரவசம்.
எம் முந்தைத் தலைமுறையின் மூத்தோன்
உப்புப்போட்டு உண்ட ஒரு தமிழன்
வெள்ளைக்காரனுக்கே தண்ணிகாட்டிய வீரன்
பண்டாரவன்னியன்
இந்த வெட்டையிற் தானாம்
எதிரிகளை எதிர்கொண்டான்.
அவன் காலடி மண்ணைத் தொட்டுத்தான்
இன்றும் களத்திலிருக்கின்றனர் பிள்ளைகள்
பழைய முறிகண்டி வர
காட்டுமல்லி வாசம் மூக்கிலடிக்கும்.
மூசலற்று மேய்ந்தபடி
ஒற்றைக்கண் யானையொன்று எப்போம் நிற்கும்
மாங்குளம் சந்தி மகுடம் தரித்தெழுந்து
வந்து போவோரை வரவேற்கும்.
சின்னவெளிச்சங்களுடனான சிறு கடைகளெனினும்
இரவில் என்னே அழகு
ஊசியாய் குத்தும் பனிக்குளிர்
ஒரு 'பிளேன்hP' அடித்ததும் ஓடிப்போகும்.
அதற்கும் அடங்கவில்லையெனில் ஒரு 'சிகரெட்' போதும்
ஐயோ போதுமென அகலும்.
கனகராயன்குளம்
புளியங்குளம்
விளக்கு வைச்ச குளம்
ஓமந்தையென எத்தனை ஊர்கள்
அத்தனைக்கும் நீதானே அரசி.
உள்ளிருக்கும் ஊர்களிலிருந்து ஏறினால்
அள்ளி அழகெறிந்தபடி கிடப்பாய்.
ஒருகாலம் 'சுப்பர் டீலக்ஸ்' உலவின உன்னில்.
வரிசைகட்டி பாவுூர்திகள் வறுகின.
வண்டிகட்டி வன்னி மாந்தர்
உன்னில் உலாப் போயினர்.
திருமேனி நசியாமற் கிடப்பாய் சிரித்தபடி.
புதூர் நாகதம்பிரான் பொங்கலெனில்
விதானைமார் வீடுகளிற்தான் விருந்து.
கொள்ளை சனத்தின் குவியலில் குலுங்கிப்போவாய்.
எல்லாம் இழந்து கிடக்கிறாய் இன்று.
தோளில் வலுவுடைய தேவியே!
நீ வாளெடுத்த கோலமும் கண்டோம்.
மடியேறிய பகைக்கெதிராய் நிமிர்ந்தபோது
சூரியனே கூசும் சுடர் கொண்டிருந்தாய்.
அது 'ஜெயசிக்குறு' காலம்
பிள்ளைகளை நெஞ்சில் பொத்தியபடி போரிட்டாய்.
பகை சரிந்து நிமிர்ந்தபோது
களைப்புற்ற உன் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
அது ஆனந்தக் கண்ணீரென அறிவோம்.
ஒவ வொருவரையும் கட்டி உச்சிமோர்ந்தாய்
அன்றுதான் கண்டோம் உன் அன்னைவடிவம்
வரலாறாய் வாழும் வழியே!
மீண்டும் ஒளியுற்றுலவும் காலம் உனக்கானது
புூண்டெழுவாய் புதுக்கோலம்.
நாமிருக்கோமெனினும் நீயிருப்பாய்
எம்பிள்ளைகள் போய்வரும்போது
வரலாறுரைக்கும் வாயளாய்
பேசாய் பெருந்தெருவே.
-புதுவை இரத்தினதுரை
திறப்பு, உணர்வு புூர்வமான நிகழ்வு:
ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படையினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் பிரதான யாழ் -கண்டி வீதி அதிகாரபுூர்வமாக 08.04.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதேவேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கெனச் சென்ற 15 விடுதலைப் புலிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள்திரண்டு மகிழ்ச்சி ஆரவாங்களுடன் தூக்கி அழைத்துச் சென்றனர். மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட இவ வுணர்வு புூர்வமான நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய இராணுவத் தளபதிகள் கேணல் பானு, கேணல் தீபன் ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தா களும், நோர்வேயின் போர்நிறுத்தக் குழுவின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட காண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் மற்றும் யாழ்-குடாநாட்டுக்கான சிறீலங்கா இராணுவத்தாளபதி மேஐர் nஐனரல் சிசிர விஐயசூரியாவும் மேலும் இரு இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
லையாய் விரித்தெழுந்த அளகபாரமே
எத்தனை அழகாயிருந்தாய்.
வரிசையிட்ட வனவிருட்சங்களிடையே
உரிமை கொண்டோடிய நெடியவளே!
நிலா நாளெனில்
உன் நிர்மல அழகே தனியானது.
உலா வருவோரிடையே
ஒலியற்ற மொழியில் உரையாடுவாய்.
அந்த உணர்வின் இசைகேட்பது சுகம்,
அடித்துப் போட்ட கரும்பாம்பாய் கிடந்தாலும்
எத்தனை அழகிருந்தது உன்னில்.
இரவெனில் உன்னெழில் இலங்கும்.
தேவமகளென வானிருந்திறங்கிய
சொர்ப்பன மகள் நீ.
தெருவென உன்னை எவர் நினைத்தார்?
தாயென இருந்தாய் எம் நெஞ்சில்.
பனிதூவும் இரவில் பார்க்கும் போது
மஞ்சள் குளித்துவரும் தங்கையரைப்போல
விழிமலர்த்தி விட்டு
பேசாமற் கிடப்பாய் போக்கிரி.
ஏதேனும் பேசவேண்டும் போலத் துடிக்கும்
கள்ளி கதைக்கவே மாட்டாய்
உள்ளிழுத்த ஆசையுடன் உட்கார்ந்திருப்பாய்
வனத்திடை ஓடிய உன்காலிடை
வசமிழந்திருந்தோம் ஒருகாலம்.
ஆனையிறவுக்கு இப்பால்வரும் ஒவ வொரு முறையும்
உன் அழகில் கிறங்கிப் போவோம்.
முறிகண்டியிலிருந்து உன் மேனியழகு
கோடிபெறக் கொலுவிருப்பாய்.
புழுதியடித்த பிச்சைக்காரனைப் போல
கொக்காவில் இன்றுபோலவே அன்றும்
பற்றைக் காடுபடர்ந்த பரதேசிக் கோலம்.
'பதினெட்டாம் போர்' ஏற்றத்தில் ஏற
மேனிக்குள் பாயும் ஒரு பரவசம்.
எம் முந்தைத் தலைமுறையின் மூத்தோன்
உப்புப்போட்டு உண்ட ஒரு தமிழன்
வெள்ளைக்காரனுக்கே தண்ணிகாட்டிய வீரன்
பண்டாரவன்னியன்
இந்த வெட்டையிற் தானாம்
எதிரிகளை எதிர்கொண்டான்.
அவன் காலடி மண்ணைத் தொட்டுத்தான்
இன்றும் களத்திலிருக்கின்றனர் பிள்ளைகள்
பழைய முறிகண்டி வர
காட்டுமல்லி வாசம் மூக்கிலடிக்கும்.
மூசலற்று மேய்ந்தபடி
ஒற்றைக்கண் யானையொன்று எப்போம் நிற்கும்
மாங்குளம் சந்தி மகுடம் தரித்தெழுந்து
வந்து போவோரை வரவேற்கும்.
சின்னவெளிச்சங்களுடனான சிறு கடைகளெனினும்
இரவில் என்னே அழகு
ஊசியாய் குத்தும் பனிக்குளிர்
ஒரு 'பிளேன்hP' அடித்ததும் ஓடிப்போகும்.
அதற்கும் அடங்கவில்லையெனில் ஒரு 'சிகரெட்' போதும்
ஐயோ போதுமென அகலும்.
கனகராயன்குளம்
புளியங்குளம்
விளக்கு வைச்ச குளம்
ஓமந்தையென எத்தனை ஊர்கள்
அத்தனைக்கும் நீதானே அரசி.
உள்ளிருக்கும் ஊர்களிலிருந்து ஏறினால்
அள்ளி அழகெறிந்தபடி கிடப்பாய்.
ஒருகாலம் 'சுப்பர் டீலக்ஸ்' உலவின உன்னில்.
வரிசைகட்டி பாவுூர்திகள் வறுகின.
வண்டிகட்டி வன்னி மாந்தர்
உன்னில் உலாப் போயினர்.
திருமேனி நசியாமற் கிடப்பாய் சிரித்தபடி.
புதூர் நாகதம்பிரான் பொங்கலெனில்
விதானைமார் வீடுகளிற்தான் விருந்து.
கொள்ளை சனத்தின் குவியலில் குலுங்கிப்போவாய்.
எல்லாம் இழந்து கிடக்கிறாய் இன்று.
தோளில் வலுவுடைய தேவியே!
நீ வாளெடுத்த கோலமும் கண்டோம்.
மடியேறிய பகைக்கெதிராய் நிமிர்ந்தபோது
சூரியனே கூசும் சுடர் கொண்டிருந்தாய்.
அது 'ஜெயசிக்குறு' காலம்
பிள்ளைகளை நெஞ்சில் பொத்தியபடி போரிட்டாய்.
பகை சரிந்து நிமிர்ந்தபோது
களைப்புற்ற உன் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
அது ஆனந்தக் கண்ணீரென அறிவோம்.
ஒவ வொருவரையும் கட்டி உச்சிமோர்ந்தாய்
அன்றுதான் கண்டோம் உன் அன்னைவடிவம்
வரலாறாய் வாழும் வழியே!
மீண்டும் ஒளியுற்றுலவும் காலம் உனக்கானது
புூண்டெழுவாய் புதுக்கோலம்.
நாமிருக்கோமெனினும் நீயிருப்பாய்
எம்பிள்ளைகள் போய்வரும்போது
வரலாறுரைக்கும் வாயளாய்
பேசாய் பெருந்தெருவே.
-புதுவை இரத்தினதுரை

