06-21-2003, 09:47 AM
இன்னும்
மழையே தூறவில்லை
நீ ஒழுக்குச்சட்டிக்கு
ஓடித்திரிகிறாய்,
-புதுவைஇரத்தினதுரை
மீண்டும் வெள்ளைப்புூ சூடிக்கொண்டு
வீசுகிறது காற்று,
வானத்திலேறி வன்னிவரை வந்துபோகிறது
அலகில் ஒலிவ இலை தாங்கிய தூதுப்புறா
சாளரங்களைத் திறக்கும் போதெல்லாம்
சந்தனம் புூசிய, சமாதான வாசம் வருகிறது
இரவு முழுதும் கண்ணீh வாழ்வு
கழிந்தது போன்ற கனவு.
நிவாரணவரிசையில் நின்றுகளைத்த கால்களுக்கு
கட்டாய ஓய்வென்ற சட்டமே வருகிறதாம்.
வார் அறுந்த செருப்பாய்க்
கிடக்கும் தெருக்களுக்கு
இனித் தார் புூசப்படுமாம்.
கோயிலெங்கும் மகேஸ்வரபுூசைக் கோலாகலம்
ஆமிக்காரர்களுக்கும் சாமிகும்பிடும்
விடுமுறையாம்
போராளிகளும் இனிப் புூப்பறிக்கப்போகலாம்
நெருஞ்சிப் பற்றைக்கு முள்ளகன்று போனதாம்
சந்தோச மேகங்கள் தலைதடவிப் போகிறது.
ஆண்டவரே! இனியேனும் அமைதியைத்தாரும்.
கூண்டுதிறந்து பறக்கும் குதூகலம் அருள்வீர்
இனியாயினும் எமக்கு இரக்கமாயிருப்பீர்.
கண்டிவீதி ஏறிவரும் கனரக வாகனங்களில்
மாவும், சீனியுமாம்.
அட் கொக்காவிலில் பெற்றோல் செற்றாம்.
பங்குனிமாதம் மின்சாரமும்
சித்திரைமாதம் யாழ்தேவியும் வருகிறதாம்.
காவலரணிலிருக்கும் பிள்ளைகளுக்கு
புனர்வாழ்வு அமைச்சு புறியாணி அனுப்புமாம்
இவைகளுக்காகத்தானே போராடினோம்
இனியென்ன ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு
அரிசி, பருப புவாங்க ஆயத்தமாகுவோம்.
துயிலுமில்லங்களில் இனிச் சோககீதமில்லை,
பாட்டும், கூத்துமாகப் பகலிரவு கழியும்,
போர்க்களப் புரவிகளை அவிழ்த்து விடுவோம்
எங்கேனும் போய்ப் புல்மேயட்டும்.
அட பைத்தியக்காரா களே!
இத்தனை அவசரம்தான் எதற்கு?
அஸ்ரா மாஐரினுக்காகவா ஆரம்பித்த
போராட்டமிது?
ஆவலாதிப் பேய்களாக ஏனிந்தப் பறந்தடிப்பு?
நிதானம் தளராமல் நினைத்துப் பார்
முன்னைய அனுபவங்களில் முகம்கழுவிக் கொள்,
நல்லது நடக்குமென நம்புவோம்,
அதற்காக அவசரப்படல் ஆகாது.
வாசல் வரும் காற றை வரவேற்பதென்பதும்
பாதம் கழுவுவதும் ஒன்றல்ல,
கைகுலுக்குவது நாகரிகம்
கமக்கட்டில்சால்வை வைப்பது அடிமைத்தனம்.
பெரிதாக நம்பிவிடாதே
அம்மணி அரங்குவிட்டு இறங்கவில்லை.
இப்போதும் அவரேதான் ஆட்டநாயகி.
தோற றுப போனாரெனும் கூற்றென்னவோ
உண்மையெனினும்
இன்றும் நாகாஸ்த்திரங்கள் இருப்பது
நாயகி கையிற்தான்,
எய்யார் எமக்கென பதற்கு என்ன உத்தரவாதம்,
ஐயா நல்லவராகவே இருக்கட்டும்
அஸ்கிரிய பீடம் அனுமதிக்க வேண்டுமே.
வன னிக்கு, வந்துபோகும் வைத்தியர்
மனிதாபிமானிதான்
இருந்துமென்ன
கண டி மல்வத்தபீடம்தானே கட்டளையிடுவது
இன்னும் மழையே தூறவில்லை
நீ ஒழுக்குச் சட்டிக்கு ஓடித்திரிகிறாய்,
இன்னும்காற்றே வீசத்தொடங்கவில்லை
நீ பட்டமேற்ற நூல்தேடித் திரிகிறாய்.
எத்தனை தடைவைகள் ஏமாற்றப்பட்டாய்
பட்டும் பட்டுமேன் உனக்குப் புத்திவரவில்லை?
விடுதலை அவாவிய குருவியே!
தீனிபொறுக்குவதற்காகவா உனக்குச்
சிறகுமுளைத்தது?
சூரியனைத் தொட்டுவரப் புறப்பட்ட நீ
அரிசிக்கும் பருப்புக்குமேன் அவசரப்படுகின்றாய்,
அவர்கள் கவனமாகக் காலெடுத்து
வைக்கின்றனர்
நீ வேகமெடுத்து விழுந்தெழும்பப் போகிறாய்.
கானல் நீரில் வாய்நனைக்க நினைக்கிறாய்
கவனம் மீண்டும் கண்ணீரைக் குடிக்கவேண்டிவரும்
விடுதலை பெறுவதென்பது
பேரம்பேசும் வியாபாரமல்ல.. அது எமக்குரிய
இயல்பின் இருப்பு
தானமாகத் தருவதற்கு விடுதலை
சாப்பாட்டுப் பார்சலல்ல, தொடுத்த அம்புக்கேற்ற இலக்கும்
கொடுத்த விலைகளுக்கேற்ற தீர்வுமே
மேசைக்குப் போகும்போது முன்மொழிய வேண்டும்
அலரிமாளிகையை நாங்கள் கேட்கப்போவதில்லை.
பெரகராவில் ஊர்வலம் போகும்
பெரியயானையை இரவலாகவும் நாங்கள் கேட்கப்போவதில்லை.
எமக்கான கூடு எமக்கு
எமக்கான பாசம நமக்கு
இவைதவிர எமக்கு எதுவுமே வேண்டாம்
ஆகாயம் புூச்சொரியும் அழகைப் பார்த்தபடி
தாயாளின் மடியுறங்கும் சந்தோசம் வேண்டும்
மாரிமழையில் நனைந்தபடி எம் ஊரிற்திரியும்
மகிழ்வொன்றே போதும் நமக்கு
குனியவும் ந}மிரவும் யாரும் கட்டளையிடாத
ஒரு வாழ்வுபோதும் நமக்கு.
தருவாரெனில் சந்தோசம்
பாதிவழியில் பழையபடி முருங்கையேறில்
வேதாளம் பாதாளத்துக்குத்தான் போகும்.
சின்ன மாங்கனித் தீவை
பாதி பாதியெனப் பங்கிடுவதே நல்லது
நீதியும் அதுதான்
மேசையில் பேசி தீர்வென்ன வரும்?
சரி; பேச்சுவார்த்தையின் பின்னே என்ன
தருவார்கள்?
திம்புவில் தொடங்கி சுயாட்சிவரை போகுமா?
இது விட்டுக்கொடுக்கும் இறுதிவிடயமல்ல.
பள்ளியே இதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
சம்மதிக்குமா சிங்கள அரியணைகள்?
தமிழரென்றாலே இழிபிறவிகளென்ற
எகத்தாளம் அவர்களுக்கு.
தமிழர் வந்தேறு குடிகளென வகைப்படுத்தி
சின்ன நெஞ்சிலேயே நஞ்சூட்டப்பட்டுள்ளது.
நூலின் நீளமறியாது பட்டத்துக்கு வால்கட்டமுடியாது
அடித்த நோவுக்கு எண்ணை புூசுவெது இருக்கட்டும்
எமக்கு இனிமேல் அடிக்கமாட்டோமென்று
உத்தரவாதம் தரட்டும்
தருவார்களா சங்கமித்தையின் வெள்ளரசு விழுதுகள்
இரத்தத்தில் விழுத்தும் யுத்தத்தை விரட்டுவோம்
யாருக்குத்தான போரின்மீது காதல் வரும்?
சாந்தியும் சமாதானமுமே நந்தவனமானது.
விரும்புகிறோம்
எம்மை யுத்தத்துக்கு அழைத்தது யார்?
எம்மை ரத்தத்தில் கிடத்தியது யார்?
அல்லிவேர்கூட விடாது அறுத்தெடுத்தது யார்?
இன்று வெள்ளைக் கொடிபற்றி விரிவுரை செய்பவர்கள்
கண்டிவீதி கற்பழிக்கப்பட்டபோது
கதைக்கவில்லையே
'சத்nஐய' கிளிநொச்சி புகுந்தபோது
இவர்களை பேச்சிழந்து ஊமையிருந்தனர்.
சரி; பழையனகழித்து புதியன வகுப்போம்
கடந்த காலத்தைக் கனவாய் மறந்து
வருங்காலத்தை வடம்பிடித்திழுக்க வருக
வன்னி வரவேற கக் காத்திருக்கிறது,
ஆத்ம சுத்தியோடு மேசையில் அமருவோம்.
ஏமாற்றுவதற்கானது இந்த நாடகமெனில்
ஏமாறப்போவது நாமல்ல
போரும், பேச்சும் எமக்கு விடுதலைக்கானதே
பேசலாம் வருக.
மழையே தூறவில்லை
நீ ஒழுக்குச்சட்டிக்கு
ஓடித்திரிகிறாய்,
-புதுவைஇரத்தினதுரை
மீண்டும் வெள்ளைப்புூ சூடிக்கொண்டு
வீசுகிறது காற்று,
வானத்திலேறி வன்னிவரை வந்துபோகிறது
அலகில் ஒலிவ இலை தாங்கிய தூதுப்புறா
சாளரங்களைத் திறக்கும் போதெல்லாம்
சந்தனம் புூசிய, சமாதான வாசம் வருகிறது
இரவு முழுதும் கண்ணீh வாழ்வு
கழிந்தது போன்ற கனவு.
நிவாரணவரிசையில் நின்றுகளைத்த கால்களுக்கு
கட்டாய ஓய்வென்ற சட்டமே வருகிறதாம்.
வார் அறுந்த செருப்பாய்க்
கிடக்கும் தெருக்களுக்கு
இனித் தார் புூசப்படுமாம்.
கோயிலெங்கும் மகேஸ்வரபுூசைக் கோலாகலம்
ஆமிக்காரர்களுக்கும் சாமிகும்பிடும்
விடுமுறையாம்
போராளிகளும் இனிப் புூப்பறிக்கப்போகலாம்
நெருஞ்சிப் பற்றைக்கு முள்ளகன்று போனதாம்
சந்தோச மேகங்கள் தலைதடவிப் போகிறது.
ஆண்டவரே! இனியேனும் அமைதியைத்தாரும்.
கூண்டுதிறந்து பறக்கும் குதூகலம் அருள்வீர்
இனியாயினும் எமக்கு இரக்கமாயிருப்பீர்.
கண்டிவீதி ஏறிவரும் கனரக வாகனங்களில்
மாவும், சீனியுமாம்.
அட் கொக்காவிலில் பெற்றோல் செற்றாம்.
பங்குனிமாதம் மின்சாரமும்
சித்திரைமாதம் யாழ்தேவியும் வருகிறதாம்.
காவலரணிலிருக்கும் பிள்ளைகளுக்கு
புனர்வாழ்வு அமைச்சு புறியாணி அனுப்புமாம்
இவைகளுக்காகத்தானே போராடினோம்
இனியென்ன ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு
அரிசி, பருப புவாங்க ஆயத்தமாகுவோம்.
துயிலுமில்லங்களில் இனிச் சோககீதமில்லை,
பாட்டும், கூத்துமாகப் பகலிரவு கழியும்,
போர்க்களப் புரவிகளை அவிழ்த்து விடுவோம்
எங்கேனும் போய்ப் புல்மேயட்டும்.
அட பைத்தியக்காரா களே!
இத்தனை அவசரம்தான் எதற்கு?
அஸ்ரா மாஐரினுக்காகவா ஆரம்பித்த
போராட்டமிது?
ஆவலாதிப் பேய்களாக ஏனிந்தப் பறந்தடிப்பு?
நிதானம் தளராமல் நினைத்துப் பார்
முன்னைய அனுபவங்களில் முகம்கழுவிக் கொள்,
நல்லது நடக்குமென நம்புவோம்,
அதற்காக அவசரப்படல் ஆகாது.
வாசல் வரும் காற றை வரவேற்பதென்பதும்
பாதம் கழுவுவதும் ஒன்றல்ல,
கைகுலுக்குவது நாகரிகம்
கமக்கட்டில்சால்வை வைப்பது அடிமைத்தனம்.
பெரிதாக நம்பிவிடாதே
அம்மணி அரங்குவிட்டு இறங்கவில்லை.
இப்போதும் அவரேதான் ஆட்டநாயகி.
தோற றுப போனாரெனும் கூற்றென்னவோ
உண்மையெனினும்
இன்றும் நாகாஸ்த்திரங்கள் இருப்பது
நாயகி கையிற்தான்,
எய்யார் எமக்கென பதற்கு என்ன உத்தரவாதம்,
ஐயா நல்லவராகவே இருக்கட்டும்
அஸ்கிரிய பீடம் அனுமதிக்க வேண்டுமே.
வன னிக்கு, வந்துபோகும் வைத்தியர்
மனிதாபிமானிதான்
இருந்துமென்ன
கண டி மல்வத்தபீடம்தானே கட்டளையிடுவது
இன்னும் மழையே தூறவில்லை
நீ ஒழுக்குச் சட்டிக்கு ஓடித்திரிகிறாய்,
இன்னும்காற்றே வீசத்தொடங்கவில்லை
நீ பட்டமேற்ற நூல்தேடித் திரிகிறாய்.
எத்தனை தடைவைகள் ஏமாற்றப்பட்டாய்
பட்டும் பட்டுமேன் உனக்குப் புத்திவரவில்லை?
விடுதலை அவாவிய குருவியே!
தீனிபொறுக்குவதற்காகவா உனக்குச்
சிறகுமுளைத்தது?
சூரியனைத் தொட்டுவரப் புறப்பட்ட நீ
அரிசிக்கும் பருப்புக்குமேன் அவசரப்படுகின்றாய்,
அவர்கள் கவனமாகக் காலெடுத்து
வைக்கின்றனர்
நீ வேகமெடுத்து விழுந்தெழும்பப் போகிறாய்.
கானல் நீரில் வாய்நனைக்க நினைக்கிறாய்
கவனம் மீண்டும் கண்ணீரைக் குடிக்கவேண்டிவரும்
விடுதலை பெறுவதென்பது
பேரம்பேசும் வியாபாரமல்ல.. அது எமக்குரிய
இயல்பின் இருப்பு
தானமாகத் தருவதற்கு விடுதலை
சாப்பாட்டுப் பார்சலல்ல, தொடுத்த அம்புக்கேற்ற இலக்கும்
கொடுத்த விலைகளுக்கேற்ற தீர்வுமே
மேசைக்குப் போகும்போது முன்மொழிய வேண்டும்
அலரிமாளிகையை நாங்கள் கேட்கப்போவதில்லை.
பெரகராவில் ஊர்வலம் போகும்
பெரியயானையை இரவலாகவும் நாங்கள் கேட்கப்போவதில்லை.
எமக்கான கூடு எமக்கு
எமக்கான பாசம நமக்கு
இவைதவிர எமக்கு எதுவுமே வேண்டாம்
ஆகாயம் புூச்சொரியும் அழகைப் பார்த்தபடி
தாயாளின் மடியுறங்கும் சந்தோசம் வேண்டும்
மாரிமழையில் நனைந்தபடி எம் ஊரிற்திரியும்
மகிழ்வொன்றே போதும் நமக்கு
குனியவும் ந}மிரவும் யாரும் கட்டளையிடாத
ஒரு வாழ்வுபோதும் நமக்கு.
தருவாரெனில் சந்தோசம்
பாதிவழியில் பழையபடி முருங்கையேறில்
வேதாளம் பாதாளத்துக்குத்தான் போகும்.
சின்ன மாங்கனித் தீவை
பாதி பாதியெனப் பங்கிடுவதே நல்லது
நீதியும் அதுதான்
மேசையில் பேசி தீர்வென்ன வரும்?
சரி; பேச்சுவார்த்தையின் பின்னே என்ன
தருவார்கள்?
திம்புவில் தொடங்கி சுயாட்சிவரை போகுமா?
இது விட்டுக்கொடுக்கும் இறுதிவிடயமல்ல.
பள்ளியே இதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
சம்மதிக்குமா சிங்கள அரியணைகள்?
தமிழரென்றாலே இழிபிறவிகளென்ற
எகத்தாளம் அவர்களுக்கு.
தமிழர் வந்தேறு குடிகளென வகைப்படுத்தி
சின்ன நெஞ்சிலேயே நஞ்சூட்டப்பட்டுள்ளது.
நூலின் நீளமறியாது பட்டத்துக்கு வால்கட்டமுடியாது
அடித்த நோவுக்கு எண்ணை புூசுவெது இருக்கட்டும்
எமக்கு இனிமேல் அடிக்கமாட்டோமென்று
உத்தரவாதம் தரட்டும்
தருவார்களா சங்கமித்தையின் வெள்ளரசு விழுதுகள்
இரத்தத்தில் விழுத்தும் யுத்தத்தை விரட்டுவோம்
யாருக்குத்தான போரின்மீது காதல் வரும்?
சாந்தியும் சமாதானமுமே நந்தவனமானது.
விரும்புகிறோம்
எம்மை யுத்தத்துக்கு அழைத்தது யார்?
எம்மை ரத்தத்தில் கிடத்தியது யார்?
அல்லிவேர்கூட விடாது அறுத்தெடுத்தது யார்?
இன்று வெள்ளைக் கொடிபற்றி விரிவுரை செய்பவர்கள்
கண்டிவீதி கற்பழிக்கப்பட்டபோது
கதைக்கவில்லையே
'சத்nஐய' கிளிநொச்சி புகுந்தபோது
இவர்களை பேச்சிழந்து ஊமையிருந்தனர்.
சரி; பழையனகழித்து புதியன வகுப்போம்
கடந்த காலத்தைக் கனவாய் மறந்து
வருங்காலத்தை வடம்பிடித்திழுக்க வருக
வன்னி வரவேற கக் காத்திருக்கிறது,
ஆத்ம சுத்தியோடு மேசையில் அமருவோம்.
ஏமாற்றுவதற்கானது இந்த நாடகமெனில்
ஏமாறப்போவது நாமல்ல
போரும், பேச்சும் எமக்கு விடுதலைக்கானதே
பேசலாம் வருக.

