Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கமல்.. எதிர்பாராத பரவசம்!
#1
கமல்.. எதிர்பாராத பரவசம்!
<img src='http://www.vikatan.com/av/2003/oct/19102003/s16.jpg' border='0' alt='user posted image'>

ஏக பரபரப்பு... எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கிடையே விறு விறுவெனத் தயாராகிக்
கொண்டிருக்கிறது கமலின் புதிய படம்! தற்செயலாகக் காணக்கிடைத்த ஆல்பமே பிரமிப்பூட்டுகிறது! அந்த 'சினி'யின் துளிகள் -

'தூள்' படத்துக்குப் பின் வந்த எல்லா வாய்ப்புகளையும் மறுத்து விட்டுக் காத்திருந்த 'கூத்துப் பட்டறை' பசுபதி. படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

அபிராமிக்கு 'லைஃப் டைம் காரெக்டர்' என்கிறார்கள். ஜாலியாக டூயட் ஆடிக்கொண்டிருந்தவர் இதில் உணர்ச்சிப் புயலாக கிராமத்துப் பெண்ணாகவே உருமாறி விட்டாராம்.

வத்தலக்குண்டில் நாலே நாட்கள்தான் அவுட்டோர் ஷ$ட்டிங் நடந்தது. அதில் ஒரு அழகான பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். கமலும் அபிராமியும் தாமரைக் குளத்தில் காதல் பண்ணும் காட்சி அதில் ஹைலைட்!

கால்ஷீட் பிரச்னை காரணமாக விலகிய நாசர் இப்போது மீண்டும் நடிக்கிறார்.. வே`றாரு காரெக்டரில்! கவுதமிக்கும் மிக முக்கியமான ஒரு வேடம் உண்டு.

தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு ஜல்லிக் கட்டு வந்திருக்காது என்கிறார்கள். வாடிவாசல் கட்டி, தெருவுக்குள்ளேயே காளைகளை இறக்கி அதகளம் பண்ணுகிற ஒரிஜினல் ஜல்லிக்கட்டை சென்னை 'கேம்பகோலா' வளாகத்திலேயே 'செட்' போட்டு அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர். நாற்பது காளைகள், இருநூறு மாடுபிடி வீரர்கள் என்று மதுரைப் பக்கமிருந்து கொண்டு வந்து இறக்கி விளையாட விட்டிருக்கிறார்கள். மாடு முட்டி, கீழே விழுந்து கமல் உடலெங்கும் பட்ட ரத்தக் காயங்களின் வடு இன்னும் மறையவில்லை.

இளையராஜாவின் இசை பற்றி பிரமாதமாகப் பேசுகிறார்கள். கதைக்களம் அவரது சொந்த மண் என்பதால், 'பிளந்து கட்டியிருக்கிறார்' ராஜா. சொந்த குரலில் கமல் பாட்டு உண்டு. தவிர, தேனி குஞ்சரம்மாள், நடராஜன் என்று அப்படியே கிராமத்திய இசை. காஸெட் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடக்கப் போகிறது. விழாவில் வெளியிட படத்துக்கு மிக வித்தியாசமான ஒரு புதிய டைட்டிலுடன் காத்திருக்கிறார் கமல்.

மதுரை கூத்துக் கலைஞர்கள் நிறையப் பேர் படத்தில் நடிக்கிறார்கள். கமலுக்கு இயல்பாகவே கூத்துக் கலைஞர்கள்மீது ஈடுபாடும் அவர்களின் வசதியில்லாத வாழ்க்கையைப் பற்றிய அனுதாபமும் உண்டு. அவரது ஆதரவோடு உற்சாக வேகம் பிடிக்கிறார்கள் கலைஞர்கள்!

'படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது வந்துவிடுகிறேன்' என்று அடம்பிடிக்கிறாராம் வடிவேலு. கமல் பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.

ஒரு கிராமத்து படத்தை முழுக்கவே 'செட்' போட்டுப் படமாகியிருப்பது இதுவே முதல் முறை. இதற்கென்றே இரண்டு கிராமங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.


ஜெயில் காட்சிகளுக்காக சென்னை சென்ட்ரல் ஜெயில் நிர்வாகத்தை அணுகியிருக்கிறார்கள். தடா, பொடா, தீவிரவாதி கைதிகள் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் சற்று தாமதமாகிறது. கடைசிவரை கிடைக்காவிட்டால் அதுவும் 'செட்'தான்!

படத்தைப் பற்றி பரபரப்பான சர்ச்சைகள் கிளம்பியதே... எதிர்பார்த்த மாதிரி எந்த வில்லங்கமும் படத்தில் இல்லையாம். ஆனால், எதிர்பார்க்காத பரவசங்கள் நிறைய காத்திருக்கின்றனவாம்!

<img src='http://www.vikatan.com/av/2003/oct/19102003/s108.gif' border='0' alt='user posted image'>

''உங்க படம் பயங்கர எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கு..!''

''அப்படியா..!''

''ஆமாம்... இப்பவே நிறைய பேர்
'வீச்சரிவாளோடு' சுத்திக்கிட்டு இருக்காங்க..!''

- இடைப்பாடி ஜெ. மாணிக்கவாசகம்

நன்றி:விகடன்

[scroll:beaf162934][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply


Messages In This Thread
கமல்.. எதிர்பாராத பரவச - by AJeevan - 10-17-2003, 11:43 AM
[No subject] - by kuruvikal - 12-08-2003, 04:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)