06-21-2003, 09:47 AM
மு.சங்கர்
புதரும் சருகும் இதமான பஞ்சு மெத்தை
கொடும்பனியே சுகமான போர்வை
தாலாட்டும் கீதங்களாய் நுளம்புகளின் கச்சேரி
வெறும்காலில் விசுக்கென விசமம் செய்யும் முட்களின் பாதணிகள்.
அடிக்கட்டைகளின் ஆவேசத்தால் அடிவாங்கி பெயர்ந்து
போகும் கால் நகங்கள்
குடம்பிகளின் கும்மாளத்துடன் குளத்து நீர் குடிப்பதற்கு
உண்டிக்கு உணவாக உலர் உணவுப்பொதிகள்
காய்ந்து போன மண்டையில் மழைபட்டால் சளி
பிடித்து சதிராட்டம்.
வெய்யிலின் கோரத்தால் வேர்த்துப்போயே தோள்காயும்
உடலைச் சுற்றியே உருமறைப்பு உடைகள்
பாம்புகளோடு பம்பலடித்து அட்டைகளோடு அரட்டையிட்டு
காட்டு விலங்குகளோடு கதை பேசி
உறங்காத கண்மணிகளாய் உலாவரும் நிழல்மனிதர்களின் ஊசிமுனைக்
கண்களில்
இருளிலும் தெரிவது எதிரியின் பாசறை அதனைச் சுற்றியோ முட்கம்பி
சுருள் வேலிகள்.
கையினால் உழுது பார்த்து மூச்சடக்கி முன்னேறுவார்
கூலிக்கு வந்தொன்று தேடொளியை கொண்டு
விழி பிதுங்க
பார்த்து நிற்க, புல்லசைவும் புலிவருகையினை சொல்லி நிற்க
கையிருக்கும் சுடுகருவி
கக்கி நிற்கும் குண்டுகளை.
இவற்றிற்கெல்லாம் கண்ணில் மண்தூவி கச்சிதமாய் தகவல்தேடி
தளம் வருவார்
கண்டவற்றை கச்சிதமாய் சொல்வார் திட்டமது திரண்டுவிட
பாதை காட்டியாய் முன்னே செல்வார்
சந்ததி வாழ்விற்காய் வேதனைகளை விலையாக்கி வெற்றியின்
உச்சத்தில் வேவுப்புலிவீரர்களாய் வீழ்ந்த எம் வெள்ளியின்
நாயகர்களை என்றும் நாம் மறவோம்.
புதரும் சருகும் இதமான பஞ்சு மெத்தை
கொடும்பனியே சுகமான போர்வை
தாலாட்டும் கீதங்களாய் நுளம்புகளின் கச்சேரி
வெறும்காலில் விசுக்கென விசமம் செய்யும் முட்களின் பாதணிகள்.
அடிக்கட்டைகளின் ஆவேசத்தால் அடிவாங்கி பெயர்ந்து
போகும் கால் நகங்கள்
குடம்பிகளின் கும்மாளத்துடன் குளத்து நீர் குடிப்பதற்கு
உண்டிக்கு உணவாக உலர் உணவுப்பொதிகள்
காய்ந்து போன மண்டையில் மழைபட்டால் சளி
பிடித்து சதிராட்டம்.
வெய்யிலின் கோரத்தால் வேர்த்துப்போயே தோள்காயும்
உடலைச் சுற்றியே உருமறைப்பு உடைகள்
பாம்புகளோடு பம்பலடித்து அட்டைகளோடு அரட்டையிட்டு
காட்டு விலங்குகளோடு கதை பேசி
உறங்காத கண்மணிகளாய் உலாவரும் நிழல்மனிதர்களின் ஊசிமுனைக்
கண்களில்
இருளிலும் தெரிவது எதிரியின் பாசறை அதனைச் சுற்றியோ முட்கம்பி
சுருள் வேலிகள்.
கையினால் உழுது பார்த்து மூச்சடக்கி முன்னேறுவார்
கூலிக்கு வந்தொன்று தேடொளியை கொண்டு
விழி பிதுங்க
பார்த்து நிற்க, புல்லசைவும் புலிவருகையினை சொல்லி நிற்க
கையிருக்கும் சுடுகருவி
கக்கி நிற்கும் குண்டுகளை.
இவற்றிற்கெல்லாம் கண்ணில் மண்தூவி கச்சிதமாய் தகவல்தேடி
தளம் வருவார்
கண்டவற்றை கச்சிதமாய் சொல்வார் திட்டமது திரண்டுவிட
பாதை காட்டியாய் முன்னே செல்வார்
சந்ததி வாழ்விற்காய் வேதனைகளை விலையாக்கி வெற்றியின்
உச்சத்தில் வேவுப்புலிவீரர்களாய் வீழ்ந்த எம் வெள்ளியின்
நாயகர்களை என்றும் நாம் மறவோம்.

