06-21-2003, 09:45 AM
ஆ.ந. பொற்கோ
அவர்கள் வருவார்கள்
எங்களின் விடுதலை சுமந்து
அவர்கள் வருவார்கள்
புூ விதழ் மெல்ல விரிந்து
புன்னகை உதட்டில் புூக்க
கண்களில் ஒளிதெறித்து
கதைகள் பல பேச
உள்ளத்தின் வெள்ளை
நிலாமுகத்தில் ஓவியம் தீட்ட
அவர்கள் வருவார்கள்.
பொய்முகங்கள் திரை கிழித்து
பொடிப்பொடியாகும்.
காட்டாக்காலியாகி
எங்கும் நுழைந்த மாடுகள்
பட்டியோடு தூரதேசம் போகும்.
கட்டாக்காலிகளோடு வந்தவர்கள்
அதற்கு முன்னே
பெட்டி படுக்கையோடு புறப்படுவர்.
அம்மணமாய் சந்திகளில் தொங்கும்
அம்மணிகள் படம் இருந்த சுவடழிந்து போகும்.
கசிப்பும் சிட்டுக்குருவிகளைப் புசிப்பதும்
நசிந்து நாராகிக் க}ழிந்து கிடக்கும்.
அர்ப்பணமானவர்கள் கல்லறைகள் துளிர்க்கும்.
வெள்ளைச் சீருடைகள்
உள்ளத்தில் உவகை பொங்க வரும்.
கள்ளமில்லாப் பிஞ்சுகள்
மெல்லப் பாட்டிசைத்துப் போகும்.
இரவுகளும் பகலாகி
இனி எங்கள் காலமென
இரை மீட்கும்.
அவர்கள் வருவார்கள்
எங்களின் விடுதலை சுமந்து
அவர்கள் வருவார்கள்
புூ விதழ் மெல்ல விரிந்து
புன்னகை உதட்டில் புூக்க
கண்களில் ஒளிதெறித்து
கதைகள் பல பேச
உள்ளத்தின் வெள்ளை
நிலாமுகத்தில் ஓவியம் தீட்ட
அவர்கள் வருவார்கள்.
பொய்முகங்கள் திரை கிழித்து
பொடிப்பொடியாகும்.
காட்டாக்காலியாகி
எங்கும் நுழைந்த மாடுகள்
பட்டியோடு தூரதேசம் போகும்.
கட்டாக்காலிகளோடு வந்தவர்கள்
அதற்கு முன்னே
பெட்டி படுக்கையோடு புறப்படுவர்.
அம்மணமாய் சந்திகளில் தொங்கும்
அம்மணிகள் படம் இருந்த சுவடழிந்து போகும்.
கசிப்பும் சிட்டுக்குருவிகளைப் புசிப்பதும்
நசிந்து நாராகிக் க}ழிந்து கிடக்கும்.
அர்ப்பணமானவர்கள் கல்லறைகள் துளிர்க்கும்.
வெள்ளைச் சீருடைகள்
உள்ளத்தில் உவகை பொங்க வரும்.
கள்ளமில்லாப் பிஞ்சுகள்
மெல்லப் பாட்டிசைத்துப் போகும்.
இரவுகளும் பகலாகி
இனி எங்கள் காலமென
இரை மீட்கும்.

