Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரசித்த நகைச்சுவை
#1
<img src='http://www.cheap-auto-car-insurance-quotes.com/Clipcartoons6.gif' border='0' alt='user posted image'><span style='font-size:30pt;line-height:100%'>ஆறுதல்</span>

சாலையின் குறுக்கே போன பெண்மணியை கார் ஒன்று இடித்துக் கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டது

"பெண்மணிக்குக் காலில் காயம். ரத்தம் வழிந்தது.
யாராவது என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்களேன்" - அவள் புலம்பினாள்

பலர் வேடிக்கைமட்டும் பார்க்க, ஒருவர் மட்டும் துணிச்சலோடு ஆட்டோவை அழைத்து வந்து அவளை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

வழியில் அவர் அவளிடம் பேச்சுக்கொடுத்தார்.

"தப்பாக நினைக்காதீங்க... உங்க பேர், விலாசம் தந்தா உதவியாயிருக்கும்."

சொன்னாள்

"எந்தக் கார் உங்க மேலை இடிச்சதுன்னு சொல்லமுடியுமா?"

"ஆம்பாஸ்டர் கார்!"

"கார் நிறம் தெரியுமா?"

"ஆபத்து அவசரத்திலை யார் அதையெல்லாம் பார்த்தது"

"சரி போகட்டும்..... அது சொந்தக் காரா? இல்லை டக்ஸியா?"

"இதையெல்லாம் அங்கே இருந்தவங்க யாராச்சும் பார்த்து வைச்சிருந்தால்தான் உண்டு. அவங்களைத்தான் கேக்கணும்"

"வழக்குன்னு வரப்போ உங்க சாட்சியம் முக்கியமாச்சே. நீங்க எதையும் பார்க்கலியா? அந்தக் காரிலை எத்தனை பேர் இருந்தாங்க?"

"உம்... அதைப் பார்த்தேன்.! ரெண்டே பேர்! ஓரு ஆம்பளை! அவர் பக்கத்திலை ஒருத்தி"

"அப்படியா?"

"அந்தம்மா அரக்கு கலர்ல பட்டுப் புடவை கட்டியிருந்தாங்க! தலை நிறைய கனகாம்பரம் பூ! கழுத்தில ரெட்டைவடச் செயின் அப்புறம் சின்னதா ஒரு நெக்லஸ்! வைரத்தோடு.... தலைமுடி டை அடிச்சிருந்தாங்கண்ணு நினைப்பு..."

"ரொம்பப் பேசாதீங்க... மயக்கமா வந்திடப் போகுது." என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டார் துணைக்கு வந்தவர்-

-பர்வதவர்த்தினி
Reply
#2
ஒரு வெள்ளை தலைமுடி பெண்ணுக்கு ரீவி வாங்க ஆசை வந்திச்சாம்.

ஒரு எலக்ரோனிக் கடைக்கு போனாவாம்.

ஒரு சேல்ஸ்மன் இருந்தானாம்.

"ஹே மிஸ்டர்.. அந்த ரீவி என்ன விலை?"

"ஓ.. லேடி.. வெள்ளை தலைமுடி பெண்களுக்கு ரீவி விற்கிறதில்லை.."

அவள் ஏமாற்றத்துடன் திரும்பினாளா? ஒரு மாதம் போச்சு..

செகண்ட் றை.. நல்லா மேக்கப் போட்டு.. லிப்புக்கு றெட் எல்லாம் அப்பி.. அதே கடைக்கு போனாளாம்.

"ஹே மிஸ்டர்.. அந்த ரீவி என்ன விலை?"

"ஓ.. லேடி.. வெள்ளை தலைமுடி பெண்களுக்கு ரீவி விக்கிறதில்லை.."

அதே கேள்வி... அதே பதில்.

அதே ஏமாற்றத்துடன் திரும்பினாள். இன்னும் ஒரு மாதம் போச்சுதா?

வெள்ளை தலைக்கு 'டை' அடிச்சு கறுப்பாக்கியாச்சா? உடுப்பு எல்லாம் 'மொடேர்னா' போட்டாச்சா? சிவப்பு கறுப்ப எல்லாம் முகத்திலை பூசியாச்சா? சண் கிளாஸ் போட்டாச்சா?

இப்ப ட்றை அண்டஇ ட்றை...

மீண்டும் அதே கடை.

அதே கேள்வி.. அதே பதில்..

அவளுக்கு ஆச்சரியம். எப்படி வெள்ளைதலைமுடி என்று கண்டுபிடித்தான்?!

அவனிடமே கேட்டாள்.

"ஓ.. லேடி.. நீ கேட்டது ரீவி இல்லை.. 'மைக்ரோவேவ்' (microwave)"

(எங்கோ கேட்ட சுவை இது..)

முல்லை பாட்டீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீ!!! உங்க தலைமுடி எப்பிடி?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#3
[quote]sOliyAn[/color]

முல்லை பாட்டீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீடீ!!! உங்க தலைமுடி எப்பிடி?!
பொன்னிறம்
Reply
#4
வெளியூருக்கு சென்று TV வாங்க ஆசைப்பட்ட ஒருவருக்கு கிராமத்து நண்பர் ஒருவர் இப்படியாக ஒரு உபதேசத்தை செய்தனுப்பினாராம்..

அதாவது "பட்டணத்தில் அவர்கள் சொல்லும் விலைக்கு பொருளை வாங்கி விடாதே அரை விலைக்கு கேள்" என்று..

ஆர்வத்துடன் பட்டணத்தை அடைந்த நண்பர் பெரிய electronic கடையொன்றுக்குள் நுழைந்து தனக்குப் பிடித்த ஒரு TVயின் விலையேக் கேட்டாராம்..

10000 என்று பதில் வரவே
நண்பர் சொன்ன அறிவுரையை மனதில் வைத்து 5000க்கு தரமாட்டீர்களா என்று கேட்டாராம்..

இதுவரை இப்படியொரு விலைக்குறைப்பைக் கேட்டிராத விற்பனையாளர் முடியாது என்று சொன்னாராம்..

அப்படியென்றால் உங்களது கடைசி விலையென்ன என்று இவர் கேட்க
10000ந்தான் என்று பதில் வந்ததாம்.

நீங்கள் சும்மா சொல்லுவீர்கள் 5000க்கு தாங்களேன் என்று இவர் கேட்க ..

இவரோடு விளையாட நினைத்த விற்பனையாளர் சரி என்று பதில் சொன்னாராம்..

அதற்கு இவர் அப்படியென்றால் 2500க்கு தரமுடியுமா என்றாராம்..

அதற்கும் விற்பனையாளர் சரி என்று சொல்ல 2500ன் அரைவிலையான 1250க்கு கேட்டாராம்..

அதற்கும் சரி என்று சொன்ன விற்பனையாளர் இன்னும் 250 குறைத்து 1000க்கு தாறன் என்றாராம்..

உடனே வாங்கச்சென்றவர் அப்படியானால் 500 ரூபாய் என்றால் எடுக்கிறேன் என்றாராம்...

சற்றே சினங்கொண்ட விற்பனையாளர்...ஏன் சும்மா தாறனே என்றாராம்...

அதற்கு வாங்கச் சென்றவர்..அப்படியென்றால் இரண்டு தாங்களேன் என்றாராம்!


*சிறிய வயதில் கேள்விப்பட்டது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#5
ம்.. வீரா தனது அனுபவத்தை எழுதியிருக்கார்.. மற்றவை எப்படி? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
.
Reply
#6
நகைச்சுவைக்குள் நகைச்சுவை
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#7
பாடசாலைக்கு சென்று வந்த மாணவன் தகப்பனை பார்த்து
சிரித்துகொண்டே இருந்தான் தகப்பன் கேட்டார் ஏன் என்னைப்பார்த்து சிரிக்கிறாய் என்று
அதற்கு மகன் சொன்னான் நான்
இந்தகொப்பியில் 100 தரம் நான் ஒரு கழுதை என்று எழுதச்சொல்லி
ரீச்சர் சொல்லிவிட்டார் தகப்பன் கேட்டார் அதற்கு ஏன் என்னைப்பார்த்து சிரிக்கிறாய் என்று
அதற்கு மகன் சொன்னான்

நான் ஒரு கழுதை என்று 100 தரம் எழுதிவிட்டு உங்கள் கையொப்பத்தை வைக்கும்படி ரீச்சர் சொல்லிவட்டார் அதனால் தான் சிரிக்கிறேன் என்று


.....................................................

ஒரு விருந்துபசாரத்திற்கு வரும்படி
ஒரு தமிழனையும் ஒரு நெதர்லாந்து
காரனையும் ஒரு பிரன்சுகாரனையும் அழைத்திருந்தார்கள்

சென்ற நெதர்லாந்து காரன் புூக்களை வாங்கிச்சென்றான் பிரன்சுகாரன் விலையுயர்ந்த வைனை எடுத்துசென்றான் அங்கு
கொடுப்பதற்கு தமிழனோ வானொன்றை வாடகைக்கு அமர்த்தி தனது குடும்பம் முழுவதையும் அழைத்துசென்றான்
.....................................................

மகன் தாயைப்பார்த்து கேட்டான்
அப்பாவின் தலை ஏன் வழுக்கையாக உள்ளது என்று
தாய் சொன்னா மகனைப்பார்த்து
கெட்டிக்கார ஆட்களுக்கு அப்படித்தான் இருக்கும்மென்று

அப்ப தாயைப்பார்த்து கேட்டான்
உங்களுக்கு ஏன் இவ்வளவு தலைமயிர் இருக்குதென்று

?????????????
Reply
#8
ஓரு நோயாளி வைத்தியரிடம் வந்தார் வைத்தியர் கேட்டார் உம்மை கனகாலமாக காணவில்லையென்று அதற்கு அந்த நோயாளி சொன்னார் நான்
கனகாலமாக நோய்பட்டிருந்தேன்
அதுதான் கனநாளாக என்னை காணமுடியவில்லையென்று
Reply
#9
கடி

மழைபெய்யும்போது ஏன் யன்னலால் எட்டிப்பார்க்கிறோம்
சுவரால் பார்க்கமுடியாதபடியால் யன்னலால் எட்டிப்பார்க்கிறோம்
..............................................

விமானத்தில் ஒரு அரசியல் வாதி
பயணம் செய்து கொண்டிருந்தார்

பறக்கும் பொழுது பக்கத்தில் இருந்தவரைப்பார்த்து சொன்னார் நான் 100 ரூபாவை கீழே வீசினால் இந்தக்கிராமம் சந்தோசப்படும் என்று அப்பொழுது
பக்கத்தில் இருந்தவர் சொன்னார்
உம்மை தூக்கி கீழே போட்டால்
இந்த நாடே சந்தோசப்படும் என்று
Reply
#10
கல்லடிவேலனின் வீட்டுச்சுவரில்
சிலர் இரவோடு இரவாக கல்லடிவேலன் ஒழிக என்று எழுதிவிட்டார்கள் அடுத்தநாள் காலை இதனைப்பார்த்த கல்லடிவேலன் இவர்களைக்கண்டால் பொல்லடி என்று எழுதிவிட்டார்
Reply
#11
சந்தையில் ஒருவன் நீற்றுப்பூசனிக்காயை குதிரை முட்டையென்று சொல்லிவித்துக்கொண்டிருந்தார் இதனை உண்மையென்று நம்பிய ஒரு தமிழ் இளைஞர் அதனைவாங்கி தலையில் வைத்து
நடந்து வந்துகொண்டிருந்தார் ஒரு குறுக்கு வழியில் வரும்போது அப்பூசனிக்கை கீழே விழுந்து உடைந்துவிட்டது இந்த சத்தத்தில்
பக்கத்தில் பற்றையில் இருந்த முயல் பாய்ந்து ஓடியது இதனைக்கண்ட தமிழன் சொன்னான் நான் தப்பிவிட்டேன்
சின்ன குதிரை இப்படி ஓடும்பொழுது பெரிசா வளர்ந்தால் எப்படி ஓடும் என்று???
Reply
#12
ஓ.... எத்தனை நகைச்சுவைத் துணுக்குகள்....
அத்தனையும் அருமை
Reply
#13
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#14
அமெரிக்க அதிபர் புஸ் ஈராக்கில் உள்ள ரகசிய இடத்தில் உள்ள சிறையில் இருக்கும் சதாமைச் சந்திக்கச் செல்கிறார்.


புஸ்: ஹலோ சதாம் நான் புஸ் வந்திருக்கிறேன்..

சதாம்: இன்சா அல்லா. கான் யு கம் ஹாவ் அன் அவர் லேற்றர். (ஊயn லழர உழஅந hயடக யn hழரச டயவநச?) நான் இப்போது தொழ வேண்டும்..

(அரைமணி நேரத்திற்கு பின்னர் சதாமை சந்திக்கிறார்)

புஸ்: அரை மணிநேரம் தாமதிக்க வைத்துவிட்டாய்?

சதாம்: அதற்குக் காரணம் இருக்கிறது பின்னால் புரியும். ஆனால் அந்த அரை மணி நேரமும் ரைம் பொம் ஒன்றுக்கு மேலே நிற்பது போல் நடுங்கிக்கொண்டு நின்றாயே. இப்போது ஈராக்கில் உனது படை, உனது அதிகாரம். நான் வேறு கைவிலங்கோடு சிறையில்.. இருந்தாலும் நீ ஈராக்கில் நடுங்கிக் கொண்டு நிற்கிறாய்.. வெட்கமாயில்லை? எங்கே பத்திரிகை தொலைக்காட்சிக்காரரைக் காணேலை. ஒரு கமராக்காரர் மட்டும் நிற்கிறார்.

புஸ்: நான் வந்தது யாருக்கும் தெரியாது. திரும்பி அமெரிக்காவிற்கு போய்த்தான் உன்னைச் சந்தித்ததை பெருமையாய் தொலைக்காட்சிக்குக் காட்டவேண்டும்.

சதாம்: வரும்போது விமானத்தின் விளக்குகளை அனைத்துவிட்டு வந்திருப்பாயே?

புஸ்: உனக்கெப்படித் தெரியும்.

சதாம்: போன மாதம் நீ ஈராக்கிற்கு தாங்ஸ்கிவிங் டேக்கு வந்தபோது அப்படித் தானே வந்தாய். பதுங்கிப்பதுங்கி யாருக்கும் தெரியாமல்.. உண்மையில் நீ அன்று எனக்குத் தான் தாங்ஸ் சொல்லியிருக்கவேணும், உன்னை உயிரோடு விட்டதற்கு..

புஸ்: அந்த விஜயம் எனக்கு நல்ல பப்பிளிசிற்றி தெரியுமோ?

சதாம்: பதுங்கி வந்ததிலை பப்ளிசிற்றி வேறு.. அதில் தவறில்லை. நாட்டைக் கொள்ளையடிக்க வந்த திருடன் தானே நீ. பதுங்கிவராமல் எப்படி வருவாய்? இப்ப கூட அப்படித்தான் வந்திருப்பாய்..

சதாம்: விமானத்தின் விளக்குகளை அணைத்து விட்டுத் தான் வந்தோம். சத்தம் கேட்கும் என்று எஞ்சினையும் நிறுத்தும்படி சொன்னேன். ஆனால் எஞ்சின் நின்றால் விமானம் விழுந்துவிடும் என்று பைலட் சொன்னதால் அதனை நிறுத்தவில்லை.

சதாம்: அதுசரி ஏன் வந்தாய் விரைவாய் சொல். நான் குட்டித்து}க்கம் போடவேணும்.

புஸ்: உன்னால் எப்படி நிம்மதியாக து}ங்க முடிகின்றது.

சதாம்: வீரனுக்கு சிறையும் சிம்மாசனம்.. பலவானுக்கு பதுங்கு குழியும் பஞ்சுமெத்தை.

புஸ்: தண்ணீர் குடிக்க மறுக்கிறாயாமே ஏன்?

சதாம்: பெற்றோல் குடிக்கவந்த பேய்கள் ஓழியும் வரை நான் தண்ணீர் குடிப்பதில்லை..

புஸ்: நாங்கள் ஒரு நாயைக் கொல்வதாயினும் தண்ணீர் கொடுத்து விசாரணை வைத்துத்தான் கொல்வோம்.

சதாம்: ஆ! தெரியும். எத்தர்கள் சித்தர்களாக நடிக்க எடுக்கும் வழிகளில் இதுவும் ஒன்று. ஏற்கனவே எழுதப்பட்ட தீர்;ப்புக்கு ஒப்புக்கு ஒரு விசாரணை.. நன்று நன்று..

புஸ்: எப்படியும் கடைசியாய் உன்னைக் கண்டுபிடித்து விட்டோம் பார்த்தாயா?

சதாம்: நீ தேடிவந்தது என்னையா, பேரழிவு ஆயுதத்தையா? எனக்கு நன்கு தெரியும் நீ தேடிவந்தது என்னையல்லவென்று.

புஸ்: உன்னிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்று எனக்கு எப்போதோ தெரியும். உலகிற்கே அதை சப்ளை செய்வதே நாங்கள் தானே. நாங்கள் உனக்குக் கொடுக்காது எப்படி அது உனக்குக்கிடைக்கும். நான் தேடிவந்தது பேரழிவு ஆயுதங்களையல்ல.. ஆனால் உன்னையும் தேடி வரவில்லை.

சதாம்: தெரியும்.. நீ என்னைத் தேடி வரவில்லை. நீ எண்ணையைத் தேடிவந்தாய்.

புஸ்: பேசாமல் எண்ணையை எம்மிடம் கொடுத்துவிட்டிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. எமது ஆயுத பலத்தைப் பார்த்தாயா? நகத்தை வெட்டுவதை போல் உன்னை வெட்டிவிடுவேன்.

சதாம்: நகத்தை விடு. முகத்தைப் பார்த்தாயா? உனது அதிகாரிகள் எனக்கு முகச்சவரம் செய்தார்கள். எனது தாடிமயிரே அவர்களின் ஆயுதத்திற்கு கட்டுப்படவில்லை. மீளவும் வளர்ந்துவிட்டது. கேவலம் உனது ஆயுதத்திற்கு எனது மசிரே அடங்கவில்லை.. நானா அடங்கப்போகிறேன்?

புஸ்: இனி உங்கள் முஸ்லிம்களின் கொட்டம் அடங்கிவிடும்.

சதாம்: ஆ! கட்டிப்போட்டுவிட்டு கனக்கக் கதைக்கிறாய். இதை என் தம்பி பின்லாடன் கேட்டிருக்க வேண்டும். தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்திருப்பான். எனது ஐந்தாவது மனைவியின் ஆறாவது குழந்தை கேட்டிருக்கவேண்டுமிதை விiளாட்டுத் துப்பாக்கியால் அடித்தே கொண்டிருப்பான்.

சதாம்: ஒரு மன்னனான நீ, கேவலம், ஒரு குடிசையில் எலிப்பொந்து போன்ற பதுங்குகுழியில் வாழ்ந்தது வெட்கமாக இல்லை.

புஸ்: முட்;டாள். நான் பிறந்ததே இதே ஊரில் உள்ள ஒரு குடிசையில்தான்.. நான் பிறக்கும் போது பிச்சைக்காரனாக ஏழையாகத் தான் பிறந்தேன். எனக்கு எதுவும் நட்டமில்லை. யாருக்கும் இறுதியாகச் சொந்தமாவது ஆறுக்கு இரண்டு அடி நிலம்தான். நான் கொஞ்சம் உயரமென்றபடியால் ஏழுக்கு இரண்டடி குழியைத் தெரிவு செய்தேன் அதிலென்ன தவறு.

புஸ்: விரைவில் நீதி விசாரணைக்குத் தயாராக இரு.

சதாம்: நான் என்ன தவறு செய்தேன். ரோசமுள்ள ஒரு நாட்டுத் தலைவன் செய்ததைத் தான் நானும் செய்தேன். கேவலம் எறும்பு கூட தன்னை மிதிப்பவனைக் கடித்துவிட்டுத்தான் இறக்கும்.. நான் வீரன்.

புஸ்: நீ ஈராக்கிய மக்களை வகை தொகையின்றி கொலைசெய்தாய்?

சதாம்: நீ யுத்தம் என்ற பெயரில் எத்தனை குழந்தைகளைக் கொலை செய்தாய். நீ விதித்த பொருளாதாரத் தடையால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஈராக்கில் இறந்தார்களே, அதற்கு உனக்கு யார் தண்டனை தருவது?

புஸ்: நாங்கள் காரணமின்றி எதையும் செய்யமாட்டோம். ஒப்புக்காவது ஒரு விசாரணை வைப்போம்.

சதாம்: முட்டாள் நீ மட்டும் இப்போது கைதுசெய்யும் முஸ்லிம்களை எங்கே விசாரிக்கிறாய்? குவற்றனமா சிறையில் போட்டு யாரும் பார்க்க முடியாதபடி வைத்திருக்கிறாயே! அவர்கள் மீது விசாரணையுமில்லை. எங்கேயென்ற விலாசமுமில்லை.

புஸ்: ஜனநாயகத்தை குழிதோன்றிப் புதைத்துவிட்டு சர்வாதிகார ஆட்சி நடத்தியுள்ளாய்.

சதாம்: நீ மட்டும் என்னசெய்தாய். 85 வீதமான அமெரிக்கர்கள், மற்றும் உலகிலுள்ள மூன்றில் இரண்டு மக்கள், ஏன் ஐ.நா சபையே - ஈராக் யுத்தத்தை எதிர்க்கும் போதும், நீ யுத்தம் நடத்தினாயே. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

புஸ்: நீ பல பெண்களை சின்ன வீடாக வைத்திருக்கிறாய்.!

சதாம்: அதுதான் உங்களுக்கு எரிச்சல். நீங்கள் சின்னவீடு செற்றப் செய்தால் உடனே அமெரிக்கப் பத்திரிகைகள் அதை பெரிதாக எழுதிவிடும் என்ற பயம். கிளிண்டன், மோனிக்கா பிரச்சினையிலிருந்து தப்பத்தானே என் மீது யுத்தம் தொடுத்தார். மறந்துவிட்டாயா?

புஸ்: குவைத் மீது நீ தாக்குதல் நடத்தியது தவறு?

சதாம்: ஆ! அதைக் கேட்க உனக்கென்ன உரிமை.. நீ எண்ணைக்காக ஈராக் மீது தாக்குதல் நடத்தலாம், நான் அதே எண்ணைக்காக குவைத் மீது தாக்குதல் நடத்தக் கூடாதோ?

புஸ்: ஈரான் மீது நீ தாக்குதல் நடத்தியது குற்றம்!

சதாம்: ஆ! ஏவுகணைகளை எமக்குத் தந்து ஏவிவிட்டாய். சண்டைக் கோழிகளாய் நாம் சிண்டைப் பிடித்தோம். அண்டை நாட்டின் துண்டைப் பிடிக்க... காயங்கள் எமக்கு ஆதாயங்கள் உமக்கு..

புஸ்: எப்படி என் சமார்த்தியம்?

சதாம்: முட்டாள்.. எத்தனை நாள் தான் நாம் முட்டாளாக இருப்போம். நீ கொடுத்த ஆயுதங்கள்.. உனது விமானம்.. உனது குண்டுகளை வைத்து நாம் எங்களுக்குள் அடிபட்டது பழைய கதை. புதிய கதை உனது விமானம் உனது குண்டுகளை வைத்து உனது நாட்டில் செப்டம்பர் தாக்குதலை நடத்தியதை மறந்துவிட்டாயா?

புஸ்: அமெரிக்கர்களிடம் மன்னிப்புக் கேட்டு பிழைத்துப் போகும் வழியைப் பார். ஆணவமாகக் கதைத்து கோபத்தைக் கிளறாதே?

சதாம்: நீ யார் என்னை விசாரிக்க? ஐ.நா சபையிலே அனுமதி பெற்றாயா? பாதுகாப்பு கவுன்சிலில் பெமிசன் பெற்றாயா? உனக்கென்ன உரிமை என்னை விசாரிக்க?

புஸ்: ஆ! ஐ.நா சபை..! எனது வீட்டோ உரிமையை வைத்தே அதனை மடக்கிவிட்டேன்.

சதாம்: ஆனால் நேட்டோ அமைப்பு சிதறப்போகிறதே பார்த்தாயா? ஈராக் மீது நீ தாக்குதல் தொடுத்ததால் பிரான்ஸ் ஜேர்மனி உனது நேட்டோ அமைப்பை விட்டு விலகி ஐரோப்பிய யுூனியன் அமைப்பைத் தொடரப் போகிறார்களே கவனித்தாயா?

புஸ்: அதற்காகத் தானே - ஈராக் புனர் நிர்மானத்திற்கான ஒப்பந்த வேலைகளை அவர்களிடம் நான் கொடுக்காமல் விட்டேன்..

சதாம்: புனர்நிர்மாணம்.. ஆகா நல்ல பெயர். எண்ணைக் கொள்ளைக்கு நீ வைத்த பெயர். அவர்களிடம் நான் வாங்கிய கடனுக்காக அவர்கள் ஈராக்கின் எண்ணையை எடுக்கப் போகிறார்களே அப்போது நீ என்ன செய்வாய்?

புஸ்: சரி சரி நீ ஒளித்துவைத்துள்ள பில்லியன் கணக்கான டொலர்களை என்னிடம் கொடுத்துவிடு.. அதை அவர்களிடம் கொடுத்துவிடுகிறேன். அல்லது எனது அடுத்த தேர்தல் செலவுக்காகவது பயன்படுத்தலாம்.. உன்னை மன்னித்துவிடுகிறேன்.. எங்காவது ஒரு நாட்டில் உனக்கு அடைக்கலம் தர முயற்சிக்கிறேன்.

புஸ்: நான் எண்ணை விற்றுப் பிழைப்பவன். நீ நினைப்பதைப் போல் என்னை விற்றுப்பிழைப்பவனல்ல.

(அப்போது அமெரிக்க இடைக்கால சபைத் தலைவர் போல் பிறைமர் ஓடி வருகின்றார்.)

போல்: ஐயா ஜனாதிபதி புஸ் அவர்களே! நாம் மோசம் போய்விட்டோம். இன்னொரு சதாமும் பிடிபட்டிருக்கி;ன்றார்?

புஸ்: என்ன சொல்கிறாய்?

போல்: ஆம் ஜனாதிபதி! சதாம் மாதிரி பத்துப் பேர் இருக்கின்றார்களாம். அதில் ஒருவர் தான் இவர். இன்னும் ஒருவரும் பிடிபட்டிருக்கின்றார். அவருக்கு சதாம் மாதிரி மச்சம் எல்லாம் இருக்கின்றதாம்.

புஸ்: அப்படியென்றால் இவனின் எச்சில் சதாமின் எச்சிலுடன் டி.என்.ஏ பரிசோதனையில் ஒத்துப் போனதாகச் சொன்னாயே?

போல்: ஐயா, அது.. முன்னர் நாம் எடு;த்த சாம்பிள் எல்லாம் உண்மையான சதாமின் சாம்பிள்கள் அல்ல. போலிச் சதாமின் சாம்பிள்களைத் தான் நாம் எடுத்து வைத்துள்ளோம். அவற்றோடு தான் இப்போது எல்லாம் ஒத்துப்போகின்றன.

புஸ்: அப்போது நாம் இப்போது பிடித்து வைத்துள்ளவர்களின் யார்தான் சதாம்?

போல்: அது அந்த அல்லாவிற்குத் தான் வெளிச்சம். ஜனாதிபதி அவர்களே ஏன் நடுங்குகிறீர்கள்?

புஸ்: இல்லை உடனடியாக இங்கிருந்து போக வேண்டும். விமானத்தை ஆயத்தப்படுத்தும்.

போல்: நாங்கள் இரவில் விமானத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு வந்தோம். இப்போது போவது ஆபத்து.

புஸ்: ஏன் இப்போது விளக்குகளை அணைத்தால் அணைபடாதோ?

போல்: ஜனாதிபதி அவர்களே இப்போது பகலாகிவிட்டது. விளக்குகளை அணைத்தாலும் பயனில்லை. சதாம் தொழப்போவதாகக் கூறி அரைமணி நேரம் உங்களை தாமதிக்க வைத்தது இதற்காகத்தான் போலும்..

புஸ்: கடவுளே அப்போ நான் இங்கேயே ஈராக்கிலே மடிவதா?

போல்: இரவு இருட்டுப் படும் வரை நாம் இங்கேதான் இருக்க வேண்டும்.

புஸ்: இங்கே பாதுகாப்பாக இருக்க ஏதும் இடம் உள்ளதோ?

போல்: ஒரு இடம் இருக்கு?

புஸ்: எது எங்கை. உடனே என்னை அங்கு கொண்டுபோங்கள்

போல்: அது நாங்கள் கைது செய்தபோது சதாம் ஒளித்திருந்த - அந்த சிறிய எலிப்பொந்து போன்ற அந்த பதுங்கு குழிதான். அங்குதான் யாரும் இப்போது வரமாட்டார்கள். யாரையும் சந்தேகப்பட மாட்டார்கள்.

புஸ்: சரி பரவாயில்லை அங்கேயே போய் இருட்டும் மட்டும் இருப்பம்.. வாரும்..


நன்றி: ஈழமுரசு (கனடா)
Reply
#15
கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிறுவனைகப் பார்த்து தகப்பனன் கேட்டார் ஏன் ஆறுதலாக கடிதம்
எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று
அதற்கு சிறுவன் சொன்னான்
இந்த கடிதம் நான் அம்மம்மாவுக்கு
எழுதுகிறேன் அம்மம்மாவால் கடிதத்தை வேகமாக வாசிக்கமுடியாது அதனால்தான் ஆறுதலாக எழுதுகிறேன்
Reply
#16
நீதவான் திருடனைப்பார்த்து கேட்டார் ஏன் அந்த வீட்டில்
திருடினாய் என்று அதற்கு திருடன் சொன்னான் நல்வரவு என்று வீட்டின் கதவில் எழுதியிருந்தது என்று
Reply
#17
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
ரஸ்யா நகைச்சுவை

மரதன் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தில் வந்த
மகனைப்பாhர்த்து தாய் கேட்டார்
நாலாம் இடத்தில் வந்தது யார் என்று மகன் சொன்னான் மூவர்மட்டுமே பங்குபற்றியிருந்தோம்
என்று
Reply
#19
எங்கள் கைகள் கலப்பையைப்பிடிக்காவிட்டால் உங்கள் கையால் அகப்பையைப் பிடிக்க முடியாது
Reply
#20
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->எங்கள் கைகள் கலப்பையைப்பிடிக்காவிட்டால் உங்கள் கையால் அகப்பையைப் பிடிக்க முடியாது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது நல்ல நகைச்சுவை
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)