05-03-2005, 12:29 AM
நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்போறியாக்கிறதா? உற்சாகப்படுத்துகிறதா? நல்லதொரு தலைப்பு ஆ ஊ என்பதற்கிடையில் இணையத்துக்கு சென்று பார்த்து செய்தி சொல்லும் காலமிது...சிறிலங்காவில் இருக்கும் பெரும்பாலனா வானொலிகளுக்கு பிரதேச ரீதியான செய்தியாளர்கள் உள்ளனர். அனால் எங்கள் நாட்டு (கனடா) தமிழ் வானொலிகளுக்கு தனியான செய்தியாளர்கள் இல்லை காரணம் தொழிநுட்ப வசதி. அவர்கள் இணையத்தில் வரும் செய்திகளை அப்படி பிரதி செய்து போடுகின்றனர். இதற்க்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லாம் என்று நினைக்கின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர். புதினம் இல்லை என்பதால் அவர்களால் செய்தியை சுயாதீன மாக வெளியிட முடியவில்லை இது தொழிநுட்ப்பத்தால் வந்த சோம்பொறித்தனமாகும். அடுத்து தொலை பேசியை எடுத்துக் கொண்டால்... இப்போது மக்களால் தொலைபேசிகள் தொல்லை பேசிகள் என்று அழைக்கப்படுகின்றது. காரணம் குடும்பச்சண்டைமுதல் குழுச்சண்டைகள் வரை தொலைபேசியால் தான் வருகின்றது. அதை விட காதலர்களைக் கூட இது சோம்பொறிகளாக்குகிறது. பொதுவாக எமது நாட்டில் காதலர்கள் பூங்கா மற்றும் வேறு இடங்களில் அடிக்கடிச்சந்திப்பார்கள் ஆனால் இங்கு இரவு பத்து பதினொரு மணிக்கு பிறகு நித்திரை கூட கொள்ளாமல் தொலைபேசியில் கதைப்பாங்கள்.. இது எதனால்.. தொலை பேசி இல்லை எனில் அவர்கள் நேரடியாக சென்று தமது அன்பு வார்த்தைகளை பகிர்ந்து கொள்வார்களே! அடுத்து இணைய அங்காடி மனிதனைசொம்பொறியாக்ககும் மிகப்பெரும் சக்தி எனலாம். முன்பு நேரடியாக வார்த்தக நிலையத்தக்கு சென்று தமக்கு பிடித்த பொருட்களை வாங்கு வார்கள் இப்போது இணையத்தில் சென்று விண்ணப்பித்து விட்டு கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தி விட்டு வீட்டிலே காத்திருக்கின்றனர்.. இது எதனால் தொழிநுட்பத்தால் தானே!
அதை விட் வீட்டுக்குரிய பாதுகாப்பு ஓலி பெருத்துவது என்பது மனிதன் தனது பொருட்கள் மீது அக்கறைப்படாமலிக்க வைக்கும் ஒரு பொருள் எனலாம்... அது பொருத்தா விட்டால் வீட்டில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் போன வேலைகளை விரைவாக முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள் ஆனால் அது பொருத்திய பின் வீதியில் நிற்போர் வருவோர் ஏன் அங்கால நாலு வீட்டுக்கு போய் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 5 மணிநேரத்தில் செய்கின்றனர்.. இது அவர்கள் சோம்பொறித்தனத்தை காட்டுகின்றது... இதெல்லாத்தையும் தெரிந்து கொண்டு எதிர்தரப்பில் இருக்கும் வாதிகள் "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற மாதிரி பேச வெளிக்கிட்டாச்சு எதையாவது பேசுவோம் என்று பேசிக் கொண்டீக்கின்றார்கள்.... அடுத்து நம் வாழும் நாடுகளில் ஒரு 100 மீற்றர் எவராவது நடக்கின்றீர்களா? எதற்கெடுத்தாலும் மகிழுந்து அல்லது பேரூந்து என்று நாங்கள் போய் கொண்டே இருக்கின்றோம் வளந்து வரும் விஞ்ஞானத்தால் மனிதன் வேலையின்றி சோம்பொறியாய் இருக்கபோகிறான்....அதன் காராணத்தால் உலகில் சனத்தொகை அதிகரிக்கப்போகிறது.. முதல் ஒரு நண்பர் எதிர்வு கூறியிருந்தார் தொழிநுட்ப வளர்ச்சியால் வேலையில்லாப்பிரச்சினை ஏற்ப்படாது என்று... அனால் அது கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜத்தில் அப்படியல்ல தொழிநுட்ப வளர்ச்சியால் தொழிவாய்பு அருகி வருகிறது குறிப்பிட்டு சொல்லப்போனால்..ஒரு 10 பேர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்கிறது அப்படி செய்யும் போது 10 பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர்... இதனால் என்ன ஏறப்படும்?...ஆளில்லா விமானங்கள் (விமானியற்ற) மற்றும் மின்னியல் தொடரூந்த என்பவற்றால் எத்தனை பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர் எனபது எதிர்தரப்பில் இருக்கும் சோம்பொறிகளுக்கு தெரியவில்லை போலும்....அது தெரியமல் போவதற்க்கும் அவர்களுக்கு தொழிநுட்பம் தந்த சோம்பொறித்தனமே காரணம் ஏனெனில் எதையும் தமது பாட்டில் ஆராயும் திறன் அற்றவர்கள் தான் தொழிநுட்பத்தை நம்பி சோம்பொறிகளாய் உள்ளனர்...
ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு நீங்கள் உங்கள் தொழிநுட்பத்தையே புதியன எனக் கொண்டால் அது முத்தோரின் பிழையல்ல.. அதே நேரம் இந்த வார்த்தையை நான் எதிர்ப்பவன் காரணம் இந்த வார்ததை எதற்காக சொல்லப்படுகின்றது? பழையன கழிதல் என்றால் கட்டிய பழைய மனைவியையோ! அல்லது பெற்றவர்கள் வயதான பின் அவர்கள் பழையவர்கள் என்று ஒதுக்குவதற்காய் சொல்லப்பட்டதா? அல்லது ஏகபத்தினி விரதன் என்று பழைய காலத்தில் இருந்து வஇப்போது வரை வரும் அந்த தத்துவத்தை புதியதாக்கி உங்கள் விஞ்ஞானயுகத்தில் இன்றொன்று நாளை ஒன்று என்று வாழ்வதா?
இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது. சுனாமி வந்ததை தொழிநுட்பம் கண்டு பிடித்ததாம்.. ஆமாம் கண்டு பிடித்ததால் தான் இத்தனையாயிரம் பேர் இறந்தனரோ? நான் இங்கு நன்மை தீமைகளை பற்றி பேச வராததால் சிலவற்றைபற்றி விரிவாக பேசமுடியாமல் உள்ளது. நாங்கள் நுனி மரத்தில் இரந்து மரத்தை வெட்டுவதற்க்கு என்று ஆராயமல் உங்களை போல் தொழிநுட்பத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல ஆனால் நுனி மரத்தில் இருந்துதான் வெட்ட வேண்டும் என்ற கட்டாயம்் அதனால் தான் வெட்டுகின்றோம்...தொழிநுட்பத்தால் சோம்பொறிகளாய் இருப்பதிலும் நுனி மரத்தில் இருந்து அடிமரத்தையாவது வெட்டுகின்றோமே! நீங்கள் மரத்தில் இலை புடுங்குவதற்க்கு கூட தொழிநுட்பத்தை நம்பியிருக்கின்றீர்களே! இது வெட்க கேடாய் தெரியவில்லையா? இது சோம்போறித்தனமாய் தெரியவில்லையா?
விமானம் ஏறி மட்டுந்தால் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா? அதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்ப்பட வில்லை ஆனால் உங்கள் தொழிநுட்பம் தந்த விமானத்தால் ஓசோன் படலம் ஓட்டையாக அதிலிருந்து நச்சு கதிர்கள் வெளிவருகின்றது என்பது உங்களுக்கு எதிர்தரப்பினர்கு தெரியமல் போனது அவர்களின் துரதிஸ்மே! அதைவிட ஜப்பானில் உங்கள் விஞ்ஞானம் தந்த அணுவாயுதத்தால் இன்று எத்தனை பேர் குறைபாடுடன் வாழ்கின்றனர் என்பதும் இவர்களுக்கு தெரியவில்லை..என்று கூறி
தொழிநுட்பம் மனிதனை எந்த வகையிலும் உற்சாகப்படுத்த வில்லை மாறாக அது சோம்பொறியாக்குகிறது என் ஆணித்தரமாக கூறி விடைபெறுகின்றேன்
நன்றி வணக்கம்
அதை விட் வீட்டுக்குரிய பாதுகாப்பு ஓலி பெருத்துவது என்பது மனிதன் தனது பொருட்கள் மீது அக்கறைப்படாமலிக்க வைக்கும் ஒரு பொருள் எனலாம்... அது பொருத்தா விட்டால் வீட்டில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் போன வேலைகளை விரைவாக முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள் ஆனால் அது பொருத்திய பின் வீதியில் நிற்போர் வருவோர் ஏன் அங்கால நாலு வீட்டுக்கு போய் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 5 மணிநேரத்தில் செய்கின்றனர்.. இது அவர்கள் சோம்பொறித்தனத்தை காட்டுகின்றது... இதெல்லாத்தையும் தெரிந்து கொண்டு எதிர்தரப்பில் இருக்கும் வாதிகள் "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற மாதிரி பேச வெளிக்கிட்டாச்சு எதையாவது பேசுவோம் என்று பேசிக் கொண்டீக்கின்றார்கள்.... அடுத்து நம் வாழும் நாடுகளில் ஒரு 100 மீற்றர் எவராவது நடக்கின்றீர்களா? எதற்கெடுத்தாலும் மகிழுந்து அல்லது பேரூந்து என்று நாங்கள் போய் கொண்டே இருக்கின்றோம் வளந்து வரும் விஞ்ஞானத்தால் மனிதன் வேலையின்றி சோம்பொறியாய் இருக்கபோகிறான்....அதன் காராணத்தால் உலகில் சனத்தொகை அதிகரிக்கப்போகிறது.. முதல் ஒரு நண்பர் எதிர்வு கூறியிருந்தார் தொழிநுட்ப வளர்ச்சியால் வேலையில்லாப்பிரச்சினை ஏற்ப்படாது என்று... அனால் அது கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜத்தில் அப்படியல்ல தொழிநுட்ப வளர்ச்சியால் தொழிவாய்பு அருகி வருகிறது குறிப்பிட்டு சொல்லப்போனால்..ஒரு 10 பேர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்கிறது அப்படி செய்யும் போது 10 பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர்... இதனால் என்ன ஏறப்படும்?...ஆளில்லா விமானங்கள் (விமானியற்ற) மற்றும் மின்னியல் தொடரூந்த என்பவற்றால் எத்தனை பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர் எனபது எதிர்தரப்பில் இருக்கும் சோம்பொறிகளுக்கு தெரியவில்லை போலும்....அது தெரியமல் போவதற்க்கும் அவர்களுக்கு தொழிநுட்பம் தந்த சோம்பொறித்தனமே காரணம் ஏனெனில் எதையும் தமது பாட்டில் ஆராயும் திறன் அற்றவர்கள் தான் தொழிநுட்பத்தை நம்பி சோம்பொறிகளாய் உள்ளனர்...
ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு நீங்கள் உங்கள் தொழிநுட்பத்தையே புதியன எனக் கொண்டால் அது முத்தோரின் பிழையல்ல.. அதே நேரம் இந்த வார்த்தையை நான் எதிர்ப்பவன் காரணம் இந்த வார்ததை எதற்காக சொல்லப்படுகின்றது? பழையன கழிதல் என்றால் கட்டிய பழைய மனைவியையோ! அல்லது பெற்றவர்கள் வயதான பின் அவர்கள் பழையவர்கள் என்று ஒதுக்குவதற்காய் சொல்லப்பட்டதா? அல்லது ஏகபத்தினி விரதன் என்று பழைய காலத்தில் இருந்து வஇப்போது வரை வரும் அந்த தத்துவத்தை புதியதாக்கி உங்கள் விஞ்ஞானயுகத்தில் இன்றொன்று நாளை ஒன்று என்று வாழ்வதா?
இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது. சுனாமி வந்ததை தொழிநுட்பம் கண்டு பிடித்ததாம்.. ஆமாம் கண்டு பிடித்ததால் தான் இத்தனையாயிரம் பேர் இறந்தனரோ? நான் இங்கு நன்மை தீமைகளை பற்றி பேச வராததால் சிலவற்றைபற்றி விரிவாக பேசமுடியாமல் உள்ளது. நாங்கள் நுனி மரத்தில் இரந்து மரத்தை வெட்டுவதற்க்கு என்று ஆராயமல் உங்களை போல் தொழிநுட்பத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல ஆனால் நுனி மரத்தில் இருந்துதான் வெட்ட வேண்டும் என்ற கட்டாயம்் அதனால் தான் வெட்டுகின்றோம்...தொழிநுட்பத்தால் சோம்பொறிகளாய் இருப்பதிலும் நுனி மரத்தில் இருந்து அடிமரத்தையாவது வெட்டுகின்றோமே! நீங்கள் மரத்தில் இலை புடுங்குவதற்க்கு கூட தொழிநுட்பத்தை நம்பியிருக்கின்றீர்களே! இது வெட்க கேடாய் தெரியவில்லையா? இது சோம்போறித்தனமாய் தெரியவில்லையா?
விமானம் ஏறி மட்டுந்தால் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா? அதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்ப்பட வில்லை ஆனால் உங்கள் தொழிநுட்பம் தந்த விமானத்தால் ஓசோன் படலம் ஓட்டையாக அதிலிருந்து நச்சு கதிர்கள் வெளிவருகின்றது என்பது உங்களுக்கு எதிர்தரப்பினர்கு தெரியமல் போனது அவர்களின் துரதிஸ்மே! அதைவிட ஜப்பானில் உங்கள் விஞ்ஞானம் தந்த அணுவாயுதத்தால் இன்று எத்தனை பேர் குறைபாடுடன் வாழ்கின்றனர் என்பதும் இவர்களுக்கு தெரியவில்லை..என்று கூறி
தொழிநுட்பம் மனிதனை எந்த வகையிலும் உற்சாகப்படுத்த வில்லை மாறாக அது சோம்பொறியாக்குகிறது என் ஆணித்தரமாக கூறி விடைபெறுகின்றேன்
நன்றி வணக்கம்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&